சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Khan11

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Oct 2015 - 17:15

First topic message reminder :

அண்ணன் என்னடா தம்பி என்னடா



காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Pazhani+Film+

பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா 
படம்: பழநி.
ஆண்டு: 1965
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை


அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் 
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் 
சொந்தம் என்பதும் ஏதடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் 
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் 
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் 
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா.. 

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் 
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 Oct 2015 - 13:00

போனால் போகட்டும் போடா


காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பாடல் : போனால் போகட்டும் போடா 
திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 Oct 2015 - 13:03

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா


காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Sumaithangi+Still
பாடல்: மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா 
படம்: சுமைதாங்கி (ஆண்டு 1962)
இசையமைப்பு: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 Oct 2015 - 13:04

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்


காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Bale+Paandiya
பாடல்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
திரைப்படம்: பலே பாண்டியா ( ஆண்டு 1962)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ...

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் 
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக 
ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் 
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் 
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் 
கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் 
ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை 
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் 
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் 
தன்னை மறந்தே வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக 
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி 
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி 
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் 
ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by Nisha Wed 14 Oct 2015 - 15:27

அருமையான பாடல்களின் தொகுப்பாய்  தொடரும் திரிக்கு நன்றிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by *சம்ஸ் Wed 14 Oct 2015 - 15:36

அருமையான தொடர் ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 Oct 2015 - 19:26

Nisha wrote:அருமையான பாடல்களின் தொகுப்பாய்  தொடரும் திரிக்கு நன்றிகள்.
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 Oct 2015 - 19:26

*சம்ஸ் wrote:அருமையான தொடர் ஐயா
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by நண்பன் Thu 15 Oct 2015 - 10:52

வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 12:17

நண்பன் wrote:வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
மிக்க நன்றி  முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:35

கவிதை: மனித உடம்பின் அவலம்!

தன் உடம்பைப் பற்றியும். தன் தோற்றத்தைப் பற்றியும்தான் மனிதன் அதிகமாகக் கவலைப்படுவான்.

அதிலும் ஆண்களைவிடப் பெண்கள்தான் உடல் அழகிற்கும் புறத்தோற்றத்திற்கும், அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

ஆனால் நமது புராணங்களும், மறைநூல்களும் உடல் அழியக்கூடியது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. ஆன்மாவிற்கே முக்கியத்துவம்
கொடு என்கின்றன!

மரணமடைந்தவுடன் மனிதனுக்கும், மனித உடலிற்கும் என்ன நேர்கிறது என்பதைத் திருமூலர் மிக அற்புதமாக இப்படிச் சொன்னார்.

"ஊர்கூடி ஒன்றாகி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிட்டு
சூரியன் காட்டிடையே கொண்டுபோய் சுட்டுவிட்டு
நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்"

ஆமாம்! உயிர் நீங்கியவுடன் பெயரும் நீங்கிவிடும் கெட்கிறவன் Body ஐ எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்றுதான் கேட்பான்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்த உடலின் அவலத்தை வேறு விதமான சிந்தனையோடு நமக்கு எடுத்துச் சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:
---------------------------------------------------
"பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா - ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
(பாத்தா)

கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா - கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா?
(பாத்தா)

பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு
(பாத்தா)

அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா - அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா - இந்தப்
பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா?
(பாத்தா)

படம் - திருவிளையாடல் - வருடம் 1965

சாதாரண மரம் கூட எரிந்து தணியும் போது கரியாவது மிஞ்சும். மனித உடம்பில் எதுவும் மிஞ்சாது என்று எழுதியது இந்தப் பாடலின் சிறப்பு. அதுபோல நீ எதை மூட்டைகட்டி வைத்தாலும் இறைவன் உனக்குள்ள கணக்கை முடிக்கும்போது நீ எதையும் எடுக்காமல் போய்ச்சேர வேண்டியதுதான் என்று எழுதியது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:36

பாதி உள்ளமும், பாதி கள்ளமும் கொண்ட மனித உருவத்தைப் பற்றிக் கவியரசர் எழுதிய பாடல். இந்தப் பாடல் வரிகள் முழுவதும் தன்னிலை விளக்கம் கொண்டவை - அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

"இங்கே தெய்வம் பாதி - மிருகம் பாதி
மனிதன் ஆனதடா - அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!

ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசு இல்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா!

தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்திலே ஆசையடா!

இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா - எதிலும்
ஓட்டை சொல்லுமடா - நாட்டில்
வாட்டம் வந்து சேரும்போது
கூட்டம் கூடுமடா - நன்றாய்ப்
பாட்டுப் பாடுமடா!

முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்!

மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"

படம் - சித்தி - வருடம் 1966

இந்தப் பாடலில் உள்ள கருத்து மற்றும் சொல் விளையாட்டைப் பாருங்கள்.

அதோடு,
"வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"
என்று எழுதிய அவருடைய நகைச்சுவை
உணர்வையும் பாருங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:37

கவிதை: பூஜியமும் ராஜியமும்

என்ன தலைப்பு நெருடலாக உள்ளதா? பூஜியத்திற்கும் ராஜியத்திற்கும்
என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கொடுத்துள்ள பாடலைப் படியுங்கள். பிடிபடும். அதாவது தெளிவாகும்.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
- இறைவனைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாகச் சொன்னது

திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:39

கவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.

அதென்ன கூட்டுக் களிப்புப் பாடல்கள் என்கிறீர்களா?

ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளர்தான் அந்தச் சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது காதலன், காதலி இருவரும் சேர்ந்து பாடும் பாடலைத்தான் (Duet Songs) அவர் அப்படிச் சொன்னார்.

கவியரசர் இந்த டூயட் எனப்படும் இருவர் பாடும் பாடல்களைக் குழலும், யாழும் பாடும் பாடல்கள் என்று சொல்வாராம். ஆண் மகனைக் குழலுக்கும் பெண் மகளை யாழிற்கும் உதாரணப் படுத்தி அவ்விதம் சொல்லியிருக்கிறார்.

இன்று இந்தத் தலைப்பில் மிகவும் அற்புதமான பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். கிராம வாசிகள் உட்பட ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த பாடல் இந்தப் பாடல். இந்தப் பாடலிற்குப் பிறகுதான், இலக்கியவாதிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும், மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களும் கண்ணதாசன் அவர்களுடைய ரசிகர்களானார்கள்.

இதற்கு முன்பேயே, கவியரசர் அவர்கள், மதுரைவீரன், மகாதேவி போன்ற படங்களில் சிறப்பாகப் பல பாடல்களை எழுதியிருந்தாலும், இந்தப் பாடல் அமைந்த 'பாகப் பிரிவினை' படத்திற்குப் பிறகுதான் அவருடைய பெருமை தமிழக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

வாருங்கள் பாடலைப் பார்ப்போம்:
---------------------------------------
"ஆண்:
தாழையாம் பூமுடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து....
பெண்: நடை நடந்து....
ஆண்:
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பெண்: பொன்னம்மா
ஆண்:
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பெண்: என்னம்மா
(தாழையாம்)
பெண்:
பாளைபோல் சிரிப்பிருக்கு -
பக்குவமாய் குணமிருக்கு
ஆண்: குணமிருக்கு
பெண்: ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
ஆண்: கண்ணையா
பெண்: இந்த ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா
ஆண்: சொல்லையா
பெண்: (பாளைபோல்) தந்தானத்தானத் தானனே

ஆண்:
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபிமானங்களைக் காக்குமா?
தன்னதாதனன் (தாழையாம்)

பெண்:
மானமே ஆடைகளாம்
மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
(பாளைபோல்)

ஆண்:
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

பெண்:
மண் பார்த்து விளைவிதில்லை
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
(தாழையாம்)

ஆண்:(தாழையாம்) தன்னனே

படம்: பாகப் பிரிவினை - வருடம் 1959
-----------------------------
பெண்ணிற்குப் தென்னம் பாளை போன்ற் சிரிப்பும், நல்ல  குணமும், அழகும் இருந்தால் போதுமென்று சொன்னதோடு,  மானமென்ற ஆடைகளும், மரியாதை என்ற பொன்னகையையும்,  நாணத்தையும் ஒரு பெண் சீராகக் கொண்டுவந்தால் போதும்  என்று எழுதியதும், எங்கள் நாட்டு மக்கள்
குலப் பெருமையும்  அதுதான் என்று தமிழக மக்களின் கலாச்சாரத்தை உயர்வாகச்  சொன்னதும் தான் இந்தப் பாடலின் சிறப்புக்களாகும்.

தமிழக இலக்கியவாதிகளைத் திரும்பிப் பார்க்க வைத்த வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"மண் பார்த்து விளைவிதில்ல
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா"

செடி, கொடி எல்லாம் வைப்பவன் வைக்குமிடத்திலேயே வளரும். இந்த மண் அந்த மண் என்று அவைகளுக்குக் கிடையாது. அதுபோல
படரும் கொம்புகளும் அது மூங்கில் அல்லது வேறு எந்தக் குச்சியானாலும் அல்லது இரும்புக் கம்பியானாலும் பின்னிப் படர்ந்து கொள்ளும்.
அது போலத்தான் நமது பெண்களும் கட்டிக்கொடுக்கப் பெறும் இடத்தில் பின்னிப் பிணைந்து கொள்வார்கள்.

ஆகவே கன்னியும், பூங்கொடியும் ஒன்று. அவர்களிடம் ஏது களங்கம் என்று பெண்மையின் பெருமையைச் சொல்லிப் பாட்டை முத்தாய்ப்பாய்
முடித்தார் பாருங்கள் - இந்த நான்கு வரிகளால்தான் அவருடைய கவி மகத்துவம் இலக்கியவாதிளுக்கும் தெரிந்தது!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:40

கவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்

பெண்ணிற்கு காதல் மயக்கம் வந்தால் என்ன ஆகும்?

தன் மனதிற்குள் வைத்து உருகுவாள்.

சரி திரைப்படங்களில், அந்த உருக்கத்தை எப்படிக் காட்ட முடியும்?

அவள் உணர்வுகளைக் கவிஞர் ஒருவர் அற்புதமாகக் கவிதை
வரிகளால் எழுதிக் கொடுக்க, தேன் குரலால் சுசிலா அவர்களைப்
போன்ற சிறந்த பாடகி ஒருவர் நல்ல பாவத்துடன் அந்தப் பாடலைப்
பாட, நாயகியும் காட்சிக்கு ஏற்றார்ப்போல முக பாவம் மற்றும்
நளினம் காட்டி நடிக்க - அருமையாகக் காட்சி அமைத்துக் காட்டி
விடுவார்கள். (அதெல்லாம் ஒரு காலம் )

அப்படிக் கவியரசர் கண்ணதாசன் எழுதிய - பெண் மயங்கிப் பாடும்
காதல் பாடல்கள் இரண்டினை இன்று பதிவிட்டுள்ளேன்.படித்து
மகிழுங்கள்!
-----------------------------
"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
(நெஞ்சத்திலே)

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்க ளிரண்டில் நிம்மதி ஏது?
(நெஞ்சத்திலே)

காவிரி ஆறென நீர் விளயாட
கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்போல் ஆட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
(நெஞ்சத்திலே)"

பட்ம்: சாந்தி - வருடம் 1965

நினைவு தராமல் நீயிருந்தால், கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
என்ற வரிகளும், காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்,
கண்களிரண்டில் நிம்மதி ஏது? என்ற வரிகளும் சிறந்த வரிகளாகும்

காவிரி ஆறென நீர் விளயாட, கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம்போல்
ஆட - நீ தரவேண்டும் - நான் பெறவேண்டும் - நிலவினில் ஆடும்
நிம்மதி வேண்டும் - என்று எழுதிய வரிகளும் சிறந்த
வரிகளாகும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:41

மற்றுமொரு பாடல்:

"மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
மயங்குகிறாள் ஒரு மாது
(மயங்கு)

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)"

படம்: பாச மலர் - வருடம் 1961

மனதிற்கும், செயலுக்கும் உறவில்லாத நிலை என்று எப்படித் தன்
பாடலைத் துவங்கினார் பார்த்தீர்களா? ஒரு மயக்க நிலையை
இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்ல முடியும்? அதுதான் கவியரசர்!

"தோழியர் கதை சொல்லித் தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா நாழிகை செல்வதும் நினைவில்லையா"
- என்ற வரிகளும்

 "பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள் படித்தவள் தான் அதை
மறந்து விட்டாள் காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்"
- என்ற வரிகளும் சிறப்பான வரிகளாகும்.

காதலை அவள் நாணத்தில் மறைத்து விட்டாள் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பான வரியாகும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:42

கவிதை: தத்துவப் பாட்டில் பக்தி, காதல் பாட்டில் தத்துவம் என்று 
கலக்கியவர் அவர்!

கவியரசர் கண்ணதாசன்

தத்துவப் பாடல்கள்

தத்துவம் என்பது உலக நெறிகளையும், மனித வாழ்க்கை நெறிகளையும் பொருள்படச் சொல்வதாகும்

பக்திப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எப்படிச் சுவைபட எழுதினாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத வடிவில் பல தத்துவப் பாடல்களையும் கவியரசர் கண்னாதாசன் அற்புதமாக எழுதியுள்ளார்.

உறவு, பிரிவு, வறுமை, செழுமை, சிறுமை, பெருமை, இன்பம்,
துன்பம், பிறவி, மரணம் என்று மனித வாழ்க்கையின் ஒவ்வொரு
நிலைக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார் அவர்!

"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையற்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!"

என்று தத்துவப் பாட்டில் பக்தியையும்,

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

என்று காதல் பாட்டில் தத்துவதையும் கலக்கலாகக் கலக்கிக்
கொடுத்தவர் கவியரசர்.

"காலமகள் கண்திறப்பாள் சின்னையா - நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா - அதில்
நமக்கு ஒருவழி இல்லையா என்னையா?"

என்று கலங்கி நிற்கும் நெஞ்சங்களைத் தன் பாடல்களால் வருடிக் கொடுத்தவர் அவர்.

"பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே!
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே!"

என்று மனித நேயத்திற்குப் புது விளக்கம் ஒன்றைத் தன் பாடலால் சொன்னதும் அவர்தான்!

"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மண முடிப்பதில்லை
மண முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை"

என்று காதலுக்கும், திருமண வாழ்விற்கும், மண உறவுகளுக்கும் சர்வ சாதாரணமாக நெஞ்சில் பதியும்படி விளக்கம் சொன்னதும் அவர்தான்.

"போனால் போகட்டும் போடா - இந்தப்
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?"

என்று கேள்வி கேட்டு நிலையாமைத் தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும்படியாகப் பாட்டில் வைத்தவர் அவர்தான்.

தத்துவ முத்தில் இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:43

மனிதனுடைய புத்தி!

"போயும் போயும் மனிதனுக் கிந்த
புத்தியைக் கொடுத்தானே! - இறைவன்
புத்தியைக் கொடுத்தானே! - அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே - மனிதன்
பூமியைக் கெடுத்தானே...!

(போயும்)

கண்களிரெண்டில் அருளிருக்கும் - சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் - அது
உடன் பிற்ந்தோரையும் கருவறுக்கும்!
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே! - புலியின்
பார்வையில் வைத்தானே! - இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே! - இதயப்
போர்வையில் மறைத்தானே!.....

(போயும்)

கைகளைத் தோளில் போடுகிறான் - அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்!
பைகளில் எதையோ தேடுகிறான் - கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்.....

(போயும்)"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:44

''குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி

ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!"

படம் - பணத்தோட்டம் - வருடம் 1963

மனிதனின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தப் பாடல்.மலர்த்தோட்டம் போட்டு மகிழ்வோடு விளையாடு என்று
இறைவன் கொடுத்த மனம் பணத்தோட்டம் போட்டு எப்படிப்
பாழாகின்றது என்பதைச் சிறப்பாகச் சொல்லிய கவியரசர்.
மனிதனின் இயற்கைக் குணம் மாறாது என்று சொல்லி முடித்தது
தான் இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!

இந்த இரண்டு பாடல்களுமே திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கத்
திரு.டி.எம்.எஸ் அவர்களின் கணீரென்ற குரலில் தமிழகமெங்கும் வெள்ளித்திரைகளில் ஒலித்த பாடல் என்பது குறிப்பிடப்பட
வேண்டிய மற்றுமொரு சிறப்பாகும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:45

கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் 

தாலாட்டுப் பாட்டு!

இதுவரை கவியரசர் அவர்கள் எழுதிய காதல், தத்துவம், சொல்விளையாட்டுப் பாடல்கள் என்று பல பாடல்களைப் பார்த்துக் கொண்டு வந்தோம். இன்று ஒரு மாறுதலுக்காகத் தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். சுழற்சி முறையில் அந்த வகைப் பாடல்களும் மீண்டும் வரும்!

காதல் பாடல்களை எந்த முனைப்புடன் எழுதினாரோ அதே முனைப்புடன் கவியரசர் அவர்கள் பல அற்புதமான தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் கவியரசரின் சமகாலப் பாடலாசிரியர். காதல் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் அனாயசமாக எழுதியவர் அவர். ஆனால் தாலாட்டுப் பாடல்கள் என்றால், கவியரசரிடம் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவாராம். அது கண்ணதாசனுக்குதான் சிறப்பாக வரும் என்றும் மனம் உவந்து சொல்லிவிடுவராம்.

கவியரசர் அவர்கள் எழுதிய இரண்டு தாலாட்டுப் பாடல்களை இன்று பதிவிட்டிருக்கின்றேன்

படித்து மகிழுங்கள்
--------------------------------------
"முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ பொன் போன்ற முகமல்லவோ
(முத்தான)

காணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழங்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ
(முத்தான)"

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962
குரல் : பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகை : தேவிகா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:47

பெண்:
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
யானைப் படை கொண்டு 
சேனை பல வென்று 
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு 
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... 
வாழப் பிறந்தாயடா
பெண்: 
தங்கக் கடிகாரம் வைர மணியாரம் 
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
ஆண்: 
நதியில் விளையாடி கொடியின் தலைசீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
பெண்: 
சிறகில் எனை மூடி அருமை மகள் போல 
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
ஆண்: 
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல 
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து 
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:
அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

இந்தப் பாடலில் பல வரிகள் அற்புதமான வரிகளாகும். மலர்ந்து மலராத பாதிமலர் என்று குழந்தைக்கு உதாரணம் சொன்னதோடு விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் உதாரணப் படுத்திச் சொன்னது அதி சிறப்பாகும். இளந்தென்றல் நதியில் குளித்துவிட்டு அருகில் இருக்கும் கொடிகளில் தலை சீவும் என்றதும் அருமை. புவியாளப் பிறந்தவனடா நீ என்று சொன்னதும், உனக்காக உலகை விலை பேசுவார், வாங்கித் தருவார் என்று சொன்னதும் அருமை

”கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா,
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா”
என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்

நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் கவியரசர்”அது கொடியில் தலை சீவிக் கொள்ளும் என்று அருமையாகச் சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவர் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:48

கவியரசரும், காண வந்த வெள்ளி நிலவும்!

கவியரசர் கண்ணதாசன் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.
நிலவைக் கன்னிப் பெண்ணாக்கி, கதாநாயகியின் முன் கொண்டு
வந்து நிறுத்தி விடுகிறார். நிலவைப் பார்த்து நாயகி கேட்கும்
கேள்விகள் அற்புதமாக ஒரு பாடலாய் அமைந்து விட்டது.
பாடல் வரிகளைப் பாருங்கள். பிறகு பாடலின்
காணொளியையும் பாருங்கள்


------------------------------------------------
"காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே"

காதலனுடன் இருக்கும் நாயகி, காண வந்த காட்சியென்ன என்று
நிலவைப் பார்த்துக் கேட்டதோடு, "கண்டுவிட்ட கோலம் என்ன என்று தொடர்ந்து கேட்கிறாள். அத்துடன் விட்டாளா? என்ன வேகமாய்
ஓடிவந்தாயடி நீ - அவ்வாறு வந்தவள்  ஓரிடத்தில் ஏன் திகைத்து
நின்று விட்டாய்?" என்றும் கேட்கிறாள்.

"நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ"

என்ன நினைத்தாய்? என்ன சொல்ல வந்தாய்? காதல் எங்களுக்கு உரியது என்று உனக்குத் தெரியாதா? கன்னிப் பெண்ணான உனக்கு நாணம் இல்லையா? வாசல் நிலையை மறந்து விட்டு, மேகத்திலே மறைந்து கொள்ளடி" என்றும் கண்டித்தும் சொல்கிறாள்

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் வாசல் நிலையும் மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே

இது போன்று எதை வேண்டுமென்றாலும் உருவகப் படுத்திப் பாட்டு
எழுத அவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது!

கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா" என்ற வரிதான்
பாடலின் முத்தாய்ப்பான வரியாகும்
=======================================================
படம்: பாக்கியலெட்சுமி (1961ம் ஆண்டு)
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:49

"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
(சோதனைமேல்)

சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்
பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
(சோதனைமேல்)

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்)

பெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )

மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

பாட்டு தொடர்கிறது:

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
(சோதனை மேல் சோதனை)"

படம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974
பாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: திரு.T.M.S,
இசை: திரு.M.S விஸ்வநாதன்
இயக்கம்: திரு. P.மாதவன்
நடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
என்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்
என்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு
நீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.

அடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்
பாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று
எதுகையில்,அமரத்துவமான கருத்துக்களுக்கு அளவெடுத்துத்
தைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்

"ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!"

பூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்
கொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக
அடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான
வரிகளாகும்.

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?

என்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:51

காதல் மயக்கம்

சிந்தனைக்கும், உணர்விற்கும் தாளிட முடியாது. அதாவது கட்டுப் படுத்திவைக்க முடியாது.

அதுவும் உணர்வின் உச்ச வெளிப்பாட்டில், மனிதன் தன்னை மறந்து சொல்லும் வார்த்தைகள் சுவாரசியமாக இரூக்கும்.

கோபத்தில்,"அவனை நிக்கவச்சு சுடனும்டா" என்று ஒருவன் சொல்வதும், துக்கத்தில், "செத்துடனும்டா" என்று ஒருவன் சொல்வதும் உணர்வுமேலிட வரும் வார்த்தைகள்தான்

காதல் மயக்கம் வந்தால், உணர்வுகள் வெய்யிலில் வைத்த பனிக்கட்டியாக உருகும். அதுவும் பெண்ணிற்கு வந்தால் - பெண் மென்மையானவள் அல்லவா அந்த உருக்கம் பல மடங்கு அதிகமாக இருக்கும்

அதுபோல காதல் மயக்கத்தில், உருக்கத்தில் ஒரு இளம் பெண் என்ன சொல்வாள்?

பள்ளிக்கூட வாத்தியார் என்றால் சங்க இலக்கியத்தைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்து பதில் சொல்வார்

ஆனால் நம் கவியரசருக்கு அதெல்லாம் தேவையில்லை

கேட்ட மாத்திரத்திலேயே பட்டியலிட்டுப் பாட்டாய் எழுதிக் கொடுத்து விடுவார்

அந்த மயக்கத்திற்கெல்லாம் சரியான பதிலை அவரைவிடச் சிறப்பாக வேறு யார் சொல்ல முடியும்?

"எந்தன் ஆருயிர்க் காதலனைக் காணாத கண் கண்ணல்ல, அவரை எண்ணாத நெஞ்சு நெஞ்சல்ல, அவர் இதழ் பிரிந்து சொல்லாத சொல் சொல்லல்ல,அவரில்லாமல் நானும் நானல்ல" என்று சொல்வாளாம் அந்தப் பெண்

அதோடு விடுவாளா அவள்? மேலும் சொல்வாளாம். “நீயொரு பாதி நானொரு பாதி - இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி. காலங்கள்
மாறலாம்-காட்சிகள் மாறலாம் ஆனால் காதலின் முன்னே நம் இருவருக்கும் எந்த மாற்றமும் வராது. இருவரும் எப்போதும் ஒன்றுதான்!”

மேலும் அவள் சொல்வாளாம்,"என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைப்பேன் ஆசையினாலே, நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல"

என்னவொரு கருத்து, கற்பனை சொல்லாட்சி பாருங்கள். வாருங்கள் முழுப் பாடலையும் பார்ப்போம்
-------------------------------------------------------------
''உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில்
யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைப்பேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னை)
ஒரு தெய்வமில்லாமல் கோயிலும் இல்லை
ஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)"

படம் : இதயக் கமலம் - வருடம் 1965
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
குரல் : திருமதி. பி.சுசீலா
இசை : திரு. கே.வி. மகாதேவன்
நடிகை : திருமதி.கே.ஆர்.விஜயா

"நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல"
என்ற வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:52

"செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவெனச்சிரிக்கும் மலர்க்
கொடியாள்" என்ற பாடலை உங்களுக்காக இன்று
பதிவிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள்!
--------------------------------------------
"விருத்தம்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்திவழி போனாளே
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே.........

பாட்டு
செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகுனிவாள்
(செந்தமிழ்)

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் பிறந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்.....
(செந்தமிழ்)

மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ - விண்
மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ - அவள்....
(செந்தமிழ்)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைததவளோ - அவள்...
(செந்தமிழ்)"

படம்: மாலையிட்ட மங்கை - வருடம் 1958
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடி நடித்தவர்: T.R மகாலிங்கம் (நாயகி–மைனாவதி)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
இயக்கம்: G.R.நாதன்

பாடல் எளிமையாக, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப் பெற்றுள்ளது. ஆகவே இதற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம். எழுதவில்லை.

முத்தாய்ப்பான வரிகள்:

”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைத்தவளோ”

என்று எழுதினார் பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்!

ஒரு பெண்ணே பேராசை கொள்ளும் அழகு ஒருத்திக்கு இருக்கும்போதுதான் அது பேரழகாகும். அதை மனதில் வையுங்கள்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:53

பரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு?

ஒரு திரைப்படம். அதில் நாயகனுக்கும், நாயகிக்கும் பிணக்கு ஏற்பட்டுவிடுகிறது. இருவரும் வேலைக்குச் செல்கின்றவர்கள்.பதவி உயர்விலும், வாங்கும் சம்பளத்திலும் நாயகி நாளும் உயர, நாயகனுக்குத் தன்முனைப்பு (Ego) காரணமாகத் தன் மனைவியின் உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாத மனஉளைச்சல்

அதற்குக் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார்

மனதளவில் கணவனும், மனைவியும் சம அளவு சக்கரங்களாக இருந்தால்தானே வாழ்க்கையெனும் வண்டி ஓடும்! (மனதளவில்) ஒரு சக்கரம் பெரியதாகவும், ஒரு சக்கரம் சிறியதாகவும் இருந்தால் வாழ்க்கையெனும் வண்டி எப்படி ஓடும்? அதைவலியுறுத்திக் கவியரசர் அவர்கள்
எழுதிய வரிகள்:

"வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள் இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும்
அந்த‌ இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால் எந்த‌ வ‌ண்டி ஓடும்"

தன் மனைவி உயரத்தான் தேய்பிறை நிலவுபோலத் தேய்ந்து விடதாகவும், அதனால் தன் மன அமைதியை இழந்து விட்டதாகவும் நினைக்கும் கணவனின் மன நிலையை அப்படியே பாடலில் கொண்டு வந்து விட்டார் கவியரசர்

"நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நில‌வும் வானும் போலே
நான் நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன் நீ வ‌ளர்ந்ததாலே
என்னுள்ள‌ம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது"

கருடனுக்குப் பயந்து வாழ் வேண்டிய பாம்பு, தான் பரமசிவன் கழுத்தில் இருக்கும் அகம்பாவத்தில் என்ன கருடா செளக்கியமா?" என்று கேட்பதைப் போல தன் மனைவி தன்னை நடத்துவதாக இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு நாயகன் புலம்பும் மன நிலைமையை விளக்குவதாக அமைந்த பாடல் இது.

அதன் சிறப்பு என்னவென்றால் கணவனாக திரு.முத்துராமன் அவர்களும், மனைவியாக செல்வி ஜெயலலிதா அவர்களும் சிறப்பாக நடித்து வெற்றி கண்டு பல திரையரங்குகளில் நூறு நாட்களுக்குமேல் ஓடி விழாக்கண்ட வெற்றிப்படமான 'சூரியகாந்தி' என்ற திரைப் படத்தில் வரும் பாடல் இந்தப் பாடல்!

இந்தப் பாடலைப் படத்தில் வரும் ஒரு விழாவில் கவியரசரே மேடையில் நின்று பாடுவதுபோலவும், அரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
நாயகனுக்கும், நாயகிக்கும் செய்தியாகச் சொல்வது போலவும் காட்சி அமைந்திருக்கும்!

பாட்டை இன்று பதிந்துள்ளேன். படித்து மகிழுங்கள் ஒளி மற்றும் ஒலி வடிவம் வேண்டுமென்றால் இணையத்தில் உள்ளது. கேட்டு மகிழுங்கள்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!

என்ற் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்
------------------------------------------------
"பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா செளக்யமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு- ஒளவை சொன்னது
அது - ஒளவை சொன்னது!
அதில் - அர்த்த‌ம் உள்ள‌து

(பரமசிவன்)

வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள்
இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும் - அந்த‌
இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால்
எந்த‌ வ‌ண்டி ஓடும்?

உனைப்போலே அள‌வோடு உற‌வாட‌ வேண்டும்
உய‌ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உற‌வு கொள்வ‌து
அது - சிறுமை என்ப‌து
அதில் - அர்த்தம் உள்ளது!

(பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நில‌வும் வானும் போலே! - நான்
நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன்
நீ வ‌ளர்ந்ததாலே

என் உள்ள‌ம்- எனைப் பார்த்துக்
கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது - இது
க‌ண‌வ‌ன் சொன்ன‌து
இதில் அர்த்த‌ம் உள்ளது"

படம்: சூரியகாந்தி - வருடம் 1973
இசை: எம்.எஸ்.வி அவர்கள்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
குரல்: திரு.டி.எம்.எஸ் அவர்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்  - Page 2 Empty Re: காலத்தால் அழியாத சினிமா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum