சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? Khan11

அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா?

Go down

அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? Empty அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா?

Post by ahmad78 Thu 31 Jul 2014 - 14:28

அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? Tamil_News_217780709267
எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? கிடைத்ததையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கோபம் எல்லோருக்கும் வருவது இயற்கை, ஆனால் அளவுக்கு அதிகமான கோபம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.

அளவுக்கு அதிகமாக கோபம் வர பல்வேறு காரணங்கள் உண்டு. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு, என்பது இவற்றில் ஒரு சில என்றாலும் கோபப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வழிகளும் பல உள்ளன. அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு காணலாம்.

நாவடக்கம் அவசியம்: 

வாயில் இருந்து சொற்கள் விழுந்து விட்டால், அவற்றை திரும்ப எடுக்க முடியாது என்பது மிகச்சரியான ஒன்றாகும். கோபப்பட்டு ஒருவரை ஒரு வார்த்தை பேசி விட்டால் அதனை சரி செய்வது இயலாத ஒன்று ஆகும். அப்போதைக்கு இதற்கு பரிகாரம் காணப்பட்டாலும் பின்னர் அந்த வார்த்தைகள் மனரீதியான உறுத்தலை அளிப்பது இயல்பு. நீண்ட நெடிய சொந்த பந்தங்களையும் கோபத்தால் ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டால் அவை உடைந்து போக வழிவகுக்கும். எனவே கோபப்படும் போது அதிகபட்சம் பேசாமல் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது.

மனதையும் அடக்கலாம்: 

ஒருவர் தனது மனதை கட்டுப்படுத்த முயன்றால் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். கோபப்படும் போதும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்தால் வாயில் இருந்து கண்டபடி வார்த்தைகள் உதிர்வது தடுக்கப்படும். நன்றாக யோசித்து பேச வேண்டியதை மட்டும் பேசலாம். இதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது 6ல் இருந்து தலைகீழாக எண்ணுங்கள். கண்களை மூடியபடி உள்ளேயும், வெளியேயும் மூச்சுவிட்டு பாருங்கள், வாழ்க்கையில் கடந்து சென்ற நல்ல நிமிடங்களை எண்ணிப்பாருங்கள். இதன் மூலம் ஏற்படுகின்ற சிந்தனையோட்டத்தில் வரும் மாற்றம் கோபத்தை கட்டுப்படுத்தும்.

சுயபரிசோதனை செய்யுங்கள்: 

யாருக்காக, எதற்காக, எப்போது கோபப்பட்டோம்? கோபம் வரும்போது என்ன செய்தோம்? மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கோபம் நம்மை பாதிக்கிறதா? அளவுக்கு அதிகமான கோபத்தால் சொந்த பந்தங்கள் அகன்று போகிறார்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறியப் பாருங்கள், இதனை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இது உங்கள் கோபத்தை குறைக்க செய்யும்.

உடல்மொழியும் அவசியம்: 

கோபமாக பேசவில்லை என்பது மட்டுமில்லாமல் வேகமாக நடப்பது, கதவை இழுத்து மூடுவது, கிடைத்ததை தூக்கிப்போட்டு மிதிப்பது, மேல்நோக்கி பார்த்து முனங்குவது போன்ற செயல்பாடுகள் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும். எனவே இதனையும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். நாம் இவ்வளவு சொல்லியும் கோபப்படவில்லை என்று மற்றவர்கள் மூக்கின் மீது விரல் வைக்க செய்வதும் ஒரு கலைதான்.

சந்தோஷ வழியை தேடுங்கள்: 

மனதில் சந்தோஷம் வருகின்ற வழிகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களுக்கு கோபம் வருகின்ற வழிகளை மூட செய்யலாம். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்பவர்களுக்கு இது மிகவும் எளிமையான ஒன்றாகும். எத்தனை பெரிய பிரச்னைகள் வந்தாலும் அதனை எளிமையாக கையாள உங்களால் முடியும். சாதாரண விஷயங்களையும் கோபப்பட்டு பிரச்னையை பெரிதாக்குவதை விட்டு சந்தோஷமுள்ள மனதை உருவாக்க வேண்டும். 

கோபத்தோடு இருக்கும்போது எடுக்கின்ற முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது என்பதை உணர வேண்டும். முன்கோபம் ஒன்றுக்கும் தீர்வு ஆகாது. அது மனதையும், உடலையும் நாளடைவில் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்னும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=103159


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum