Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
ஓடி விளையாடு பாப்பா!
3 posters
ஓடி விளையாடு பாப்பா!
ஆக்டிவ் கிட்ஸ்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ஆட்டம் போட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள் குழந்தைகள். இந்த விடுமுறை கால மகிழ்ச்சி, ஆண்டு முழுவதும் உடன் வந்தால் கல்வித்திறனும் ஆரோக்கியமும் குழந்தைகளிடம் மேம்படும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் உடல் சார்ந்த செயல்பாடு உள்ள குழந்தைகளிடம் நல்ல மனவளர்ச்சி இருப்பதும், செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் மன அழுத்தம் இருப்பதும்ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடந்த இந்த ஆய்வு 7ம் வகுப்பு படிக்கும் 4 ஆயிரத்து 600 மாணவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதே வகுப்பு மாணவர்கள் 8ம் வகுப்புக்குள் நுழைகிறபோது படிப்பின் மீதுள்ள அழுத்தம் காரணமாக உடல் சார்ந்த செயல்பாடு குறைவதையும், அதன் எதிரொலியாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் ஆய்வை நடத்திய ராட் கே டிஷ்மண் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த உண்மையை ஆய்வு நடத்தித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. துறுதுறுவென இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. இந்த இயல்பை மீறி மந்தமாக இருக்கும்பட்சத்தில்தான் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஒருவரின் ஆயுளைத் தீர்மானிப்பதில் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான உணவுகளும் கல்வியைவிட முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற உண்மையை சங்கடப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார் கண்ணன் புகழேந்தி.
‘‘Disease of inactivity என்கிற உடல்சார்ந்த செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் பருமன், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு என்று பல நோய்கள் வருகின்றன. 2000ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரைவிட ஆயுள் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கல்வி தருகிற மன அழுத்தத்தால் இளவயதிலேயே நீரிழிவு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஒரு போரால் இழக்கக்கூடிய மக்களுக்கு இணையாக பல்வேறு நோய்களுக்கு மக்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே தவிர்க்கக் கூடிய நோய்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
‘விளையாடுவதன் மூலம் நாம் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்’ என்கிறார் விவேகானந்தர். நாம் வாழும் உலகத்தையே சொர்க்கமாக மாற்றிக் கொள்ளக் கூடிய மனநிலையை விளையாட்டு நமக்குத் தருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். ‘காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு’ என்று படிப்புக்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பாரதியார் ஒரு டாக்டரை போலவே கூறியிருக்கிறார். இன்றோ குழந்தைகள் மாலை நேரத்தில் டியூஷனில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும், அவர்களின் எதிர்காலம் குறித்த பயத்தாலும் தேவையற்ற அழுத்தத்தைக் குழந்தைகளிடம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்த பதற்றம் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகிறது.தைரியம் அற்ற பூஞ்சை மனநிலையோடே இன்றைய குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சமீபத்தில் டி.வி. ரிமோட்டை கொடுக்கவில்லை என்று ஒரு ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
குழந்தைகளின் கல்வியைப் போலவே, அவர்களது ஆரோக்கியமான எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது விளையாட்டுக்காகவோ, உடற்பயிற்சிக்காகவோ ஒதுக்க வேண்டும். படித்துக் கொண்டே இருந்தால் நல்ல மார்க் வாங்குவார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், விளையாட்டுக்குப் பிறகு படித்தால், அந்தக் குழந்தை இன்னும் கவனமுடன் நன்றாகப் படிக்கும். காரணம் மனமும் உடலும் வேறு வேறு அல்ல. மனதின் சந்தோஷம் அதிகரிக்கும்போது கல்வித்திறன் மேலும் அதிகமாகும். விளையாடுகிற குழந்தைகளுக்கு உடல்நலம் பற்றிய உணர்வு வந்துவிடுவதால் தீய பழக்கங்களும் அவர்களை ஆட்கொள்வதில்லை’’ என்கிறார்.
குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன் இதில் இன்னொரு கோணத்தை முன் வைக்கிறார். ‘‘இந்தப் பிரச்னையில் பலருக்கும் பங்கு இருக்கிறது. பெற்றோரை மட்டுமே குறை சொல்ல முடியாது. நகா்மயமான வாழ்க்கை, பணத்தை நோக்கிய ஓட்டம், இட வசதியின்மை, கல்வி மீதுள்ள அழுத்தம் போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. குழந்தைகள் விளையாட வீடுகளில் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் தராது.
எத்தனையோ பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாமல் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அப்படியே விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளில் மண் தரை இல்லாமல் சிமென்ட் தரையோ டைல்ஸ் தரையையோதான் பார்க்க முடிகிறது. விளையாட்டு வகுப்புகளும் முறையாக நடப்பதில்லை.பரம்பரை ரீதியான காரணங்கள், குடும்பச் சூழல், பள்ளிச்சூழல் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதால் இந்த ஆய்வை வேறு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.
மன அழுத்தம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, வீட்டில் சேர்ந்து சாப்பிடுகிறார்களா, வாரம் ஒருநாளாவது வெளியிடங்களுக்குச் சென்று வருகிறார்களா, அதற்கு முன்பு அவர்களின் வார நடவடிக்கைகள் என்ன, முன்பே மன அழுத்தத்தின் அறிகுறி இருந்ததா போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்படுவதற்காகத்தான் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அவர்களின் இயல்புக்கு எதிராக முடக்கி வைத்து படிப்பைத் திணிக்கிறபோது உடலின் அடிப்படை நோக்கமே பாதிக்கப்படுகிறது.
இதனால்தான் தேவையில்லாத விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு கூறியிருக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவது மருத்துவரீதியாக உண்மைதான். மன அழுத்த ஹார்மோன்கள் குறைவதைப் போலவே மற்ற நல்ல பழக்கங்களையும் விளையாட்டு கற்றுத் தருகிறது.
பிடிக்காதவர்களுடனும் அனுசரித்துப் போகிற குழு உணர்வையும், தோல்விகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும், விட்டுக் கொடுக்கும் உணர்வையும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. விழுந்தால்கூட எப்படி தற்காத்துக் கொண்டு விழ வேண்டும், விழுந்தாலும் எப்படி எழ வேண்டும் என்பதையெல்லாம் தாமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். சமூக ரீதியாக நாம் கற்றுக் கொடுக்க முடியாத பல விஷயங்களை விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. அதனால், குழந்தைகளைக் கொஞ்சம் விளையாடவும் விடுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3680

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ஆட்டம் போட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள் குழந்தைகள். இந்த விடுமுறை கால மகிழ்ச்சி, ஆண்டு முழுவதும் உடன் வந்தால் கல்வித்திறனும் ஆரோக்கியமும் குழந்தைகளிடம் மேம்படும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் உடல் சார்ந்த செயல்பாடு உள்ள குழந்தைகளிடம் நல்ல மனவளர்ச்சி இருப்பதும், செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் மன அழுத்தம் இருப்பதும்ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடந்த இந்த ஆய்வு 7ம் வகுப்பு படிக்கும் 4 ஆயிரத்து 600 மாணவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதே வகுப்பு மாணவர்கள் 8ம் வகுப்புக்குள் நுழைகிறபோது படிப்பின் மீதுள்ள அழுத்தம் காரணமாக உடல் சார்ந்த செயல்பாடு குறைவதையும், அதன் எதிரொலியாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் ஆய்வை நடத்திய ராட் கே டிஷ்மண் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த உண்மையை ஆய்வு நடத்தித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. துறுதுறுவென இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. இந்த இயல்பை மீறி மந்தமாக இருக்கும்பட்சத்தில்தான் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஒருவரின் ஆயுளைத் தீர்மானிப்பதில் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான உணவுகளும் கல்வியைவிட முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற உண்மையை சங்கடப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார் கண்ணன் புகழேந்தி.
‘‘Disease of inactivity என்கிற உடல்சார்ந்த செயல்பாடு குறைந்த குழந்தைகளிடம் பருமன், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு என்று பல நோய்கள் வருகின்றன. 2000ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரைவிட ஆயுள் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கல்வி தருகிற மன அழுத்தத்தால் இளவயதிலேயே நீரிழிவு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஒரு போரால் இழக்கக்கூடிய மக்களுக்கு இணையாக பல்வேறு நோய்களுக்கு மக்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே தவிர்க்கக் கூடிய நோய்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
‘விளையாடுவதன் மூலம் நாம் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்’ என்கிறார் விவேகானந்தர். நாம் வாழும் உலகத்தையே சொர்க்கமாக மாற்றிக் கொள்ளக் கூடிய மனநிலையை விளையாட்டு நமக்குத் தருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். ‘காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு’ என்று படிப்புக்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பாரதியார் ஒரு டாக்டரை போலவே கூறியிருக்கிறார். இன்றோ குழந்தைகள் மாலை நேரத்தில் டியூஷனில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும், அவர்களின் எதிர்காலம் குறித்த பயத்தாலும் தேவையற்ற அழுத்தத்தைக் குழந்தைகளிடம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்த பதற்றம் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகிறது.தைரியம் அற்ற பூஞ்சை மனநிலையோடே இன்றைய குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சமீபத்தில் டி.வி. ரிமோட்டை கொடுக்கவில்லை என்று ஒரு ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
குழந்தைகளின் கல்வியைப் போலவே, அவர்களது ஆரோக்கியமான எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது விளையாட்டுக்காகவோ, உடற்பயிற்சிக்காகவோ ஒதுக்க வேண்டும். படித்துக் கொண்டே இருந்தால் நல்ல மார்க் வாங்குவார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், விளையாட்டுக்குப் பிறகு படித்தால், அந்தக் குழந்தை இன்னும் கவனமுடன் நன்றாகப் படிக்கும். காரணம் மனமும் உடலும் வேறு வேறு அல்ல. மனதின் சந்தோஷம் அதிகரிக்கும்போது கல்வித்திறன் மேலும் அதிகமாகும். விளையாடுகிற குழந்தைகளுக்கு உடல்நலம் பற்றிய உணர்வு வந்துவிடுவதால் தீய பழக்கங்களும் அவர்களை ஆட்கொள்வதில்லை’’ என்கிறார்.
குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன் இதில் இன்னொரு கோணத்தை முன் வைக்கிறார். ‘‘இந்தப் பிரச்னையில் பலருக்கும் பங்கு இருக்கிறது. பெற்றோரை மட்டுமே குறை சொல்ல முடியாது. நகா்மயமான வாழ்க்கை, பணத்தை நோக்கிய ஓட்டம், இட வசதியின்மை, கல்வி மீதுள்ள அழுத்தம் போன்ற பல காரணங்களால் குழந்தைகளின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. குழந்தைகள் விளையாட வீடுகளில் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் தராது.
எத்தனையோ பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாமல் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அப்படியே விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளில் மண் தரை இல்லாமல் சிமென்ட் தரையோ டைல்ஸ் தரையையோதான் பார்க்க முடிகிறது. விளையாட்டு வகுப்புகளும் முறையாக நடப்பதில்லை.பரம்பரை ரீதியான காரணங்கள், குடும்பச் சூழல், பள்ளிச்சூழல் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதால் இந்த ஆய்வை வேறு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.
மன அழுத்தம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, வீட்டில் சேர்ந்து சாப்பிடுகிறார்களா, வாரம் ஒருநாளாவது வெளியிடங்களுக்குச் சென்று வருகிறார்களா, அதற்கு முன்பு அவர்களின் வார நடவடிக்கைகள் என்ன, முன்பே மன அழுத்தத்தின் அறிகுறி இருந்ததா போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்படுவதற்காகத்தான் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அவர்களின் இயல்புக்கு எதிராக முடக்கி வைத்து படிப்பைத் திணிக்கிறபோது உடலின் அடிப்படை நோக்கமே பாதிக்கப்படுகிறது.
இதனால்தான் தேவையில்லாத விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு கூறியிருக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவது மருத்துவரீதியாக உண்மைதான். மன அழுத்த ஹார்மோன்கள் குறைவதைப் போலவே மற்ற நல்ல பழக்கங்களையும் விளையாட்டு கற்றுத் தருகிறது.
பிடிக்காதவர்களுடனும் அனுசரித்துப் போகிற குழு உணர்வையும், தோல்விகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும், விட்டுக் கொடுக்கும் உணர்வையும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. விழுந்தால்கூட எப்படி தற்காத்துக் கொண்டு விழ வேண்டும், விழுந்தாலும் எப்படி எழ வேண்டும் என்பதையெல்லாம் தாமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். சமூக ரீதியாக நாம் கற்றுக் கொடுக்க முடியாத பல விஷயங்களை விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. அதனால், குழந்தைகளைக் கொஞ்சம் விளையாடவும் விடுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3680

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஓடி விளையாடு பாப்பா!
பயனுள்ள பதிவு முஹைதீன் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓடி விளையாடு பாப்பா!
நல்ல பகிர்வு...
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பகிர்வு.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பகிர்வு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

» ஓடி விளையாடு பாப்பா.
» தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி பாப்பா வேணும..?
» பாப்பா! பாப்பா! பாரம்மா! – (சிறுவர் பாடல்)
» குட்டிப் பாப்பா யார் பாப்பா
» குட்டிப் பாப்பா யார் பாப்பா
» தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி பாப்பா வேணும..?
» பாப்பா! பாப்பா! பாரம்மா! – (சிறுவர் பாடல்)
» குட்டிப் பாப்பா யார் பாப்பா
» குட்டிப் பாப்பா யார் பாப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|