Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 10:39 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 10:37 pm
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 10:34 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 10:32 pm
» கொள்ளைக்காரி
by rammalar Today at 10:29 pm
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 10:27 pm
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 10:25 pm
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat Sep 14, 2024 12:14 am
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri Sep 13, 2024 12:47 pm
» பல்சுவை-12
by rammalar Wed Sep 11, 2024 5:36 pm
» பல்சுவை- 11
by rammalar Tue Sep 10, 2024 8:01 pm
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:30 pm
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat Sep 07, 2024 12:25 pm
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:22 pm
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat Sep 07, 2024 12:19 pm
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat Sep 07, 2024 12:11 pm
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat Sep 07, 2024 12:08 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue Sep 03, 2024 9:57 pm
» பல்சுவை
by rammalar Mon Sep 02, 2024 12:35 am
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun Sep 01, 2024 3:48 pm
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat Aug 31, 2024 11:47 pm
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat Aug 31, 2024 11:42 pm
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat Aug 31, 2024 11:38 pm
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri Aug 30, 2024 9:46 am
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Fri Aug 30, 2024 12:00 am
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu Aug 29, 2024 11:43 pm
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu Aug 29, 2024 11:34 pm
» புத்தன் யார்?
by rammalar Thu Aug 29, 2024 5:23 pm
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu Aug 29, 2024 5:21 pm
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu Aug 29, 2024 5:17 pm
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu Aug 29, 2024 5:16 pm
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
இலையில் இருக்கு நலம்!
Page 1 of 1
இலையில் இருக்கு நலம்!
கருவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன. மலையாளத்தில் கறிவேப்பு, கன்னடத்தில் கறிபீவு, தெலுங்கில் கறிபாகு, வடமொழியில் காலசாகம் என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உணவாக இந்த மருந்திலை அறிமுகப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கருவேப்பிலை இல்லாத காய்கறிக்கடை இருப்பதில்லை. பெட்டிக்கடைகளின் சில்லறை காய்கறி விற்பனைகளிலும் கருவேப்பிலை அவசியம் இடம்பிடிக்கிறது. தமிழகத்து அத்தனை மார்க்கெட்டுகளுக்கும் லாரிகளில் கருவேப்பிலைகள் வந்திறங்குகிறது. அசைவம், சைவம் என அத்தனை சமையலிலும் கருவேப்பிலை இருப்பதால், மொத்த மக்களும் இந்த இலையை வாங்கிப்போக மறப்பதில்லை. சிறு அளவுகளில் இனிப்பு, துவர்ப்புச் சுவையில் வாசமிகு நாட்டுக்குலையும், விரிந்த இலைகளாக குறைந்த வாசனையில் கூடுதல் கசப்புடன் காட்டுக்குலை எனும் மலைக்குலையும் என இருவேறு நிலைகளில் இந்த கருவேப்பிலை மொத்த வியாபாரிகளுக்கு வந்து, சில்லறை வியாபாரிகளைச் சேர்கிறது.
இதில் நாட்டுக்குலை வீட்டுச் சமையலுக்கும், காட்டுக்குலை மருந்திற்கும் போகிறது. கருவேப்பிலையில் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அத்தனையும் பயனாகிறது. உணவை மணக்க வைக்கிற மகத்தான கருவேப்பிலை, உடல் நலத்தை நிலைக்கச் செய்கிறது. தாளிப்பில் குழம்பைச் சேர்கிற கருவேப்பிலையை உண்ணும் தட்டிலிருந்து எடுத்து ஒதுக்கிப்போடுகிறோம். மோரைப் பருகிவிட்டு முதலில் வெளியில் துப்புவது கருவேப்பிலையைத்தான். ஒவ்வொரு உணவோடும் இந்த உயிர்ச்சத்து மிக்க கறிவேப்பிலையை கலந்துண்பது ஆரோக்கியம்.
கருவேப்பிலை நமக்குள் நல்ல ருசியுணர்வுடன் பசி, செரிமானம் நிறைக்கிறது. கறிவேப்பிலையை ஜீரண உறுப்பின் நண்பன் என்கிறார்கள். தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ மேன்மைகள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது. இது வயிற்று வாயுவை பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். கருவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகாய் சேர்த்தரைத்த துவையல் சாப்பிட குடல் பலம் பெறும்.
பித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீக்கும், பித்த மிகுதியால் வந்த பைத்தியத்தையே இந்த கருவேப்பிலை போக்கும் வலிமை கொண்டிருக்கிறது என சித்தா வாசுட நூல் தெரிவிக்கிறது. இலை, பட்டை, வேரில் செய்த கசாயத்தை குடித்தால் பித்தமும், வாந்தியும் போகுமாம். நிழலில் உலர்த்திய, கருவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி, சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட மலக்கட்டு முதல் பேதி, கழிச்சல் வரை அத்தனை வயிற்று உபாதைகளும் சரியாகும் என்கிறது நாட்டு வைத்தியம்.
இன்னும், குடல் கிருமிகள் அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது. தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் அதிசயச் சக்தி கருவேப்பிலைக்குள் இருக்கிறது. கை,கால் நடுக்கங்கள் நீக்கி, இளமையை உடலுக்குள் நிரப்பும் ரகசியத்தையும் இது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் சுகம் தரும் என்கின்றனர். இன்னும் கூடுதலாக, இதயநோயைத் தடுப்பதுடன், புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த இலைக்கு இருக்கிறது.
கருவேப்பிலையில் 63சதவீத நீர், 6 சதவீத புரதம், ஒரு சதவீத கொழுப்பு, 4 சதவீத தாது உப்பு, 6.4 சதவீத நார்ச்சத்து, 18.7ச தவீத மாவுச்சத்து என அநேக திறன்கள் உள்ளன. நூறுகிராம் கருவேப்பிலையில் 830 மி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 221 மிகி, மக்னீசியம், 132 மிகி, இரும்பு, 0.21 மிகி, தாமிரம், 81 மிகி, கந்தகம், 198 மிகி, குளோரின் சத்துகளும் உள்ளன. இதுதவிர இந்த இலைகளில் வைட்டமின்ஏ அதிகளவில் இருக்கிறது. மருந்துப் பொடியாக, உணவு எண்ணெய்யாக இன்னும் பல அவதாரங்களில் முகம் காட்டும் இந்த கருவேப்பிலை இயற்கை நமக்களித்த
அற்புதப் பரிசு.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3441
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்
» ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» நலம் தரும் நடை..!
» வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்
» ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» நலம் தரும் நடை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|