Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஓய்வு பெறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Page 1 of 1
ஓய்வு பெறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஓய்வு பெறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்த பத்மநாபனுக்கு வயது 60. தான் ஓய்வு பெற்ற சமயத்தில் தன் பிள்ளைகளின் கல்வி, அவர்களின் திருமணம், தனது ஓய்வுக்காலத் தேவைக்கான சேமிப்பு என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தவர், ஓய்வு பெற்றபிறகு தனக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை மட்டும் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, வேலை பார்த்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்ததால், தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் விட்ட அவருக்கு, ஓய்வு பெற்றபிறகும் அந்த யோசனை வரவே இல்லை.
ஆனால், ஓய்வு பெற்ற ஒன்றிரண்டு ஆண்டுகளில் பத்மநாபனுக்கு திடீரென மாரடைப்பு வர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடும்ப உறுப்பினர்களுக்கு அப்பா பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் இல்லையே என்பது அப்போது விளங்க, அவரது ஓய்வுக்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தின் ஒருபகுதியை எடுத்து அறுவை சிகிச்சையை முடித்தார்கள்.
வேலை செய்த நிறுவனத்தில் இருந்த குரூப் இன்ஷூரன்ஸை, ஓய்வின் போது தனிநபர் பாலிசியாக மாற்றியிருந்தால் ஓய்வுக்காலத் தேவைக்காக வைத்திருந்து பணம் தேவையில்லாமல் கரைந்திருக்காது என்பதும் அப்போதுதான் பத்மநாபனுக்கும் விளங்கியது. இப்படித்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, ஓய்வின்போது குரூப் இன்ஷூரன்ஸை தனிநபர் பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஓய்வின்போது குரூப் டு தனிநபர் பாலிசியாக எப்படி மாற்றலாம்,
மாற்றிக்கொள்வதே நல்லது!
“ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சில ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகளை வழங்குவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளுடன் வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் ஓய்வுபெற இருக்கும் ஊழியர்கள்தான் வேலை செய்த நிறுவனத்தில் பயன்படுத்திவந்த குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியை, அதே சலுகைகளுடன் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத் துக்கு, ஓய்வு பெற இருப்பவர், குரூப் பாலிசி தவிர தனியாகவே ஒரு பாலிசியை எடுத்துக்கொள்ள நினைக்கிறார் என்றால், அந்தச்சமயத்தில் அவருக்கு வயது அதிகம் என்பதா லும், உடலில் வியாதிகள் அதிகரித்திருக்கலாம் என்பதாலும் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் விதிமுறைகள் அவசியம் இருக்கும். ஆனால், குரூப் இன்ஷூரன்ஸிலிருந்து தனிநபராக மாற்றிக்கொள்ளும்போது பெரும்பாலும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள் இருக்காது.
நடைமுறை விஷயங்கள்!
உதாரணமாக, வேலாயுதம் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த நிறுவனம் அவருக்கு குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த நிலையில் 58வயது பூர்த்தியான வேலாயுதம் அந்த நிறுவனத் திலிருந்து ஓய்வு பெறும்போது, அதுவரை அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸில் இருந்ததற்கான கடிதம் (அந்தக் கடிதத்தில் இன்ஷூரன்ஸ் குறித்த அனைத்து விவரங்களும், நிறுவனத்தாரால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்), பாலிசி நகல் ஆகியவற்றை அதே இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ அல்லது வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ கொடுத்து, அதே சலுகைகளுடன் தனிநபர் பாலிசி யாக மாற்றிக்கொள்ளலாம்.
அவருக்கு வயது 58 என்பதால், தனிநபர் பாலிசி மட்டுமே பெரும்பாலும் வழங்கப்படும். ஒருசில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 60-வயதுக்கு மேற்பட்டவர்களில் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாகவும் வழங்குகின்றன.
ஓய்வுக்காலங்களில் ஒருவருக்கு தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி யாகக் குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் இருப்பது அவசியம். மனைவிக்கும் சேர்த்து என்றால், ஃப்ளோட்டர் பாலிசியாகக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்வது நல்லது. ஓய்வுக்குப்பிறகு, குரூப் இன்ஷூரன்ஸிலிருந்து தனிநபர் பாலிசியாக மாற்றப்பட்டுவிட்டால், தனிநபர் பாலிசியில் உள்ள நோ க்ளெய்ம் போனஸ் (ஓராண்டு பாலிசியில் எதுவும் க்ளெய்ம் செய்யவில்லை என்றால், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதல் கவரேஜ் தொகை அல்லது கட்டி வரும் பிரீமியத்தில் சலுகைகள் கிடைக்கும்) போன்ற சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, குரூப்பில் இருந்து தனிநபராக மாற்றிக்கொள்ளும் போது, குரூப் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஓராண்டு தனிநபர் பாலிசியைத் தொடர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதன்பிறகே ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அந்த பாலிசியை மாற்றிக்கொள்ள முடியும்.
உண்மையை மறைக்காதீர்கள்!
பொதுவாக இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளும் போது ஏற்கெனவே இருக்கும் வியாதிகள் குறித்தும், அறுவை சிகிச்சைகள் குறித்தும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதுபோல, ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்களுக்கு இருக்கும் வியாதிகளை மறைக்காமல் குறிப்பிட்டு பாலிசிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நோய் பற்றிய விவரங்களை மறைத்து எடுத்திருக்கும்பட்சத்தில், க்ளெய்ம் சமயங்களில் பாலிசி வழங்கிய நிறுவனத்துக்குத் தெரியவரும்போது க்ளெய்ம் பெற முடியாது” என்றார் தெளிவாக.
வேலையிலிருந்து ஓய்வு என்பது, வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற் காகத்தான். அதனால் ஓய்வுபெறும்போதே ஹெல்த் இன்ஷூரன்ஸ் விஷயங்களையும் கவனித்துச் செய்துகொண்டால் நல்லது!
தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்த பத்மநாபனுக்கு வயது 60. தான் ஓய்வு பெற்ற சமயத்தில் தன் பிள்ளைகளின் கல்வி, அவர்களின் திருமணம், தனது ஓய்வுக்காலத் தேவைக்கான சேமிப்பு என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தவர், ஓய்வு பெற்றபிறகு தனக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை மட்டும் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, வேலை பார்த்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்ததால், தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் விட்ட அவருக்கு, ஓய்வு பெற்றபிறகும் அந்த யோசனை வரவே இல்லை.
ஆனால், ஓய்வு பெற்ற ஒன்றிரண்டு ஆண்டுகளில் பத்மநாபனுக்கு திடீரென மாரடைப்பு வர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடும்ப உறுப்பினர்களுக்கு அப்பா பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் இல்லையே என்பது அப்போது விளங்க, அவரது ஓய்வுக்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தின் ஒருபகுதியை எடுத்து அறுவை சிகிச்சையை முடித்தார்கள்.
வேலை செய்த நிறுவனத்தில் இருந்த குரூப் இன்ஷூரன்ஸை, ஓய்வின் போது தனிநபர் பாலிசியாக மாற்றியிருந்தால் ஓய்வுக்காலத் தேவைக்காக வைத்திருந்து பணம் தேவையில்லாமல் கரைந்திருக்காது என்பதும் அப்போதுதான் பத்மநாபனுக்கும் விளங்கியது. இப்படித்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, ஓய்வின்போது குரூப் இன்ஷூரன்ஸை தனிநபர் பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஓய்வின்போது குரூப் டு தனிநபர் பாலிசியாக எப்படி மாற்றலாம்,
மாற்றிக்கொள்வதே நல்லது!
“ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சில ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகளை வழங்குவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளுடன் வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் ஓய்வுபெற இருக்கும் ஊழியர்கள்தான் வேலை செய்த நிறுவனத்தில் பயன்படுத்திவந்த குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியை, அதே சலுகைகளுடன் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத் துக்கு, ஓய்வு பெற இருப்பவர், குரூப் பாலிசி தவிர தனியாகவே ஒரு பாலிசியை எடுத்துக்கொள்ள நினைக்கிறார் என்றால், அந்தச்சமயத்தில் அவருக்கு வயது அதிகம் என்பதா லும், உடலில் வியாதிகள் அதிகரித்திருக்கலாம் என்பதாலும் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் விதிமுறைகள் அவசியம் இருக்கும். ஆனால், குரூப் இன்ஷூரன்ஸிலிருந்து தனிநபராக மாற்றிக்கொள்ளும்போது பெரும்பாலும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள் இருக்காது.
நடைமுறை விஷயங்கள்!
உதாரணமாக, வேலாயுதம் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த நிறுவனம் அவருக்கு குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த நிலையில் 58வயது பூர்த்தியான வேலாயுதம் அந்த நிறுவனத் திலிருந்து ஓய்வு பெறும்போது, அதுவரை அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸில் இருந்ததற்கான கடிதம் (அந்தக் கடிதத்தில் இன்ஷூரன்ஸ் குறித்த அனைத்து விவரங்களும், நிறுவனத்தாரால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்), பாலிசி நகல் ஆகியவற்றை அதே இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ அல்லது வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ கொடுத்து, அதே சலுகைகளுடன் தனிநபர் பாலிசி யாக மாற்றிக்கொள்ளலாம்.
அவருக்கு வயது 58 என்பதால், தனிநபர் பாலிசி மட்டுமே பெரும்பாலும் வழங்கப்படும். ஒருசில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 60-வயதுக்கு மேற்பட்டவர்களில் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாகவும் வழங்குகின்றன.
ஓய்வுக்காலங்களில் ஒருவருக்கு தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி யாகக் குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் இருப்பது அவசியம். மனைவிக்கும் சேர்த்து என்றால், ஃப்ளோட்டர் பாலிசியாகக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்வது நல்லது. ஓய்வுக்குப்பிறகு, குரூப் இன்ஷூரன்ஸிலிருந்து தனிநபர் பாலிசியாக மாற்றப்பட்டுவிட்டால், தனிநபர் பாலிசியில் உள்ள நோ க்ளெய்ம் போனஸ் (ஓராண்டு பாலிசியில் எதுவும் க்ளெய்ம் செய்யவில்லை என்றால், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதல் கவரேஜ் தொகை அல்லது கட்டி வரும் பிரீமியத்தில் சலுகைகள் கிடைக்கும்) போன்ற சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, குரூப்பில் இருந்து தனிநபராக மாற்றிக்கொள்ளும் போது, குரூப் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஓராண்டு தனிநபர் பாலிசியைத் தொடர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதன்பிறகே ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அந்த பாலிசியை மாற்றிக்கொள்ள முடியும்.
உண்மையை மறைக்காதீர்கள்!
பொதுவாக இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளும் போது ஏற்கெனவே இருக்கும் வியாதிகள் குறித்தும், அறுவை சிகிச்சைகள் குறித்தும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதுபோல, ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்களுக்கு இருக்கும் வியாதிகளை மறைக்காமல் குறிப்பிட்டு பாலிசிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நோய் பற்றிய விவரங்களை மறைத்து எடுத்திருக்கும்பட்சத்தில், க்ளெய்ம் சமயங்களில் பாலிசி வழங்கிய நிறுவனத்துக்குத் தெரியவரும்போது க்ளெய்ம் பெற முடியாது” என்றார் தெளிவாக.
வேலையிலிருந்து ஓய்வு என்பது, வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற் காகத்தான். அதனால் ஓய்வுபெறும்போதே ஹெல்த் இன்ஷூரன்ஸ் விஷயங்களையும் கவனித்துச் செய்துகொண்டால் நல்லது!
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Similar topics
» ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» சர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
» ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்
» சர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
» ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|