Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
காய்கறிகளை வாங்குவது எப்படி?
+2
பானுஷபானா
rammalar
6 posters
Page 1 of 1
காய்கறிகளை வாங்குவது எப்படி?
சேப்பங்கிழங்கு:
முளைவிட்டதுபோல் ஒரு முனை
நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில்
சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்
போது உருண்டையாக இருப்பனவற்றைப்
பார்த்து வாங்குங்கள்.
கருணைக் கிழங்கு:
கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்
போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது.
வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன்
உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பெரிய வெங்காயம்:
பெரிய வெங்காயம் வாங்கும்போது
அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப்
பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க
வேண்டும்.
பச்சை மிளகாய்:
நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம்
குறைவாக இருக்கும். சற்றே குண்டான
பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும்.
இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும்
பிரமாதமாக இருக்கும்.
பீர்க்கங்காய்:
பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல்
காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி
பார்த்து வாங்க வேண்டும்.
கத்தரிக்காய்:
பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல்
சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து
வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின்
தோல் ரஃப்பாக இருக்கும்.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
புடலங்காய்:
புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான்
வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதி
குறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும்
இருக்கும்.
பரங்கிக்காய்:
பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே
இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து
வாங்குவதுதான் நல்லது.
-
தக்காளி:
நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து
வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த
பெங்களூரு தக்காளி கெடாது என்பதால்
நன்கு பழுத்த பழமாகவே பார்த்து
வாங்கலாம்.
-
வாழைத்தண்டு:
பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும்
வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார்
அதிகமாக இருக்கும் என்பதால் மேல்
பகுதியாகப் பார்த்து வாங்குங்கள்.
உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து
இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.
-
பீன்ஸ்:
பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன.
பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும்.
புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர்
விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல்
சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.
-
முள்ளங்கி:
முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால்
தோல் மென்மையாக இருக்க வேண்டும்.
அதுவே இளசு.
-
வெள்ளரி:
வெள்ளரிக்காயின் மேல் நகத்தால்
குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க
வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான்
விதைகள் குறைவாக இருக்கும்.
-
பாகற்காய்:
பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை
உருண்டையான ஷேப் காய்களை
வாங்குவதைவிட தட்டையான நீண்ட
காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.
-
சௌசௌ:
சௌசௌ வாங்கும்போது அதன் வாய்
போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள்
பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க
வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால்
காய் முற்றலாக இருக்கும் என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
-
வாழைப்பூ:
வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால்
பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில்
இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது
என்று அர்த்தம்.
-
இஞ்சி:
லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து
வருவது மாதிரியே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.
இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்
-
—————————————
>மாதங்கி
புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான்
வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதி
குறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும்
இருக்கும்.
பரங்கிக்காய்:
பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே
இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து
வாங்குவதுதான் நல்லது.
-
தக்காளி:
நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து
வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த
பெங்களூரு தக்காளி கெடாது என்பதால்
நன்கு பழுத்த பழமாகவே பார்த்து
வாங்கலாம்.
-
வாழைத்தண்டு:
பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும்
வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார்
அதிகமாக இருக்கும் என்பதால் மேல்
பகுதியாகப் பார்த்து வாங்குங்கள்.
உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து
இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.
-
பீன்ஸ்:
பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன.
பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும்.
புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர்
விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல்
சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.
-
முள்ளங்கி:
முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால்
தோல் மென்மையாக இருக்க வேண்டும்.
அதுவே இளசு.
-
வெள்ளரி:
வெள்ளரிக்காயின் மேல் நகத்தால்
குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க
வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான்
விதைகள் குறைவாக இருக்கும்.
-
பாகற்காய்:
பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை
உருண்டையான ஷேப் காய்களை
வாங்குவதைவிட தட்டையான நீண்ட
காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.
-
சௌசௌ:
சௌசௌ வாங்கும்போது அதன் வாய்
போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள்
பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க
வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால்
காய் முற்றலாக இருக்கும் என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
-
வாழைப்பூ:
வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால்
பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில்
இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது
என்று அர்த்தம்.
-
இஞ்சி:
லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து
வருவது மாதிரியே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.
இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்
-
—————————————
>மாதங்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும்..!
-
கோவைக்காய்:
பொரியல் செய்யப் பயன்படுத்தும்
கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில்
இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில்
ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது
உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான்
இருக்கும்.
-
முருங்கைக்காய்:
முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து
வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக
வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை
என்று தெரிந்து கொள்ளலாம்.
-
காலிஃப்ளவர்:
காலிஃப்ளவர் வாங்கும்போது பூக்களுக்கு இடையே
இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருப்பதாகப்
பார்த்து வாங்க வேண்டும். இதில்தான் காம்புகளும்
தடிமனாக இருக்காது.
-
மாங்காய்:
மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பாருங்கள்.
தேங்காயில் வருவது போலப் பெரிதாகச் சத்தம் வர
வேண்டும். அதில்தான் கொட்டை சிறிதாக இருக்கும்.
-
சர்க்கரை வள்ளிக் கிழங்கு:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கும்போது
ஆங்காங்கே அடிபட்டு கறுப்பாகி இருப்பதை
தவிர்த்து வாங்குங்கள். இது கசக்கும். உருண்டையான
கிழங்குகள்தான் அதிகம் இனிக்கும்.
-
பூண்டு:
பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே
தெரிவதையே வாங்க வேண்டும்.
-
அவரை:
நாட்டு அவரையைத் தொட்டுப் பார்த்து விதைகள்
பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும்.
இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக
இருக்காது.
-
உருளைக் கிழங்கு:
இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக
நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக்
கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர
வேண்டும்.
================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
பயனுள்ள தகவல் நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
பயனுள்ள தகவல் நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
Vikatan EMagazine
பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!
கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்தி...ரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்
பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!
கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்தி...ரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
Vikatan EMagazine
பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!
கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்தி...ரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்
பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!
கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்தி...ரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
Nisha wrote:Vikatan EMagazine
பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!
கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்தி...ரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்
படிப்பதற்கு நல்லாத்தான் இருக்கு ஆனால் அதை நாங்கள் சாப்பிட மாட்டோமே மனசிக்கு ஒரு மாதிரி இருக்குமே..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
பூச்சி அரித்திருக்கும் பகுதியை வெட்டி வீசி விட்டு கழுவி சமைக்கணும்!
கத்தரிக்காய் மட்டுமல்ல பயற்றங்காயிலும் கூட இம்மாதிரி பூச்சி உண்டல்லவா?
கண்ட இரசாயனங்கள் சேர்த்து பச்சைப்பசேலென இருக்கும் காய்களை விட இரசாயனம் சேராது வாடலாய் இருக்கும் காய்கள் நல்லது தானே!
கத்தரிக்காய் மட்டுமல்ல பயற்றங்காயிலும் கூட இம்மாதிரி பூச்சி உண்டல்லவா?
கண்ட இரசாயனங்கள் சேர்த்து பச்சைப்பசேலென இருக்கும் காய்களை விட இரசாயனம் சேராது வாடலாய் இருக்கும் காய்கள் நல்லது தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
இனி அப்படியே செய்கிறேன் அக்கா காய்கறிகள் எனக்கு அலாதிப்பிரியம் அதிலும் கத்தரி பீட்ரூட் பயற்றங்காய் அவரக்காய் கரட் அப்றம் கீரை வகை பொன்னாங்கண்ணி வல்லாரை முருங்கை இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்Nisha wrote:பூச்சி அரித்திருக்கும் பகுதியை வெட்டி வீசி விட்டு கழுவி சமைக்கணும்!
கத்தரிக்காய் மட்டுமல்ல பயற்றங்காயிலும் கூட இம்மாதிரி பூச்சி உண்டல்லவா?
கண்ட இரசாயனங்கள் சேர்த்து பச்சைப்பசேலென இருக்கும் காய்களை விட இரசாயனம் சேராது வாடலாய் இருக்கும் காய்கள் நல்லது தானே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
எனக்கும் இந்த காய் கீரையெல்லாம் ரெம்ப பிடிக்குமே..
அதிலும் முளைக்கீரை, முருங்கை கீரை சமைத்தால் வேர கறி வேண்டாம். பொன்னாங்கன்னிகீரையில் சொதி வைத்தால் சுப்பராக இருக்கும்ல..
வல்லாரை கீரை சம்பல் செய்வோம். நேற்று கடையில் கண்டு வாங்கி வந்திருக்கேன்
கீரைகள் இங்கே ரெம்ப விலை. ஆனாலும் கீரைகளை கண்டால் வாங்காமல் வர மாட்டேன். அகத்தி கீரை உட்பட எல்லா கீரையும் பிடிக்கும்
அதே போல் காய்களில் பயற்ரங்காய், கத்தரிக்காய், அவரை, பீட்றுட் என உங்களுக்கு பிடித்த காய் எல்லாம் பிடிக்கும்.
பிடிக்காத காய் புடலங்காய்..
தானியங்களில் உளுந்து சேர்த்து செய்யுமெல்லா உணவும் பிடிக்கும்.
எள்ளுமெள் சேர்ந்த உணவும் பிடிக்காதுப்பா!
அதிலும் முளைக்கீரை, முருங்கை கீரை சமைத்தால் வேர கறி வேண்டாம். பொன்னாங்கன்னிகீரையில் சொதி வைத்தால் சுப்பராக இருக்கும்ல..
வல்லாரை கீரை சம்பல் செய்வோம். நேற்று கடையில் கண்டு வாங்கி வந்திருக்கேன்
கீரைகள் இங்கே ரெம்ப விலை. ஆனாலும் கீரைகளை கண்டால் வாங்காமல் வர மாட்டேன். அகத்தி கீரை உட்பட எல்லா கீரையும் பிடிக்கும்
அதே போல் காய்களில் பயற்ரங்காய், கத்தரிக்காய், அவரை, பீட்றுட் என உங்களுக்கு பிடித்த காய் எல்லாம் பிடிக்கும்.
பிடிக்காத காய் புடலங்காய்..
தானியங்களில் உளுந்து சேர்த்து செய்யுமெல்லா உணவும் பிடிக்கும்.
எள்ளுமெள் சேர்ந்த உணவும் பிடிக்காதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
Nisha wrote:எனக்கும் இந்த காய் கீரையெல்லாம் ரெம்ப பிடிக்குமே..
அதிலும் முளைக்கீரை, முருங்கை கீரை சமைத்தால் வேர கறி வேண்டாம். பொன்னாங்கன்னிகீரையில் சொதி வைத்தால் சுப்பராக இருக்கும்ல..
வல்லாரை கீரை சம்பல் செய்வோம். நேற்று கடையில் கண்டு வாங்கி வந்திருக்கேன்
கீரைகள் இங்கே ரெம்ப விலை. ஆனாலும் கீரைகளை கண்டால் வாங்காமல் வர மாட்டேன். அகத்தி கீரை உட்பட எல்லா கீரையும் பிடிக்கும்
அதே போல் காய்களில் பயற்ரங்காய், கத்தரிக்காய், அவரை, பீட்றுட் என உங்களுக்கு பிடித்த காய் எல்லாம் பிடிக்கும்.
பிடிக்காத காய் புடலங்காய்..
தானியங்களில் உளுந்து சேர்த்து செய்யுமெல்லா உணவும் பிடிக்கும்.
எள்ளுமெள் சேர்ந்த உணவும் பிடிக்காதுப்பா!
மிக்க மகிழ்ச்சி அக்கா இங்க எனது நண்பர்கள் சிலர் எப்ப பார்த்தாலும் கோழி ஆடு மாடு இதைத்தான் சாப்பிடுவார்கள் நான் கோழி வாரத்தில் ஒரு நாள்தான் சாப்பிடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
அனைத்தும் பயனுள்ளவைகள் அண்ணா
காய்க்கறி மார்கட் போனால் பார்த்துக்கொண்டே ஒரு வட்டமிடுவேன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பார்ப்பதற்கு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
எல்லாம் வாங்கி உண்போம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
:joint:நண்பன் wrote:
அனைத்தும் பயனுள்ளவைகள் அண்ணா
காய்க்கறி மார்கட் போனால் பார்த்துக்கொண்டே ஒரு வட்டமிடுவேன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பார்ப்பதற்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்.
எங்கள் வீட்டில் எப்சிக்கும் எங்களுக்கும் காய்கறி மரக்கறி கீரை சாப்பாடு எனில் ரெம்ப பிடிக்கும். இறைச்சி மீன் தேவைபடாது. ஆனால் கப்ரியேலுக்கு பத்து மரக்கறி இருந்தாலும் இறைச்சி சமைக்கவில்லையா என கேட்க்பார். என் அப்பாவுக்கும் மரக்கறி சாப்பாடு எனில் சமிபாடைய கஷ்டம் என்பார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்
எனக்கு பொதுவாக இறைச்சி ரெம்ப பிடிக்காது. மீனிலும் எல்லாம் பிடிக்காது. கருவாடு வகை ஓக்கே. ஆனால் மரக்கறி சாப்பாடு எனில் ரெம்ப ரெம்ப பிடிக்குமே!
அதிலும் காய்களிலேயே நான்கைந்து விதமாய் செய்து தயிர், வடை பப்படம், மோமிளகாய் என சாப்பிட்டால் அதுதான் அமிர்தம் என்பேன்!
எங்கள் வீட்டில் எப்சிக்கும் எங்களுக்கும் காய்கறி மரக்கறி கீரை சாப்பாடு எனில் ரெம்ப பிடிக்கும். இறைச்சி மீன் தேவைபடாது. ஆனால் கப்ரியேலுக்கு பத்து மரக்கறி இருந்தாலும் இறைச்சி சமைக்கவில்லையா என கேட்க்பார். என் அப்பாவுக்கும் மரக்கறி சாப்பாடு எனில் சமிபாடைய கஷ்டம் என்பார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்
எனக்கு பொதுவாக இறைச்சி ரெம்ப பிடிக்காது. மீனிலும் எல்லாம் பிடிக்காது. கருவாடு வகை ஓக்கே. ஆனால் மரக்கறி சாப்பாடு எனில் ரெம்ப ரெம்ப பிடிக்குமே!
அதிலும் காய்களிலேயே நான்கைந்து விதமாய் செய்து தயிர், வடை பப்படம், மோமிளகாய் என சாப்பிட்டால் அதுதான் அமிர்தம் என்பேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
எங்கள் வீட்டில் தினமும் ஏதாவது ஒரு காய்கறி இருக்கும். முக்கியமாக மீன் இருக்கும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
ராகவா wrote:
எல்லாம் வாங்கி உண்போம்...
இங்கு யார் கடக்காரன் யாரு கடன் காரன்னே தெரியலப்பா யாரோ திருடுற மாதிரியும் இருக்கு என் கண்ணையே என்னால் நம்ப முடியலப்பு ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
ரிப்பீட்டு !_ahmad78 wrote:எங்கள் வீட்டில் தினமும் ஏதாவது ஒரு காய்கறி இருக்கும். முக்கியமாக மீன் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
எங்க வீட்டில் டெய்லி மீன் இருக்காது, மீட் இருக்காது, ஆனால் காய் வகைகளும் , சலாட்டும், பழங்களும் இருக்கும்,!
மீன் மாதம் ஓரிரு தடவைதான் சமைக்க முடியுது. நான் இருக்கும் இடத்தில்பிரெஷ் மீன் வாங்க முடியாது. 30 கி.மீ போனால் வியாழன், வெள்ளியில் மட்டும் பிரெஷ் மீன் வாங்கலாம். எங்களுக்கு நேர்ம கிடைக்காது. கிடைக்கும் நேரம் போனால் மீன் வாங்கி வருவோம்.
சிக்கன் வாரம் இரு முறை செய்வேன். மத்தப்படி சோறுடன் கீரை சமைத்து பப்படம் பொருத்தி தயிர் சேர்த்து கொடுத்தாலே ரெம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் அடிக்கடி கீரை சமைப்பேன்!
மீன் மாதம் ஓரிரு தடவைதான் சமைக்க முடியுது. நான் இருக்கும் இடத்தில்பிரெஷ் மீன் வாங்க முடியாது. 30 கி.மீ போனால் வியாழன், வெள்ளியில் மட்டும் பிரெஷ் மீன் வாங்கலாம். எங்களுக்கு நேர்ம கிடைக்காது. கிடைக்கும் நேரம் போனால் மீன் வாங்கி வருவோம்.
சிக்கன் வாரம் இரு முறை செய்வேன். மத்தப்படி சோறுடன் கீரை சமைத்து பப்படம் பொருத்தி தயிர் சேர்த்து கொடுத்தாலே ரெம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் அடிக்கடி கீரை சமைப்பேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
அனைத்தும் சரிதான் ஆனால் உங்கள் வீட்டில் எப்பவும் பப்படம் இருக்கும் அவ்வளவு விருப்பமோ...!Nisha wrote:எங்க வீட்டில் டெய்லி மீன் இருக்காது, மீட் இருக்காது, ஆனால் காய் வகைகளும் , சலாட்டும், பழங்களும் இருக்கும்,!
மீன் மாதம் ஓரிரு தடவைதான் சமைக்க முடியுது. நான் இருக்கும் இடத்தில்பிரெஷ் மீன் வாங்க முடியாது. 30 கி.மீ போனால் வியாழன், வெள்ளியில் மட்டும் பிரெஷ் மீன் வாங்கலாம். எங்களுக்கு நேர்ம கிடைக்காது. கிடைக்கும் நேரம் போனால் மீன் வாங்கி வருவோம்.
சிக்கன் வாரம் இரு முறை செய்வேன். மத்தப்படி சோறுடன் கீரை சமைத்து பப்படம் பொருத்தி தயிர் சேர்த்து கொடுத்தாலே ரெம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் அடிக்கடி கீரை சமைப்பேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
அட ஆமாம்பா,
கப்ரியேலுக்கும், எப்சிக்கும் சோறு சாப்பிடணும்னால் பப்படம் வேண்டும். கப்ரியேல் பரவாயில்லை, ஆனால் எபசிக்கு சோறு சமைக்கும் அன்று பப்படமும் தயிரும் இல்லாவிட்டால் சாப்பிடமாட்டாள்.
சோறு சமைக்கும் நாளில் பப்படம் பொரித்து விடுவேன்.
வாரத்தில் நான்கு நாள் சுவிஸ் மெனுதானே பெரும்பாலும் செய்வது!
கப்ரியேலுக்கும், எப்சிக்கும் சோறு சாப்பிடணும்னால் பப்படம் வேண்டும். கப்ரியேல் பரவாயில்லை, ஆனால் எபசிக்கு சோறு சமைக்கும் அன்று பப்படமும் தயிரும் இல்லாவிட்டால் சாப்பிடமாட்டாள்.
சோறு சமைக்கும் நாளில் பப்படம் பொரித்து விடுவேன்.
வாரத்தில் நான்கு நாள் சுவிஸ் மெனுதானே பெரும்பாலும் செய்வது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்கறிகளை வாங்குவது எப்படி?
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்
எங்க வீட்டில் காய்கறி தான் அதிகம் செய்வோம். வாரம் ஒருநாள் தான் சிக்கன் வாங்குவேன். மீன் மாசத்துல 2தடவல் இல்லனா 1தடவைதான் .மீன் வாங்கலமென கடைக்கு போவேன் நான் எதிர்பார்க்கும் மீன் இல்லனா திரும்பி வந்துடுவேன்.
அதனால் மீன் ரொம்ப செய்ய மாட்டேன். முட்டை தான் அதிகம் செலவாகும். பசங்க பாவக்காய் தவிர எல்லா காயும் சாப்பிடுவாங்க. கேரட், முள்ளங்கை, பீன்ஸில், கோஸில் முட்டை போட்டு செய்வேன்
எங்க வீட்டில் காய்கறி தான் அதிகம் செய்வோம். வாரம் ஒருநாள் தான் சிக்கன் வாங்குவேன். மீன் மாசத்துல 2தடவல் இல்லனா 1தடவைதான் .மீன் வாங்கலமென கடைக்கு போவேன் நான் எதிர்பார்க்கும் மீன் இல்லனா திரும்பி வந்துடுவேன்.
அதனால் மீன் ரொம்ப செய்ய மாட்டேன். முட்டை தான் அதிகம் செலவாகும். பசங்க பாவக்காய் தவிர எல்லா காயும் சாப்பிடுவாங்க. கேரட், முள்ளங்கை, பீன்ஸில், கோஸில் முட்டை போட்டு செய்வேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் வாங்குவது எப்படி?
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» காய்கறி வாங்கும்போது நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
» ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ?
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» காய்கறி வாங்கும்போது நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
» ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ?
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|