Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
3 posters
Page 1 of 1
தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.
என்ஜினீயரிங் மாணவி
தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர் டவுன் தேரேபயல் கொஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் தயானந்த் ஆல்வா. இவரது மகள் வர்ஷா(வயது 20). இவர் புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 2–ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று வர்ஷா தனது தோழியான புத்தூர் பகுதியை சேர்ந்த ரக்ஷனா உள்பட 5 பேருடன் நேருநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது வர்ஷா, ரெயில்வே தண்டவாளத்தில் நின்றபடி, ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில்களை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
ரெயிலில் அடிபட்டு சாவு
அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் சுப்பிரமணியா–மங்களூர் பயணிகள் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை பார்த்து வர்ஷா ஓட முயன்றார். அப்போது அவர் கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதனால் சக தோழிகள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் வர்ஷா மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் ரக்ஷனா என்ற மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த சகதோழிகள் ரக்ஷனாவை மீட்டு, மங்களூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும், மங்களூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போனில் ரெயிலை படம் பிடித்தபோது, ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
dailythanthi
என்ஜினீயரிங் மாணவி
தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர் டவுன் தேரேபயல் கொஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் தயானந்த் ஆல்வா. இவரது மகள் வர்ஷா(வயது 20). இவர் புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 2–ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று வர்ஷா தனது தோழியான புத்தூர் பகுதியை சேர்ந்த ரக்ஷனா உள்பட 5 பேருடன் நேருநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது வர்ஷா, ரெயில்வே தண்டவாளத்தில் நின்றபடி, ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில்களை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
ரெயிலில் அடிபட்டு சாவு
அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் சுப்பிரமணியா–மங்களூர் பயணிகள் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை பார்த்து வர்ஷா ஓட முயன்றார். அப்போது அவர் கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதனால் சக தோழிகள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் வர்ஷா மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் ரக்ஷனா என்ற மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த சகதோழிகள் ரக்ஷனாவை மீட்டு, மங்களூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும், மங்களூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போனில் ரெயிலை படம் பிடித்தபோது, ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
dailythanthi
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
ஏன் இந்த விபரீத விளையாட்டு. வாழ்க்கையே போச்சே :(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி
என்ன சொல்லன்னு தெரியல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் தீ விபத்து..
» தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்!
» என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் தீ விபத்து..
» தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்!
» என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|