சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
by rammalar Today at 14:29

» புரட்டாசி மாதம் - கவிதை
by rammalar Today at 14:20

» மழை - கவிதை
by rammalar Today at 14:18

» வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்...
by rammalar Today at 14:13

» முதிய தம்பதிகளின் சகிப்புத் தன்மை! - கவிதை
by rammalar Today at 14:11

» மாற்றியவர் யாரோ- ஒரு பக்க கதை
by rammalar Today at 14:10

» கண்மூடித்தனம் - ஒரு பக்க கதை
by rammalar Today at 13:57

» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
by rammalar Today at 13:56

» படத்திற்கு கவிதை...
by rammalar Today at 13:53

» பள்ளிப் பருவம் - கவிதை
by rammalar Today at 13:52

» இருண்ட வாழ்வின் ஒளியாக வந்தவள்! - கவிதை
by rammalar Today at 13:51

» பேல்பூரி - (பல சரக்கு-இணையத்தில் ரசித்தவை)
by rammalar Today at 0:39

» கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு - விடுகதைகள்
by rammalar Yesterday at 13:51

» திருமண ஆசை வந்துடுச்சி..!
by rammalar Yesterday at 9:01

» கொழுப்பு இல்லை தாயி, சுகர்தான் 350 இருக்கு!
by rammalar Yesterday at 8:55

» அரிசி தரும் பயன்கள்
by rammalar Yesterday at 8:34

» கொலு- டிப்ஸ்
by rammalar Yesterday at 8:32

» இணையத்தில் ரசித்த பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 28 Sep 2023 - 16:25

» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by rammalar Thu 28 Sep 2023 - 15:24

» அகங்காரத் தீ - நீதி போதனை
by rammalar Thu 28 Sep 2023 - 15:11

» பல சரக்கு
by rammalar Tue 26 Sep 2023 - 20:42

» கல்யாணமா... எனக்கா..? - விழிகள் விரிக்கும் த்ரிஷா
by rammalar Tue 26 Sep 2023 - 20:28

» கவிமாடம் - கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 16:26

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by rammalar Tue 26 Sep 2023 - 11:25

» கோள்களை வெல்வோம் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:19

» மரங்கள் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:08

» நடிகை நிமிஷா விஜயன்
by rammalar Tue 26 Sep 2023 - 2:52

» விக்ரமாதித்யன் கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 2:37

» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
by rammalar Tue 26 Sep 2023 - 2:18

» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by rammalar Tue 26 Sep 2023 - 2:08

» உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
by rammalar Mon 25 Sep 2023 - 19:23

» வரும் ஆனா வராது தம்பி! -வலைவீச்சில் ரசித்தவை
by rammalar Mon 25 Sep 2023 - 19:00

» அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
by rammalar Mon 25 Sep 2023 - 18:47

» போனுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு!!
by rammalar Mon 25 Sep 2023 - 16:23

» குழந்தைப் பருவம்
by rammalar Mon 25 Sep 2023 - 16:07

ஒன்றல்ல... பதினைந்து+ ! Khan11

ஒன்றல்ல... பதினைந்து+ !

Go down

ஒன்றல்ல... பதினைந்து+ ! Empty ஒன்றல்ல... பதினைந்து+ !

Post by ahmad78 Tue 16 Jun 2015 - 14:16

ஒன்றல்ல... பதினைந்து+ ! Ht3623‘‘‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்' என்பது ஒரு நோயின் தனிப்பட்ட பெயர் போலத்தான் தெரியும். ஆனால், பதினைந்துக்கும்  மேற்பட்ட குறைபாடுகள் இந்த ஒற்றைப் பெயரின் பின்னால் மறைந்திருக்கிறது’’ என்கிறார் வாத இயல் (Rheumatology)  சிறப்பு மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி. ஏன்? எதற்கு? எப்படி? இதோ... அவரே விளக்குகிறார்.

வேலியே பயிரை மேய்ந்தால்...


பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய் செல்கள் போன்றவற்றின் தாக்குதலாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோல அந்நிய  காரணிகள் நம்மைத் தாக்க முயலும்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட்டுகள்தான் அவற்றை  எதிர்த்துப் போராடி நம்மைக் காப்பாற்றுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் Immune என்று ஆங்கிலத்தில்  சொல்கிறோம். எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு எதிராகவே சில நேரங்களில் சண்டையிட ஆரம்பித்துவிடும். நம்மைக் காக்க  வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி, நமக்கு எதிராக திரும்புவதையே ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்' (Auto immune disorder)  என்கிறோம். அதாவது வேலியே பயிரை மேய்ந்தால்? அதுதான் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்! 

இரண்டு செல்கள்ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள்தான் போர் வீரர்கள் போல நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன  என்று பார்த்தோம். இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமாக சொன்னால் வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட்டுகளில்  B, T என இரண்டு செல்கள் இருக்கின்றன. இந்த இரண்டு செல்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றன. பாக்டீரியா,  வைரஸ் போன்ற நுண்கிருமிகளிடமிருந்து மட்டும் அல்லாமல் ரத்ததானம் பெறும்போது வேறு ரத்த வகையைக் கொடுத்தால்  உடல் ஏற்றுக் கொள்ளாததற்கும் இந்த B,T செல்களின் நுண்ணுணர்வே காரணம். 

ரத்த வகை பொருத்தம் பார்த்து உறுப்பு தானம் பெறும்போதும், ‘இது என்னுடைய உறுப்பு அல்ல’ என்று அடம்பிடித்து உறுப்பு  மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்குத் தலைவலியாக இருப்பதும் இந்த இரண்டு செல்கள்தான். அதனால்தான் உறுப்பு  மாற்று சிகிச்சை செய்த பிறகு, உடலை சமாதானப்படுத்துவதுபோல சில மருந்துகளைக் கொடுத்து அதன் வேகத்தைத்  தணிக்கிறார்கள். ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டரில் இந்த இரண்டு செல்களே நமக்கு எதிராகத் திரும்பி, பிரச்னையைக்  கொடுக்கின்றன. 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை...

ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். இது சாதாரண  காயமாகவோ, ரத்தம், நரம்பு, தைராய்டு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் பெரிய  நோயாகவோ இருக்கலாம்.  மூளையில் ஏற்படும் மல்ட்டிபிள் ஸ்கிளிரோசிஸ், தோலில் உண்டாகிற சோரியாசிஸ், தசைகளை  பாதிக்கும் பாலிமயோசைட்டிஸ், எலும்போடு எலும்பாக தோல் ஒட்டிக் கொள்ளும் ஸ்க்ளிரோடெர்மா என நிறைய வகைகள்  இதில் உள்ளன. கணையத்தில் இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் நீரிழிவு கூட ஒருவகையில் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்தான்.  இவற்றில் மூட்டு மற்றும் தசை நோய் சம்பந்தப்பட்ட Rheumatology பிரச்னைகள்தான் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரில்  பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

பெண்களைத் தாக்கும் லூபஸ்...

இந்தியாவைப் பொறுத்தவரை மூட்டு மற்றும் தசை நோய் பிரச்னையில் சிஸ்டமிக் லூபஸ்(Lupus) என்பது அதிகம். இது  கொஞ்சம் ஆபத்தான நோயும் கூட என்பதால் கவனம் அவசியம். தமிழில் இதை முகப்புற்று என்கிறார்கள். 2, 3 வயதிலெல்லாம்  கூட  லூபஸ் பாதிப்பு வரலாம். குறிப்பாக, பெண்களை லூபஸ் நோய் அதிகமாகத் தாக்குகிறது. உடலெல்லாம் தோல் உரிந்து  சிவந்து தெரியும். லூபஸ் பெண்களை அதிகம் தாக்குவதற்கு ஹார்மோன் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்  ஆய்வாளர்கள். 

காரணம் என்ன?

ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதனால் இந்த நோயைக் குணப்படுத்தவும்  முடியவில்லை. மற்ற நோய்களைப் போல் அறிகுறிகளை வைத்தும் கண்டுபிடிப்பது சிரமம். சாதாரணமாக உடல்நலக்  குறைபாட்டுக்கு மருத்துவரிடம் போகும்போது தெரிந்தால்தான் உண்டு. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரில் பொதுவான அம்சமாக  மரபியல் காரணங்கள் இருக்கின்றன. அதனால், நம் குடும்பத்தில் யாருக்கேனும் இக்குறைபாடு இருந்தால் அதற்கேற்ற  பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. 

இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட நோய்கள் இருப்பதால் அத்தனை சோதனைகளும் செய்துகொள்வது சாத்தியம் இல்லை. நம்  குடும்பத்தில் ரத்தம் தொடர்பான குறைபாடு ஒருவருக்கு இருந்தால் நாமும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதே போதுமானது.  நெருங்கிய உறவுகளில் திருமணத்தைத் தவிர்ப்பதன் மூலமும் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரைத் தடுக்க முடியும். 

தமிழ்நாடு நிலவரம்...

மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் எச்சில் மூலமாக ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic fever)  முன்பு ஏற்பட்டது.  எச்சிலில் இருக்கும் ஸ்ட்ரெப்டாகாக்கைல் என்ற பாக்டீரியாவின் புரதத்துக்கும் இதயத்தில் இருக்கும் மயோஸின் என்கிற  புரதத்துக்கும் அடையாளம் தெரியாமல் நம்முடைய எதிர்ப்பு சக்தி இதயத்தை தாக்கியதால் இந்த காய்ச்சல் வந்தது. இப்போது  ருமாட்டிக் காய்ச்சலை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டோம். 

அதேபோல, ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம் நாட்டில்  நூறில் ஒரு சதவிகிதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இதன் பாதிப்பு அதிகம் என்பதால்,  மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளையும் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதே நல்ல மருந்துகள்  வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பலாம்.

தடை ஒன்றும் இல்லை!

ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய நோய்தானே தவிர, கவலைப்பட வேண்டிய விஷயம்  அல்ல. மற்றவர்களைப்போல பள்ளி செல்லவோ, வேலைக்குப் போகவோ, திருமணம் செய்யவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ  இந்த நோய் தடையாக இருக்காது. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரை கட்டுப்படுத்த ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள், ஊசிகள்  இப்போது இருக்கின்றன. தகுந்த மருத்துவரின் பரிந்துரையின்படி, சரியான முறையில் எடுத்துக் கொண்டால் இதைக் கட்டுக்குள்  வைத்துக் கொள்ள முடியும். நீரிழிவுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுபோல தொடர்ச்சியான சிகிச்சை இதற்கு  அவசியம். அதைவிட குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நோயாளிக்கு மிகவும் அவசியம். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தாலே ஒரு  நோய் பாதி குணமானதுபோல்தான்!


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3633


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum