சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காலம் மாறிப்போச்சு  Khan11

காலம் மாறிப்போச்சு

5 posters

Go down

காலம் மாறிப்போச்சு  Empty காலம் மாறிப்போச்சு

Post by பாயிஸ் Wed 3 Sep 2014 - 12:11

எம்மோடுள்ளவர்கள் வாழ
நாம் வாழ்ந்திடத்தை விட்டு 
இப்பாலைவனத் தேசத்தை 
வந்தடைந்த நிமிடங்கள்
மறக்கவில்லை இன்னும் 

நண்பர்கள் சூழ நின்று
நம் கிராமத்துக் கதைபல பேசி
நடுவினில் நையாண்டி செய்து 
நகைத்துக்கொள்ளும் நாட்கள்
நகர்ந்துதான் போகுமென்று 
நினைத்துத்தான் பார்க்கவில்லை

நடந்து திரிந்த பாதைகள்
மாறிப்போனது  போல்
பழகித்திரிந்த நண்பர்கள்
தூரமாகிப் போனார்கள்

இது புதியதோர் தேசம்
புதுப்புது மொழிகள்
புதிது புதிதாய் முகங்கள்
புத்தம் புதிய நண்பர்கள்
யாவும் தலைகீழாய்த் தெரிகிறது

ஒரே விதமான செயற்பாடுகள்
தினமும் புளித்துப்போகிறது
அது பழகித்தான் போனாலும்
வெறுப்பில்தான் கழிகிறது

காதல் அருந்த பாசங்கள்
கடவுச்சீட்டின் நண்பர்கள்
அது கிழியும் வரை தொடரும்
இந்த வேசமான பாசங்கள்

எம்நாட்டுக்கும் இந்நாட்டுக்கும்
இடைப்பட்ட தூரத்தில் 
நாம் இழந்து வந்தவைகள்
காலத்தின் காலடியில்
சமாதியாய்க் கிடக்கிறது..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by rinos Wed 3 Sep 2014 - 13:22

இது புதியதோர் தேசம்
புதுப்புது மொழிகள்
புதிது புதிதாய் முகங்கள்
புத்தம் புதிய நண்பர்கள்
யாவும் தலைகீழாய்த் தெரிகிறது

ஒரே விதமான செயற்பாடுகள்
தினமும் புளித்துப்போகிறது
அது பழகித்தான் போனாலும்
வெறுப்பில்தான் கழிகிறது

ஒரே விதமான செயற்பாடுகள்
சரியாக சொன்னீர்கள் பாயிஸ் பாய்
அருமையாக உள்ளது உங்கள் கவிதை
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 15:21

கவிஞர்கள் மாறி மாறி எங்கள் மனக்குமிறல்களை அள்ளி வீசுகிறார்கள் நாங்கள் தொலைத்த இன்பங்கள் அனைத்தையும் வரிகளாக கண் முன் வைக்கிறார்கள் பாராட்டுவதா வருத்தப்படுவதா?

நடந்து திரிந்த பாதைகள் பழகித்திரிந்த நண்பர்கள் உறவாடிய சொந்தங்கள் திருடித்தின்ற மாங்காய்கள் இன்னுமின்னும் எவ்வளவு எவ்வளவு எங்கள் வாழ்க்கையில் மாறியப்போயின

அவர்களுக்கென்ன வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் என்று சொல்லுபவர்களெல்லாம் நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது அக்கரைக்கு இக்கரை பச்சையாகத்தான் தெரியும்
எங்கள் உள்ளக்குறல்களை நீங்களும் படித்துப்பாருங்கள்

சிறப்பாக கவிதை எழுதிய எங்கள் கவிஞர் பாயிஸ் அவர்களுக்கு ஆறுதலான வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள் மாறா அன்புடன்
நண்பன்.
:pale: :pale:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by Nisha Wed 3 Sep 2014 - 15:40

கடந்த காலத்தினை நினைத்து
நிகழ் காலத்தினை இழந்து 
எதிர்காலத்தினை தொலைப்பதனால் 
சோகங்கள் மாறுமா! சொர்க்கம் தான் கிட்டுமா?

கடந்தவை முடிந்ததே! 
நாளை என்பதும் உன்னிடமில்லை
இதோ இந்த நொடிம் மட்டும்உன்வசமெனநினை 
உலகமே உன்வசமாய்  தெரியும்..உன்உள்ளமும் குளிரும்.
இழந்ததை எண்ணி கலங்குவதாலே இருப்பதை இழப்போம்
இனியேனும் உணர்ந்தால்இனி வரும் காலம் இனிதாக தெரியும்!  
இழப்புக்கள் எங்கும்  இலவசம் தானே! 
இருப்பதோ  உன்னுள்” பரவசம் தானே! 

கடந்ததை  நினைத்து மனம் மகிழ்ந்திடும் நாளில் 
கலக்கங்கள் தீரும்,  கவலைகள் அகலும்.
காலக்த்தின்போக்கில்கடலலைமீதில்
படகைபோலானோம்துடுப்பு உன் கரத்தில் 
என்பதை மறவாய்..
கடந்ததை எண்ணி கலங்கி நிற்காமல்
காலத்தை வெல்லும் துடுப்பாய் நீ இரப்பா! 

பாயிஸ்! இழப்புக்களை  கவிதையாய் வடித்த விதம் படிக்கும் எம் மனதில் அக்கால நிகழ்வை அப்படியே கண் முன் கொண்டு வந்தாலும் .. இதை எழுதிடும் உங்கள் உள்ளம்  மீண்டுமாய் அக்காலத்தினை ஏங்கி எதிர்பார்த்து தவிக்க விலலையா?  அல்லது கவிதையாய் எழுதி விட்டு அமைதலாய் இருப்பீர்களா? 

எனக்குள் ஆச்சரியம் என்னவெனில்  ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து வந்து  இத்தனை கவிப்புலனோடும் தமிழ்ப்பற்றோடும் கவிதை எழுதும் உங்களின் திறமையெல்லாம் எங்கிருந்து வந்தது என்பது தான்! இத்தனை திறன்களும் வெளிக்கொண்ரப்படாமல் போகும்  நிலை ஏன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Sep 2014 - 16:39

அக்காவின் கேள்வி மிக முக்கியமானது எம் தேசத்தின் கிழக்கில் எத்தனை முத்துக்கள் இன்னும் மினுங்காமல் மங்கிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை நான் அறிந்தவகையில் எம் பிரதேசங்களில் ஆயிரமாயிரம் கவிஞர்கள் படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் வெளிவருவதில்லை வெளிப்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை 

அருமையான ஒரு படைப்பு காலம் மாறிப்போச்சு இங்கு வந்ததால் எம் காலமும் மாறிப்போச்சு அங்குள்ளவைகளுகம் எம்மைவிட்டு தூரமாகிப்போய் விட்டது நாம் நாடு செல்லும் போது எம்மை யாரென்று கேட்கும் ஒரு சமுகம் உருவாகிக்கிடக்கிறது இது அவர்களின் குற்றமில்லை எமது துர்ப்பாக்கிய நிலை 

தொடருங்கள் பாயிஸ்


காலம் மாறிப்போச்சு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 17:41

நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவின் கேள்வி மிக முக்கியமானது எம் தேசத்தின் கிழக்கில் எத்தனை முத்துக்கள் இன்னும் மினுங்காமல் மங்கிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை நான் அறிந்தவகையில் எம் பிரதேசங்களில் ஆயிரமாயிரம் கவிஞர்கள் படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் வெளிவருவதில்லை வெளிப்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை 

அருமையான ஒரு படைப்பு காலம் மாறிப்போச்சு இங்கு வந்ததால் எம் காலமும் மாறிப்போச்சு அங்குள்ளவைகளுகம் எம்மைவிட்டு தூரமாகிப்போய் விட்டது நாம் நாடு செல்லும் போது எம்மை யாரென்று கேட்கும் ஒரு சமுகம் உருவாகிக்கிடக்கிறது இது அவர்களின் குற்றமில்லை எமது துர்ப்பாக்கிய நிலை 

தொடருங்கள் பாயிஸ்
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by பாயிஸ் Thu 4 Sep 2014 - 9:50

கடந்தகால நிகழ்வுகளை தற்போது நகர்ந்து கொண்டிருக்கும் நிமிடங்களோடு ஒப்பிடுகையில் மனம் அழத்தான் செய்கிறது. அதற்கு காரணமும் இருக்கின்றது நாம் தற்போது வாழ்கின்ற இடம் எப்படிப்பட்டதாக இருந்தலும் நாம் வாழ்ந்த எம் கிராமத்து மன்வாசனை எம்மைச்சுற்றியே வந்துகொண்டேயிருக்கும்  

கேள்விக்கணைகளோடு பின்னூட்டம் கொடுத்த நிஷா அக்காவுக்கும் அதற்கு பதில் கொடுத்த நண்பர் ஹாசிமுக்கும் எமது நண்பன் “நண்பன்” அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 10:21

பாயிஸ் wrote:கடந்தகால நிகழ்வுகளை தற்போது நகர்ந்து கொண்டிருக்கும் நிமிடங்களோடு ஒப்பிடுகையில் மனம் அழத்தான் செய்கிறது. அதற்கு காரணமும் இருக்கின்றது நாம் தற்போது வாழ்கின்ற இடம் எப்படிப்பட்டதாக இருந்தலும் நாம் வாழ்ந்த எம் கிராமத்து மன்வாசனை எம்மைச்சுற்றியே வந்துகொண்டேயிருக்கும்  

கேள்விக்கணைகளோடு பின்னூட்டம் கொடுத்த நிஷா அக்காவுக்கும் அதற்கு பதில் கொடுத்த நண்பர் ஹாசிமுக்கும் எமது நண்பன் “நண்பன்” அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
உண்மைதான் காலத்தின் கட்டளை நமது நிலை இதற்கு வேற பெயரும் உண்டு சொல்ல முடியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலம் மாறிப்போச்சு  Empty Re: காலம் மாறிப்போச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum