Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
3 posters
Page 1 of 1
54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
54 பயணிகளுடன் சென்ற இந்தோனேஷியா விமானம் மாயமாகி உள்ளது.இந்தோனேஷியா நாட்டின் பப்புவா மாகாணம் அருகே 54 பயணிகளுடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
இதனால் விமானத்தில் நிலை என்னவென்று தெரியவில்லை.சிந்தாணி விமான நிலையத்திலிந்து புறப்பட்ட சென்று சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
மாயமான இந்தோனேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் ஒன்று பப்புவா மாகாணம் அருகே மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பயணிகளுடன் டிரிகானா ஏர் ஏடிஆர் 42 என்ற விமானம் புறப்பட்டது. ஓக்சிபில் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் பப்புவா அருகே பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாயமான விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 54 பேர் இருந்தனர். விமானம் மாயமான தகவலை அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
விமானம் மாயமான பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் மாயமான பகுதி மலைப்பகுதி ஆகும். எனவே மலைப்பகுதியில் விமானம் மோதி விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் சோதனையைச் சந்தித்தன. இந்த நிலையில் இந்தோனேசிய விமானம் ஒன்று மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து கிளம்பி சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில், 162 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
ஆண்டவா ஒரே நடுக்கமான செய்தியாக உள்ளதே இதன் மாயம் தான் என்ன ஏன் இப்படி நடக்கிறது விமானப்பயணமே செல்ல மறுக்கிறது மனது
அந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவோ அவர்கள் குடும்பங்களின் நிலை என்னவோ யா அல்லாஹ்
அந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவோ அவர்கள் குடும்பங்களின் நிலை என்னவோ யா அல்லாஹ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர்.
பப்புவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதனுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் திடீரென்று மாயமானது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்பேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்ததாகவும் அதன் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். ஆனால் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
tamilac.com
இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர்.
பப்புவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதனுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் திடீரென்று மாயமானது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்பேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்ததாகவும் அதன் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். ஆனால் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
tamilac.com
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
அடிக்கடி விமானங்கள் இந்து மகாசமுத்திரத்தில் விழுவது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. கடலுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 54 பயணிகளுடன் இந்தோனேஷிய பயணிகள் விமானம் மாயம்
இந்தோனேஷிய விமான விபத்தில் அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேஷியாவில் உள்ள ஜெயபூரா நகரிலிருந்து ஏ.டி.ஆர். 42–300 என்ற சிறிய பயணிகள் விமானம் பப்புவாவில் உள்ள ஒக்ஸிபில் என்ற நகருக்கு கடந்த ஞாயிறு அன்று புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 49 பயணிகள் உள்பட, 5 குழந்தைகள் மற்றும் 5 விமான குழுவினர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் விமான நிலையத்தில் ரேடார் சிக்னலில் இருந்து அந்த விமானம் மாயமாக மறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, விமானத்தை தேடும் பணி முடக்கப்பட்ட நிலையில், இந்தோனேஷிய கிழக்கு பகுதியில் உள்ள மலைக்காட்டில் விமானம் விபத்துக்குள்ளானதாக அங்கு வசித்த கிராமத்தினர் தகவல் அளித்தனர்.
தகவலை பெற்ற அதிகாரிகள், குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்று விமானத்தின் சிதறிய பாகங்களை நேற்று கண்டுபிடித்தனர். ஆனால், பயணிகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தோனேஷிய வான்வெளி போக்குவரத்து பாதுகாப்பு தலைவரான Tatang Kurniadi இன்று வெளியிட்ட அறிக்கையில், விமானத்தில் பயணம் செய்த விமானிகள் உள்பட 54 பயணிகளும் உயிர் இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது, உடல்கள் கிடக்கும் பகுதியில் மீட்பு குழுவினர் உள்ளதாகவும், அவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில், ஒரு குறிப்பிட்ட ஏழை சமுதாயத்தினருக்கு பங்கிட்டு வழங்குவதற்காக அரசு சார்பில் 4,68,750 டாலர் பணமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணம் என்னவாயிற்று என்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.newstig.com
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» 208 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட எயார் கனடா விமானம் -
» சென்னையில் விமானம் தரை இறங்கிய போது டயர் வெடித்து விபத்து: 18 பயணிகள் உயிர் தப்பினர்
» பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஆற்றில் விழுந்தது: 2 விமானிகள் மாயம்
» 447 பயணிகளுடன் நடுவானில் லேண்டிங் கியர் பழுது!
» 208 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட எயார் கனடா விமானம் -
» சென்னையில் விமானம் தரை இறங்கிய போது டயர் வெடித்து விபத்து: 18 பயணிகள் உயிர் தப்பினர்
» பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஆற்றில் விழுந்தது: 2 விமானிகள் மாயம்
» 447 பயணிகளுடன் நடுவானில் லேண்டிங் கியர் பழுது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|