Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஒளவியம் பேசேல்!
4 posters
Page 1 of 1
ஒளவியம் பேசேல்!
ஒளவியம்: பொறாமை
இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது.
1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.
2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது.
3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது.
ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க
பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும்.
(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)
ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும்.
உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்?
நன்றி கூடல் காம்
இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது.
1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.
2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது.
3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது.
ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க
பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும்.
(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)
ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும்.
உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்?
நன்றி கூடல் காம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒளவியம் பேசேல்!
ஔதடம் என்ற சொல்லும் உண்டு.
ஔவியம் விளக்கம் அருமை
ஔவியம் விளக்கம் அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒளவியம் பேசேல்!
ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்
இவையனைத்தும் இணையத்தில் கிடைத்தவை, ஆனாலும் இதில் நிறைய வடமொழி சொற்கள் உள்ளது.
ஔஷதம், ஔபாசனம் (ஔபசானம் அல்ல) இவையிரண்டும் சுத்த சமஸ்க்ருத வார்த்தைகள்.
ஔபாசனம் - இந்தக் காலத்தில் கூட, ஐயர்- ஐயங்கார் திருமணங்களில், திருமணத்தன்று காலை இவ்வேள்வி செய்யப்படுகின்றது. (அதாவது, நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் ஔபாசனம் என்ற சொல் இன்றும், நடைமுறையில் பழக்கத்தில் உள்ளது.
ஔ வை பற்றி ஒரு ஆராய்சி செய்தால் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு பெரிய விசயம் இது. நன்றி நிசா
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்
இவையனைத்தும் இணையத்தில் கிடைத்தவை, ஆனாலும் இதில் நிறைய வடமொழி சொற்கள் உள்ளது.
ஔஷதம், ஔபாசனம் (ஔபசானம் அல்ல) இவையிரண்டும் சுத்த சமஸ்க்ருத வார்த்தைகள்.
ஔபாசனம் - இந்தக் காலத்தில் கூட, ஐயர்- ஐயங்கார் திருமணங்களில், திருமணத்தன்று காலை இவ்வேள்வி செய்யப்படுகின்றது. (அதாவது, நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் ஔபாசனம் என்ற சொல் இன்றும், நடைமுறையில் பழக்கத்தில் உள்ளது.
ஔ வை பற்றி ஒரு ஆராய்சி செய்தால் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு பெரிய விசயம் இது. நன்றி நிசா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒளவியம் பேசேல்!
வாவ்! பிரமாதம்!
ஆராய்ச்சி செய்யலாம் சுறா! நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!
நன்று, நன்றி!
ஆராய்ச்சி செய்யலாம் சுறா! நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!
நன்று, நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒளவியம் பேசேல்!
Nisha wrote:வாவ்! பிரமாதம்!
ஆராய்ச்சி செய்யலாம் சுறா! நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!
நன்று, நன்றி!
இனி சேனையில் இது தானே நம்ம வேலை
முனைவர் நிஸா
முனைவர் சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒளவியம் பேசேல்!
சுறா wrote:Nisha wrote:வாவ்! பிரமாதம்!
ஆராய்ச்சி செய்யலாம் சுறா! நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!
நன்று, நன்றி!
இனி சேனையில் இது தானே நம்ம வேலை
முனைவர் நிஸா
முனைவர் சுறா
அட! முனைவர் பட்டம் இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தால் கிடைக்குமாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒளவியம் பேசேல்!
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:வாவ்! பிரமாதம்!
ஆராய்ச்சி செய்யலாம் சுறா! நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!
நன்று, நன்றி!
இனி சேனையில் இது தானே நம்ம வேலை
முனைவர் நிஸா
முனைவர் சுறா
அட! முனைவர் பட்டம் இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தால் கிடைக்குமாமா?
ஆம் நீங்க முனைவர் பட்டம் பெறனும்னா ஆன்லைனில் உள்ள பல்கலைகழகத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடவேன்டும். பிறகு இவையனைத்தையும் கோப்புகள் வடிவில் சமர்ப்பிக்கவேன்டும். சான்றோர்களால் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு முனைவர் பட்டம் தரப்படும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒளவியம் பேசேல்!
முனைவர் நிஷா , சுறாண்ணா வாழ்க வாழ்க!!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒளவியம் பேசேல்!
பானுஷபானா wrote:முனைவர் நிஷா , சுறாண்ணா வாழ்க வாழ்க!!!!
மிஸ்டர் சுறானந்தான்னு சொல்லுங்க )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒளவியம் பேசேல்!
ஆச்சிரமம் ஆரம்பிக்க போகின்றீர்களா ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒளவியம் பேசேல்!
Nisha wrote:ஆச்சிரமம் ஆரம்பிக்க போகின்றீர்களா ஜானி!
பெண் சீடர்கள் மட்டும் உள்ள ஒரு ஆசிரமம் அமைக்கலாம் என்று யோசனை உள்ளது. அப்ப தான் நல்லாயிருக்கும் *# *#
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|