சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Khan11

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில்

3 posters

Go down

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Empty உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில்

Post by ahmad78 Thu 5 Mar 2015 - 13:36

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Ht3339


மூங்கில் என்றாலே நினைவுக்கு வருவது புல்லாங்குழலும், ஆயர்பாடி கண்ணனும்தான். அதிலிருந்து வரும் மெல்லிய இசை நம்மை மயக்கி நம் துன்பத்தை நீக்கி புத்துணர்ச்சியை தரும். ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்துவார்கள். மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து பல தலைமுறை மூங்கில்களும் ஒரே புதராக காட்சியளிக்கும். எனவேதான் திருமண பந்தல்கால் நடும்போது மூங்கில் கால் நட்டபிறகுதான் எந்தவிதமான நவீன பந்தலாக இருந்தாலும் அதை அமைப்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.

அமை, அரி, ஆம்பல், ஓங்கல், கண், கனை, கழை, காம்பு, சீசகம், சந்தி, தட்டை, திகிரி, துனை, நேமி, பணை, பாதிரி, புறக்காழ், முடங்கல், முளை, வஞ்சம், வரை, விண்டு, வெதிர், வேரல், வெய், வேல், வேணு, வேழம் என்ற பல்வேறு பெயர்களால் மூங்கில் அழைக்கப் படுகிறது. இலையை சிறிது நீர் தெளித்து இடித்து சாறுபிழிந்து 15 மிலி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை பருகினால் தொடர் இருமல் தீரும். காய்ந்து கிடக்கும் மூங்கில் இலையை கொளுத்தி சாம்பலாக்கி புண்களின் மீது தடவ அவை விரைந்து ஆறும்.

முளைகளை ஊறுகாய் செய்து உண்ண பசியை உண்டாக்கி செரியாமையை போக்கும். எலும்பு முறிவுக்கு மூங்கில் பத்தை வைத்து கட்ட உடனடி குணம் கிடைக்கும். இளங்குருத்துகளை 1பங்கு அளவிற்கு எடுத்து அதனுடன் 20 பங்கு நீர்விட்டு குடிநீரிட்டு குடித்தால் சூதககட்டு, வெள்ளை போகும். மேலும் சுரம், குட்டம் குழந்தைகளின் வயிற்றில் உள்ள சிறு பூச்சிகள் அழியும். மூங்கிலின் இளமுளைகளை நசுக்கிப்பிழிந்து சாறெடுத்து அழுகல் புண்களுக்கு பூசி, பின்னர் அந்த மூங்கிலை சிதைத்து வைத்து அந்த புண்ணில் வைத்து கட்ட அதிலுள்ள பூச்சிகள் வெளியேறி புண்கள் விரைவாக ஆறும்.

மூங்கில் வேரை அரைத்து சொறி சிரங்கு படை முதலியவற்றுக்கு போட்டு வந்தால் அவை குணமாகும். வேரை காய வைத்து குடிநீரிட்டு குடித்து வ ந்தால் சுரம் வெப்பம் தணியும். மூங்கில் அரிசியை வெண்பொங்கலாகவும் சர்க்கரை கூட்டி பாயசாமாகவும் செய்துண்ண அவை உடலுக்கு ஊட்டம் தந்து நோய்களை வர விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. அரிசியை உணவு வகைகள் செய்து சாப்பிடும்போது நீரிழிவு நீங்கி நலம் உண்டாகும். ரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

மூங்கிலின் கணுக்களில் படர்ந்துள்ள உப்பு 4 கிராம், திப்பிலி 2 கிராம், ஏலம்1, லவங்கம் அரை கிராம் சர்க்கரை 8 கிராம் பொடித்து போட்டு வேளைக்கு 4 கிராம் அளவில் உண்டு வந்தால் இருமல் இரைப்பு முதலியவை நீங்கும். இளந்தளிர் இலைகளை 5 கிராம் அளவில் எடுத்து 200மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து 50மிலியாக சுண்டியபிறகு குடித்தால் மாதவிலக்கு காலங் களில் வரும் வயிற்றுவலி தீரும். நாக்குபூச்சி தொல்லை, ரத்தவாந்தி, வயிற்றுபுண், மூட்டுவலி, ஆஸ்துமா, பக்கவாதம், நாள்பட்ட காய்ச்சல், கண்நோய்கள், பித்தநோய்கள், சர்க்கரைநோய்கள் உள்ளவர்கள் குடித்து வந்தால் இந்த நோய்கள் கட்டுப்படும்.ஒரு கிராம் விதையை நாள்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. வேரை எரித்து சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து பூசினால் அம்மை தழும்புகள் நீங்கும்.

மூங்கில் அரிசி

சுமார் 40 ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் பூத்து பின்பு நெல் மணிபோல் காய்த்து அதிலிருந்து அரிசி கிடைக்கிறது. இந்த அரிசியை மலைவாழ் மக்கள் சேகரித்து பயன்படுத்துவதால் அதிக உடல்வலுவுடன் வாழ்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதை நாம் மறந்து போனதால் மூங்கில் அரிசி என்றால் ஏதோ ஒரு வகை அரிசி என நினைத்து விடுகின்றோம். காய்த்த பிறகு அந்த மரங்கள் காய்ந்து போகுகிறது. வாழ்நாளில் தன்னுடைய கடமையை நிறைவேற்றி வாழ்நாளை முடித்து கொள்ளும் மூங்கில் தன்னுடைய சந்ததியை வாழவைத்து தன்னுடைய வாழ்வை முடித்து கொள்கிறது.

மூங்கில் உப்பு என்பது அதன் கணுக்களிலிருந்து பெறப்படுகிறது. இந்த மூங்கில் உப்பை 5 கிராம் அளவில் நாள்தோறும் பயன்படுத்தி வந்தால் இதய படபடப்பு, தலைசுற்றல், வயிற்றுபுண், பித்தவாந்தி குணம் பெறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இதயம், வயிறு, கல்லீரல் வலிமை பெறும்.

இதைத்தான், உயிர்காற்றின் உறைவிடம் இறைவனின் அருட்கொடையாக விளங்குகிற மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது. எனவே மூங்கிலை வளர்த்தால் சுற்றுசூழலை காப்பாற்றலாம் என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வீடு தோறும் இரண்டு மூங்கிலை வளர்த்தால் போதும் காற்றுமண்டலம் முழுவதும் தூய்மையாகும். மனிதனுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படுகின்ற உயிர்காற்று(ஆக்சிஜன்) 292 கிலோ. ஒரு நாளைக்கு 800 கிராம் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவு ஆகும்.

ஒரு மூங்கில் குத்து ஓரு ஆண்டில் 309 கிலோ உயிர்காற்றை தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். மனிதனின் ஒரு நாள் தேவையை ஒரு மூங்கில் குத்து அளித்துவிடுகிறது. எனவே மூங்கிலை வளர்த்து மனிதகுலத்தை வாழ்விப்போம். என்கிறது அகத்தியர் குணவாடகம். இத்தகைய பெருமை வாய்ந்த மூங்கில் மரமே கிடையாது. அது ஒரு புல்வ கைதான் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மூங்கிலின் மருத்துவ குணத்தை அறிந்து அதன் பயன்பாட்டை நமக்கு சொல்லி சென்ற முன்னோர்கள் வழியை பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

பச்சை தங்கம்

மூங்கிலை இன்று உலகம் பச்சை தங்கம் என்று அழைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க பொருளாக உலகளவில் பரவி வருகிறது. இந்திய காடுகளில் 12.8 சதவீதம் மூங்கில் வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காலம்காலமாக மக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்தி வருகின்றனர். வலுவாகவும், நீண்டநாட்கள் கெட்டுபோகாமலும் இருப்பதால் இதற்கு தனி இடம் உண்டு. குடிசை வீடுகள் கட்டுவதிலிருந்து கட்டிடம் கட்டும் தொழிலுக்கு சாரம் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3349


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Empty Re: உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில்

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 9:15

மூங்கில் பற்றி இது வரை அறிந்திடாத தகவல் பகிர்வுக்கு நன்றி தோழா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Empty Re: உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Mar 2015 - 9:45

நல்ல பதிவு நன்றி அகமட்


உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில் Empty Re: உயிர்காற்றின் உறைவிடம் மூங்கில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum