Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பாம்பு அறியும் பாம்பின் காது
2 posters
Page 1 of 1
பாம்பு அறியும் பாம்பின் காது
இது என்ன பழமொழியையே மாற்றி விட்டார்களே என நீங்கள் திகைக்கலாம். ஆமாம். இனி அது மாற்றப்பட வேண்டியதுதான். பாம்பு ஒரு இடத்தில் இருந்து பிறிதொரு இடம் போக அதற்கு கால்கள் தேவை இல்லை. அதனால் அதுக்கு கால் இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
ஆனால் பாம்பின் செவி நம் கண்ணுக்கு தென்படுவதும் இல்லை. பாம்பை கட்செவி தமிழ் இலக்கியங்கள் சொல்லும். காரணம் பண்டை தமிழர்கள் பாம்புக்கு கண்ணே செவியாகவும் பணிஆற்றுகிறது என கருதினார்கள். ஆனால் இடியேறு உண்ட நாகம் என்று சொல்லும்போது பாம்புக்கு இடியோசை அச்சம் தரும் என்றுதான் முன்னோர்கள் கருதியுள்ளார்கள். அதேபோல் இன்றும் பாம்பாட்டி இசைக்கும் மகுடிக்கு பாம்புகள் மயங்கி ஆடும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் பல அறிவியலார் பாம்பு இசை கேட்கும் திறன் இல்லை, பாம்பாட்டியின் மகுடியின் ஆட்டத்தைக்கண்டு தற்காப்பு கருதி அதை எதிர்கொள்ளவே தானும் ஆடுகிறது என்கிறார்கள்.
உண்மையில் பாம்புக்கு செவி இருக்கிறதா இல்லையா?பாம்புகள் தாடை துணைகொண்டு கேட்கின்றன.
அறிவியலார் முதன் முறையாக பாம்புகளுக்கு வெளிப்படையான செவிகளும் செவிப்பறையும் இல்லாவிடினும் அவை எப்படி உட்புற செவிப்பறைகளால் ஒலியை கேட்கின்றன என்று காட்டி இருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஜெர்மன் ஆய்வாளர்கள், பாம்புகளுக்கு இரு வகையான கேட்பு அமைப்புகள் உள்ளன என்றும் அவற்றில், ஒன்று அதன் தாடைகள் என்றும் காட்டி பாம்புகளின் உயிர்த்தளிர்ப்பை பயனுள்ள உள்ளாய்வு செய்துள்ளார்கள்.
கடல்துறை பொறியாளர்களின் கைவினைகளை கடன் பெற்று செய்த இந்த ஆய்வுப்பணி இயல்பியல் மீள்பார்வை மடல்கள் வெளியாகும் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மடலின் இணை ஆசிரியரான, வாஷ்பான் பல்கலையின் உயிரியல் பேராசிரியர், புரூஸ் யங் (Bruce Young), சொல்லுகிறார், ”பாம்புகளின் உயிரியலைப்பற்றி நாம் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளோம் என்பது வியப்பாக உள்ளது. நாம் அரைகுறையாக ஆய்ந்த ஒரு புலத்தில் பணி செய்வது இனிமையாக இருக்கிறது”
”பாம்புகளால் கேட்க இயலாது. அவைகள் தம் இரையை வாசம், சுவை மற்றும் சில இனங்களில் அதன் மூக்கின் அருகே அமைந்த தனித்தன்மையான சூடு-உணர் துளைகளால் தான் உணர்கின்றன” என்றே பல ஆண்டுகளாக கருதிவந்தோம்
ஆனால் இன்று, ஒரு எலி அல்லது மற்ற இரைகள் வைக்கும் ஒவ்வொரு அடியும் பரப்பும் அலைகள் தரை, மற்றும் வளி ஊடாக, பொய்கை நீரில் விழும் சொட்டு எழுப்பும் ஒற்றை ஓசையுடன் எழும் திரைகள் போல, பரவுகின்றன. கடலின் அலைகளால் ஒரு கப்பல் அலங்குவது போல் பாம்பின் தாடைகள் தரைமேல் கிடக்கையில் தரை ஊடாக பரவும் இந்த ஒலி அலைகளை உணருகின்றன். பாம்புகளின் கீழ்த்தாடை விளிப்பு உள்ள உருளை போன்றது. எனவே அந்த வகையில் அது ஒரு கப்பலை விட நிரம்ப வேறுபாடனது என சொல்ல இயலாது. ஒரு கப்பல அலங்குவதை அளக்கும் கணக்கியல் சமன்பாடுகளை, அப்படியே மாதிரியாக கொண்டு, ஆய்வாளர்கள், பாம்பின் தாடைகள் தரை அல்லது மணல்வழி பெயரும் அலைகளுக்கு எப்படி அசையும் என்று அறிய பயன்படுத்தினார்கள். ஒரு கப்பல் மேலும் கீழுமாய் எம்புவது, தள்ளாடுவது, (சிக்கிமுக்கி போல்) முன்னும் பின்னும் அசைவது போன்ற அறுவகை திசைகளில் ஆட்டம் காண்பது போல் பாம்பின் தாடையும் அசையுமாம். எப்படி ஆழ்கடலில் கப்பல் மிக நிலையாக பயணிக்கிறது அதே போல் பாம்புகளும் ஓசைகளை துல்லியமாக உணர மணிலில் புதைந்து கொள்கின்றன. அப்படி புதையுண்டால் தன் தாடை எவ்வேறு வகையாக அசைகிறது என்பதை பாம்பால் உணர இயலும்.
Re: பாம்பு அறியும் பாம்பின் காது
மூளைக்கு அனுப்புகை:
பாம்பின் தாடையால் ஒரு ஓசை உணரப்பட்டால், அது அதன் உட்செவிக்கு பயணிக்க, அந்த அறிகுறியை நரம்புகள் மூளைக்கு அனுப்புகின்றன. தாடைகளாலும் உட்செவிகளாலும் (மீன், மற்றும் ஊர்வனவற்றுக்கும் இருப்பதுபோல்) கேட்பதால் தமது தேவைக்காகவே பாம்புகள் கேட்பதற்கு என இரண்டாம் வழியை வளர்த்து கொண்டுள்ளன. (By hearing through their jaw bone and through a traditional ear, snakes essentially evolved a second way to hear, say the researchers.)
மாந்தரும் இந்த திறமையின் சற்று கரடான ஒரு படிவம் பெற்றுள்ளார்கள். ஒரு தூண்டப்பட்ட கவையை நம் காதருகே காற்றில் வைத்து கேட்டால் அது மங்கிய ஒலியாக கேட்கும். அதே கவையை தூண்டிவிட்டு நம் செவிமடலின் பின்புறம் உள்ள எலும்பின் அடிப்புறம் வைத்து கேட்டால் ஒலி மிக வலுவாக கேட்கும். ஆனால். மனிதர்களின் தாடை ஒரு முழுமையான எலும்பாக இருக்க, பாம்புகளுக்கு இரண்டு தாடைகள் உள்ளன. இவை பாம்புகள் தம்மைவிட அளவில் பெரிதான இரையை விழுங்கிட இயலுவதோடு ஓசைகளையும் ஸ்டிரியோவாக கேட்கவும் உதவுகின்றன
இந்த ஆராய்ச்சியில் பங்குகொள்ளாத மேரிலாந்து பல்கலையின் உயிரியலாரான, பேராசிரியர் காத்தரின் கார் (Catherine Carr) சொல்லுகிறார்: ”இந்த ஆய்வு சுவையானது. மண்டை ஓட்டின் ஊடாக ஒலிப்பரவலதான், முதன்முறை தோன்றிய தரைவாழ் தண்டுவடத்து உயிரினங்கள் கேட்கும் முறையாக இருந்து இருக்கும்.”
நன்றி தமிழாக்கம்: வேந்தன் அரசு
பாம்பின் தாடையால் ஒரு ஓசை உணரப்பட்டால், அது அதன் உட்செவிக்கு பயணிக்க, அந்த அறிகுறியை நரம்புகள் மூளைக்கு அனுப்புகின்றன. தாடைகளாலும் உட்செவிகளாலும் (மீன், மற்றும் ஊர்வனவற்றுக்கும் இருப்பதுபோல்) கேட்பதால் தமது தேவைக்காகவே பாம்புகள் கேட்பதற்கு என இரண்டாம் வழியை வளர்த்து கொண்டுள்ளன. (By hearing through their jaw bone and through a traditional ear, snakes essentially evolved a second way to hear, say the researchers.)
மாந்தரும் இந்த திறமையின் சற்று கரடான ஒரு படிவம் பெற்றுள்ளார்கள். ஒரு தூண்டப்பட்ட கவையை நம் காதருகே காற்றில் வைத்து கேட்டால் அது மங்கிய ஒலியாக கேட்கும். அதே கவையை தூண்டிவிட்டு நம் செவிமடலின் பின்புறம் உள்ள எலும்பின் அடிப்புறம் வைத்து கேட்டால் ஒலி மிக வலுவாக கேட்கும். ஆனால். மனிதர்களின் தாடை ஒரு முழுமையான எலும்பாக இருக்க, பாம்புகளுக்கு இரண்டு தாடைகள் உள்ளன. இவை பாம்புகள் தம்மைவிட அளவில் பெரிதான இரையை விழுங்கிட இயலுவதோடு ஓசைகளையும் ஸ்டிரியோவாக கேட்கவும் உதவுகின்றன
இந்த ஆராய்ச்சியில் பங்குகொள்ளாத மேரிலாந்து பல்கலையின் உயிரியலாரான, பேராசிரியர் காத்தரின் கார் (Catherine Carr) சொல்லுகிறார்: ”இந்த ஆய்வு சுவையானது. மண்டை ஓட்டின் ஊடாக ஒலிப்பரவலதான், முதன்முறை தோன்றிய தரைவாழ் தண்டுவடத்து உயிரினங்கள் கேட்கும் முறையாக இருந்து இருக்கும்.”
நன்றி தமிழாக்கம்: வேந்தன் அரசு
Re: பாம்பு அறியும் பாம்பின் காது
பாம்பு பற்றிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.
» பாம்பின் படங்கள்
» 16 அடி புடையன் பாம்பின் வயிற்றில் பெரிய மான்
» தகவல் அறியும் உரிமை சட்டம்
» நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை
» பாம்பின் படங்கள்
» 16 அடி புடையன் பாம்பின் வயிற்றில் பெரிய மான்
» தகவல் அறியும் உரிமை சட்டம்
» நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்: கோவையில் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|