Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
தனிமைக்கு விடைகொடு......
4 posters
Page 1 of 1
தனிமைக்கு விடைகொடு......
மனசெல்லாம் ஆக்கிரமித்தவளே....
கனக்கிறதென் மனசு
சுமையகற்றும் வார்த்தைகளுக்காய்
ஏங்கி நிற்கிறதென் மனசு.....
முற்றுந் துறந்த முனியாய்
சிரம் தாழ்த்தி - உன்
வழி நடக்கின்றேன்
பாதிவழியிலேன் தவிக்கவிடுகிறாய்
உன் போன்று ஊமையாகிட
நானுந்தான் முயற்சிக்கிறேன்
உன் நினைவம்புகள் வந்து
என்னுள்ளிருக்கும் - உன்
இதயத்தையல்லவா தைக்கிறது
ஒவ்வொரு நொடியும்
உறக்கம் கலைத்திடும்
உயரிய காதலை விதைத்து
உளம் நிறைந்து வாழ்கிறாயிங்கு
என் தவிப்பினை அறிந்திருந்தும்
உன் தவிப்போடு ஏன் போர்புரிகிறாய்
சமாதானம் சாந்தியோடு
சகலமும் நாமாகிடுவோமே....
தங்கமே இத்தரணியில்
உனையின்றித் துணை வேறேதடி
தனிமைக்கு நீ விடைகொடு
தற்பெருமையோடு வாழ்ந்திடலாம்
நான் கண்ட ஒரு சிலரது வாழ்வோடு ஒட்டியதான ஒரு கவிதையிது
எனைச் சுற்றிய பலரது வாழ்க்கையில் இவ்வாறான போராட்டத்தினைக் கண்டேன்.
அதை வைத்தே கவிதையாக்கினேன் இக் கவிதையின் கருவானது என்னுடையது அல்லாது இன்னாருடையது என்றும் நான் உரிமை கொடுத்திடவும் முனையவில்லை என் கவிதையின் வாசகர்களுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Sep 2015 - 15:33; edited 1 time in total
Re: தனிமைக்கு விடைகொடு......
முண்டி தாளிட்டு
என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லையப்பா! முண்டி எனில் நாவிதன்,கல்லூளி மங்கன் என அகராதி சொல்கின்றது.
கவிதை வரிகள் தனிமையின் ஏக்கத்தினை சுமந்து வருகின்றது. நல்லா இருக்கு ஹாசிம்.
என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லையப்பா! முண்டி எனில் நாவிதன்,கல்லூளி மங்கன் என அகராதி சொல்கின்றது.
கவிதை வரிகள் தனிமையின் ஏக்கத்தினை சுமந்து வருகின்றது. நல்லா இருக்கு ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தனிமைக்கு விடைகொடு......
மிக்க நன்றி தலை குனிந்து என்பதற்கு எடுத்துக்கொண்டேன் நீங்கள் சொன்னதன் பின்னர்தான் கவனித்தேன் புரிந்து கொண்டேன் கவிதையிலும் மாற்றிவிட்டேன் மிக்க நன்றிNisha wrote:முண்டி தாளிட்டு
என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லையப்பா! முண்டி எனில் நாவிதன்,கல்லூளி மங்கன் என அகராதி சொல்கின்றது.
கவிதை வரிகள் தனிமையின் ஏக்கத்தினை சுமந்து வருகின்றது. நல்லா இருக்கு ஹாசிம்.
Re: தனிமைக்கு விடைகொடு......
தலைவன் தலைவிக்கான பாடும் இக்கவிதை மிக அருமை.
முண்டி தாழிட்டு அழகிய சொல். முழந்தாளிட்டு என்பது அதன் பொருள்... ஒரு காலை மட்டும் சரிதானே
வாழ்த்துக்கள்
முண்டி தாழிட்டு அழகிய சொல். முழந்தாளிட்டு என்பது அதன் பொருள்... ஒரு காலை மட்டும் சரிதானே
வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தனிமைக்கு விடைகொடு......
முழந்தாளிடுதலை முண்டு தாழிட்டு என சொல்லலாம் என்பதை நான் அறியேன். அப்படி வார்த்தை பிரயோகம் இல்லை என நான் நினைக்கின்றேன்.
தரையில் அமர்ந்து கால்களை மடக்கி முழங்கால்
முட்டிமேல்நிற்பதையே மண்டியிடுதல் என்பார்கள்.
தரையில் அமர்ந்து கால்களை மடக்கி முழங்கால்
முட்டிமேல்நிற்பதையே மண்டியிடுதல் என்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தனிமைக்கு விடைகொடு......
நீங்கள் சொன்னது சரிNisha wrote:முழந்தாளிடுதலை முண்டு தாழிட்டு என சொல்லலாம் என்பதை நான் அறியேன். அப்படி வார்த்தை பிரயோகம் இல்லை என நான் நினைக்கின்றேன்.
தரையில் அமர்ந்து கால்களை மடக்கி முழங்கால்
முட்டிமேல்நிற்பதையே மண்டியிடுதல் என்பார்கள்.
Re: தனிமைக்கு விடைகொடு......
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்கள் சொன்னது சரிNisha wrote:முழந்தாளிடுதலை முண்டு தாழிட்டு என சொல்லலாம் என்பதை நான் அறியேன். அப்படி வார்த்தை பிரயோகம் இல்லை என நான் நினைக்கின்றேன்.
தரையில் அமர்ந்து கால்களை மடக்கி முழங்கால்
முட்டிமேல்நிற்பதையே மண்டியிடுதல் என்பார்கள்.
அப்போ நான் சொன்னது தான் சரியில்லை .
முண்டு, பெயர்ச்சொல்.
[list="margin-top: 0.3em; margin-right: 0px; margin-left: 3.2em; padding-right: 0px; padding-left: 0px; list-style-image: none; color: rgb(37, 37, 37); font-family: sans-serif; font-size: 14px; line-height: 22.4px; background-color: rgb(255, 255, 255);"]
[*]வேட்டி
[*]உள்வேட்டி
[*]சிறுத்துணி
[/list]
காலை மடக்கும்போது முண்டு கீழே படும். அதனால் அவன் தன்னை தாழ்த்தி எதிரில் இருப்பவரை மரியாதை நிமித்தம் காணுவது என்று கவிதை படிக்கும்போது பொருள்கொண்டேன்.
தவறு தான் மன்னியுங்கள் கவிஞரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தனிமைக்கு விடைகொடு......
முண்டு என மலையாள பெண்கள் அணியும் ஆடையையும் சொல்வார்கள். உடலில் கீழ் பக்கம் அணியும் ஆடை. அந்த முண்டுக்கும் இந்த கவிதைக்கும் சம்பந்தமில்லை வாத்தியாரையா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தனிமைக்கு விடைகொடு......
அருமையாக உள்ளது கவிதை
தனிமையின் கொடுமை பற்றியதாக உள்ளது
பாராட்டுக்கள் சில நாட்கள் முன்பு நான் எழுதினேன் இப்படி ஒரு கவிதை மறைத்து வைத்துள்ளேன்
நன்றி ஹாசிம் நானும் உங்கள் கவிதை ரசிகன்தான்
தனிமையின் கொடுமை பற்றியதாக உள்ளது
பாராட்டுக்கள் சில நாட்கள் முன்பு நான் எழுதினேன் இப்படி ஒரு கவிதை மறைத்து வைத்துள்ளேன்
நன்றி ஹாசிம் நானும் உங்கள் கவிதை ரசிகன்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனிமைக்கு விடைகொடு......
Nisha wrote:முண்டு என மலையாள பெண்கள் அணியும் ஆடையையும் சொல்வார்கள். உடலில் கீழ் பக்கம் அணியும் ஆடை. அந்த முண்டுக்கும் இந்த கவிதைக்கும் சம்பந்தமில்லை வாத்தியாரையா!
அது தான் தெரியுமே! கவிதை எழுதியவரே ஒத்துக்கிட்டாரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தனிமைக்கு விடைகொடு......
நண்பன் wrote:அருமையாக உள்ளது கவிதை
தனிமையின் கொடுமை பற்றியதாக உள்ளது
பாராட்டுக்கள் சில நாட்கள் முன்பு நான் எழுதினேன் இப்படி ஒரு கவிதை மறைத்து வைத்துள்ளேன்
நன்றி ஹாசிம் நானும் உங்கள் கவிதை ரசிகன்தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தனிமைக்கு விடைகொடு......
Nisha wrote:நண்பன் wrote:அருமையாக உள்ளது கவிதை
தனிமையின் கொடுமை பற்றியதாக உள்ளது
பாராட்டுக்கள் சில நாட்கள் முன்பு நான் எழுதினேன் இப்படி ஒரு கவிதை மறைத்து வைத்துள்ளேன்
நன்றி ஹாசிம் நானும் உங்கள் கவிதை ரசிகன்தான்
இப்படிதான் நிறைய விசயத்தை மறைச்சிடுறாரு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|