Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அஜீரணத்தை விரட்டும் அருமருந்து
Page 1 of 1
அஜீரணத்தை விரட்டும் அருமருந்து
நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால் செரிமானம் நடைபெறுகிறது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.உணவு செரிப்பது எப்படி?நாம் உண்ணும் உணவானது, நாக்கில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. நாக்கினால் உணவை புரட்டி, பற்களால் அரைத்ததும், தொண்டை வழியாக இரைப்பைக்கு செல்கிறது.இரைப்பைக்குள் உணவு குறைந்தது 4 மணி நேரமாவது இருக்கும்.
இரைப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள் பல்வேறு மடிப்பு நிலையில் காணப்படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்குமாக சூழ்ந்து இருக்கும். அந்த தசைகளின் உதவியால், இரைப்பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்கப்படும். இரைப்பையில் இருந்து வெளியாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரையாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக சிறுகுடலுக்குள் தள்ளப்படும். அங்குதான் உணவு முற்றிலும் ஜீரணமாகிறது.
உணவில் இருக்கும் புரதம், சர்க்கரை மாவு, நிணநீர் போன்றவை சிறுகுடலினால் ஜீரணிக்கப்பட்டு, அவை குடல் உறிஞ்சிகளால் ரத்தத்துக்குள் செலுத்தப்படுகின்றன. இதற்கென்று கணையத்தில் தக்க அமிலங்கள் சுரக்கின்றன.சிறுகுடலின் தொடக்கத்தில் இடதுபுறமாக கணையம் இருக்கிறது. கல்லீரல் பித்தத்தை சுரக்கிறது. கணையத்துக்கு ரத்தம் செல்லும்போது, இச்சுரப்பு கணையத்தை சுரக்கச் செய்கிறது. இந்த சுரப்புகள் ‘என்சைம்’ எனப்படும் வேதிப்பொருளாகும்.
என்சைம்களாலேயே நம் உடலில் ஜீரணம் நடைபெறுகிறது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்பதால், குடலுக்கு பலமடங்கு உணவு சத்துக்கள் கிடைக்கின்றன. இதில் செல்லும் உணவானது ஜீரணமாகி, கல்லீரலில் சத்தான அமிலங்களாக சேமிக்கப்படுகின்றன.மிகுதியாக உள்ளவை, ரத்தத்தின் கலவையாக மற்ற உறுப்புகளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்துக்கள் நீங்கிய திப்பிகள் பெருங்குடலுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.
மலத்துக்கு ஈரம் கொடுப்பதற்கு வேண்டிய அளவு போக, மிகுதியான நீர்ப்பகுதி ரத்தத்தில் நீக்கப்படும்.மேலும் கடினமான கழிவுகள், பித்தம், பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் எல்லாம் சளியோடு சேர்ந்து, பெருங்குடலில் உள்ள தசைகளால் ஆசனத்துக்குள் தள்ளப்படும். இது, பொதுவாக நடைபெறும் உணவு செரிமானமாகும்.மேற்கூறிய உறுப்புகளில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரிமானம் ஆவதில் குளறுபடி ஏற்படும்.
ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு சக்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும். நாக்கு ருசிக்காக அடிக்கடி சாப்பிடாமல், பசித்தபின் உணவருந்த வேண்டும். அதிகளவு உணவு, அடிக்கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாவு சத்து உணவுகளை அதிகம் சேர்ப்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகளை நிறைய சாப்பிடுவதால் நமக்கு ஜீரண கோளாறுகள் வரலாம்.
ஜீரண கோளாறை தடுப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய இடர்பாடுகளை களைய, ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன.1. ஆப்பிள் பழத்தை அப்படியே சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். 2. திராட்டை பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்கலாம்.கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து சாப்பிடலாம். கொத்தமல்லி விதையை வறுத்து சாப்பிட்டால், ஜீரணமாகாமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முதலியவற்றை 100 கிராம் எடுத்து, இவற்றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
ஒரு பங்கு வசம்புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷாயமாக வடிகட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும்.ஒரு துண்டு இஞ்சியை நன்றாக அரைத்து, ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, இலவங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழ பழகலாமே!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3641
இரைப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள் பல்வேறு மடிப்பு நிலையில் காணப்படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்குமாக சூழ்ந்து இருக்கும். அந்த தசைகளின் உதவியால், இரைப்பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்கப்படும். இரைப்பையில் இருந்து வெளியாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரையாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக சிறுகுடலுக்குள் தள்ளப்படும். அங்குதான் உணவு முற்றிலும் ஜீரணமாகிறது.
உணவில் இருக்கும் புரதம், சர்க்கரை மாவு, நிணநீர் போன்றவை சிறுகுடலினால் ஜீரணிக்கப்பட்டு, அவை குடல் உறிஞ்சிகளால் ரத்தத்துக்குள் செலுத்தப்படுகின்றன. இதற்கென்று கணையத்தில் தக்க அமிலங்கள் சுரக்கின்றன.சிறுகுடலின் தொடக்கத்தில் இடதுபுறமாக கணையம் இருக்கிறது. கல்லீரல் பித்தத்தை சுரக்கிறது. கணையத்துக்கு ரத்தம் செல்லும்போது, இச்சுரப்பு கணையத்தை சுரக்கச் செய்கிறது. இந்த சுரப்புகள் ‘என்சைம்’ எனப்படும் வேதிப்பொருளாகும்.
என்சைம்களாலேயே நம் உடலில் ஜீரணம் நடைபெறுகிறது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்பதால், குடலுக்கு பலமடங்கு உணவு சத்துக்கள் கிடைக்கின்றன. இதில் செல்லும் உணவானது ஜீரணமாகி, கல்லீரலில் சத்தான அமிலங்களாக சேமிக்கப்படுகின்றன.மிகுதியாக உள்ளவை, ரத்தத்தின் கலவையாக மற்ற உறுப்புகளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்துக்கள் நீங்கிய திப்பிகள் பெருங்குடலுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.
மலத்துக்கு ஈரம் கொடுப்பதற்கு வேண்டிய அளவு போக, மிகுதியான நீர்ப்பகுதி ரத்தத்தில் நீக்கப்படும்.மேலும் கடினமான கழிவுகள், பித்தம், பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் எல்லாம் சளியோடு சேர்ந்து, பெருங்குடலில் உள்ள தசைகளால் ஆசனத்துக்குள் தள்ளப்படும். இது, பொதுவாக நடைபெறும் உணவு செரிமானமாகும்.மேற்கூறிய உறுப்புகளில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரிமானம் ஆவதில் குளறுபடி ஏற்படும்.
ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு சக்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும். நாக்கு ருசிக்காக அடிக்கடி சாப்பிடாமல், பசித்தபின் உணவருந்த வேண்டும். அதிகளவு உணவு, அடிக்கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாவு சத்து உணவுகளை அதிகம் சேர்ப்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகளை நிறைய சாப்பிடுவதால் நமக்கு ஜீரண கோளாறுகள் வரலாம்.
ஜீரண கோளாறை தடுப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய இடர்பாடுகளை களைய, ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன.1. ஆப்பிள் பழத்தை அப்படியே சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். 2. திராட்டை பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்கலாம்.கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து சாப்பிடலாம். கொத்தமல்லி விதையை வறுத்து சாப்பிட்டால், ஜீரணமாகாமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முதலியவற்றை 100 கிராம் எடுத்து, இவற்றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
ஒரு பங்கு வசம்புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷாயமாக வடிகட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும்.ஒரு துண்டு இஞ்சியை நன்றாக அரைத்து, ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, இலவங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழ பழகலாமே!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3641
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அஜீரணத்தை போக்கும் இஞ்சி
» பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
» தயிர் அருமருந்து
» தயிர் அருமருந்து
» தயிர் என்ற அருமருந்து
» பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
» தயிர் அருமருந்து
» தயிர் அருமருந்து
» தயிர் என்ற அருமருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|