Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
3 posters
Page 1 of 1
குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
------------
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
------------
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
சேரி குழந்தைகளின் பத்திரிகை!
--------------
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின் குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜோல்னாபையன்.
--------------
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின் குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜோல்னாபையன்.
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
குளிர்ச்சியா இருக்கே!
-----------
உலோகப் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீர் அதே வெப்பநிலையில் இருக்கும்போது, மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? குட்டீஸ்...
மண்பானையில் இருக்கும் நீரின் குளிர்ச்சி அதன் ஆவியாதல் என்னும் செயல்பாட்டினாலேயே ஏற்படுகிறது. உலோகப் பாத்திரங்களைப் பொறுத்தவரை அப்பாத்திரம் மேற்புறம் திறந்திருந்தால் மட்டுமே நீர் ஆவியாகிறது. ஆனால், மண்பாண்டங்களில் பக்கச் சுவர்களில் மெல்லிய துளைகள் காணப்படுகின்றன. அத்துளைகளின் வழியே நீர் ஆவியாகிறது. நீர் ஆவியாவதற்கான வெப்பம் மண்பாண்டத்திலுள்ள நீரிலிருந்தே பெறப்படுகிறது. இது இயற்பியல் கொள்கை ஆகும்.
இதை வெயில் காலங்களில் நமது உடலிலேயே உணர முடியும். வெயில் காலங்களில் நமக்கு வியர்வை தோன்றுவது இயற்கை. அவ்வேளையில் மின் விசிறி காற்று நம் உடலின் மீது படும் போதும் நாம் சற்று அதிக குளிர்ச்சியாக உணர்கிறோம். காரணம் நம் உடலின் மீதுள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் நம் தோலிலிருந்தே ஈர்க்கப்படுவதால், நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம்.
நன்றி : சிறுவர் மலர்
-----------
உலோகப் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீர் அதே வெப்பநிலையில் இருக்கும்போது, மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? குட்டீஸ்...
மண்பானையில் இருக்கும் நீரின் குளிர்ச்சி அதன் ஆவியாதல் என்னும் செயல்பாட்டினாலேயே ஏற்படுகிறது. உலோகப் பாத்திரங்களைப் பொறுத்தவரை அப்பாத்திரம் மேற்புறம் திறந்திருந்தால் மட்டுமே நீர் ஆவியாகிறது. ஆனால், மண்பாண்டங்களில் பக்கச் சுவர்களில் மெல்லிய துளைகள் காணப்படுகின்றன. அத்துளைகளின் வழியே நீர் ஆவியாகிறது. நீர் ஆவியாவதற்கான வெப்பம் மண்பாண்டத்திலுள்ள நீரிலிருந்தே பெறப்படுகிறது. இது இயற்பியல் கொள்கை ஆகும்.
இதை வெயில் காலங்களில் நமது உடலிலேயே உணர முடியும். வெயில் காலங்களில் நமக்கு வியர்வை தோன்றுவது இயற்கை. அவ்வேளையில் மின் விசிறி காற்று நம் உடலின் மீது படும் போதும் நாம் சற்று அதிக குளிர்ச்சியாக உணர்கிறோம். காரணம் நம் உடலின் மீதுள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் நம் தோலிலிருந்தே ஈர்க்கப்படுவதால், நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம்.
நன்றி : சிறுவர் மலர்
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
துர்நாற்றம்
------------
குப்பைத் தொட்டியில் எந்த வகைக் குப்பைகளை போட்டு வைத்தாலும், அதன் துர்நாற்றம் ஒரே மாதிரி தோன்றுவது ஏன்?
பொதுவாக குப்பைத் தொட்டியிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், குப்பையில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகும். இவை ஒருவித கரிம வேதிப் பொருட்களை வெளியேற்றுவதால் அந்த துர்நாற்றம் ஏற்படுகிறது.
குப்பை ஈர நிலையில் இருக்கும் போது இந்த துர்நாற்றத்தை நாம் அதிகம் உணர முடியும். வெவ்வேறு வாசனையுள்ள பொருட்களாக இருப்பினும், அவற்றை உண்ணும் நுண்ணுயிர்கள் வெளிப்படுத்தும் துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது போல நாம் உணருகிறோம்.
வீடுகளிலுள்ள குப்பைத் தொட்டி களில் "பாஸ்டருல்லா பெஸ்டிஸ்' பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களே அதிகம் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பிளேக் நோயைப் பரப்புவதால் அவற்றை உடனடியாக அகற்றிவிடுவது நல்லது.
நன்றி : சிறுவர் மலர்
------------
குப்பைத் தொட்டியில் எந்த வகைக் குப்பைகளை போட்டு வைத்தாலும், அதன் துர்நாற்றம் ஒரே மாதிரி தோன்றுவது ஏன்?
பொதுவாக குப்பைத் தொட்டியிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், குப்பையில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகும். இவை ஒருவித கரிம வேதிப் பொருட்களை வெளியேற்றுவதால் அந்த துர்நாற்றம் ஏற்படுகிறது.
குப்பை ஈர நிலையில் இருக்கும் போது இந்த துர்நாற்றத்தை நாம் அதிகம் உணர முடியும். வெவ்வேறு வாசனையுள்ள பொருட்களாக இருப்பினும், அவற்றை உண்ணும் நுண்ணுயிர்கள் வெளிப்படுத்தும் துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது போல நாம் உணருகிறோம்.
வீடுகளிலுள்ள குப்பைத் தொட்டி களில் "பாஸ்டருல்லா பெஸ்டிஸ்' பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களே அதிகம் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பிளேக் நோயைப் பரப்புவதால் அவற்றை உடனடியாக அகற்றிவிடுவது நல்லது.
நன்றி : சிறுவர் மலர்
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
மடப்பயலே...
------
கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான்.
வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான்.
நல்ல புத்திசாலியான அந்தத் திருடன் தன் நண்பனைப் பார்த்து, ""அந்த விவசாயி இழுத்துச் செல்லும் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட வேண்டும்,'' என்று சொன்னான்.
வியப்பு மேலிட அவன் நண்பன், ""எப்படி உன்னால் அந்தக் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட முடியும்?'' என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அந்தத் திருடன், ""சத்தமின்றி என் பின்னாலேயே வா உனக்குப் புரியும்,'' என்று சொன்னான்.
அந்த விவசாயியின் பின்னாலேயே சத்தமின்றி சென்று கழுதையை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, கழுதையை ஓட்டிச் செல்லுமாறு தன் நண்பனுக்கு சைகை செய்தான்.
பிறகு அந்தக் கயிற்றைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே சென்றான்.
தன் நண்பன் ஓட்டிச் சென்ற கழுதை கண் பார்வையை விட்டு மறைந்ததும், அவன் நகராமல் அப்படியே நின்றுவிட்டான்.
கழுதையை இழுத்து வந்த விவசாயி கயிற்றை இழுத்துப் பார்த்து வராததால், திரும்பிப் பார்த்தான். தன் கழுதைக்கு பதில் அந்தக் கயிற்றில் மனிதன் இருப்பது கண்டு திகைத்தான்.
""நீ யார்?'' என்று விவசாயி அவனைப் பார்த்துக் கேட்டான்.
உடனே அந்தத் திருடன் கண்களில் கண்ணீர் மல்க, ""ஐயா! நான் தங்கள் கழுதை தான்... என் கதை வேடிக்கையானது. இளம் வயதிலிருந்தே நான் கெட்டவனாக இருந் தேன். என்னிடம் எல்லா கெட்ட பழக்கங் களும் இருந்தன.
ஒருநாள் நன்றாக குடித்து விட்டு, வீட்டுக்கு வந்தேன். என் தாயார் எவ்வளவோ அறிவுரை சொன்னார்கள். நான் அவர்களைப் பிடித்து தள்ளியதோடு நன்றாக அடித்துவிட்டேன். என் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் என்னை, "கழுதையாக போ' என்று சாபம் கொடுத்து விட்டார்கள். நான் உடனே கழுதையாக மாறிவிட்டேன்.
""என்னை நீங்கள் சந்தையில் வாங்கினீர் கள். அதோடு, மட்டுமின்றி என்னை அடித்து உதைத்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தினீர் கள். நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, உங்களுக்கு உண்மையாக உழைத்தேன்.
""இன்றுதான் என் அம்மா என்மேல் இரக்கப்பட்டு எனக்காக கடவுளிடம் வேண்டியிருக்கிறார். அதனால் எனக்கு என் சுய உருவம் வந்து விட்டது,'' என்றான்.
இதையெல்லாம் அறிந்த அந்த விவசாயி, ""ஐயோ! நீ மனிதன் என்று தெரியாமல், உன்னை அடித்து துன்புறுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு,'' என்று அவன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான்.
இருவரும் அவரவர்கள் வழியே சென்றனர்.
ஒருவாரம் சென்றது.
விவசாயி மீண்டும் கழுதை வாங்குவதற் காக சந்தைக்கு சென்றான். அங்கே அவன் கழுதை விற்பனைக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
அந்தக் கழுதை தன் முதலாளியைக் கண்டதும் சந்தோஷத்தில் கத்தியது.
அதைப் பார்த்த அந்த விவசாயி அதன் அருகே சென்று ""மடப்பயலே! மீண்டும் குடித்துவிட்டு, உன் தாயை அடித்தாயா? இம்முறை உன்னை வாங்குவதற்கு என்னை என்ன மடையன் என்று நினைத்தாயா?'' என்று கத்திவிட்டு, அதன் முகத்தில் உமிழ்ந்து விட்டுச் சென்றான்.
ஏமாளிகள் இருக்கிற வரையில், ஏமாற்றுக் காரர்கள் இருக்கவே செய்கின்றனர்.
நன்றி _ சிறுவர்மலர்
------
கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான்.
வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான்.
நல்ல புத்திசாலியான அந்தத் திருடன் தன் நண்பனைப் பார்த்து, ""அந்த விவசாயி இழுத்துச் செல்லும் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட வேண்டும்,'' என்று சொன்னான்.
வியப்பு மேலிட அவன் நண்பன், ""எப்படி உன்னால் அந்தக் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட முடியும்?'' என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அந்தத் திருடன், ""சத்தமின்றி என் பின்னாலேயே வா உனக்குப் புரியும்,'' என்று சொன்னான்.
அந்த விவசாயியின் பின்னாலேயே சத்தமின்றி சென்று கழுதையை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, கழுதையை ஓட்டிச் செல்லுமாறு தன் நண்பனுக்கு சைகை செய்தான்.
பிறகு அந்தக் கயிற்றைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே சென்றான்.
தன் நண்பன் ஓட்டிச் சென்ற கழுதை கண் பார்வையை விட்டு மறைந்ததும், அவன் நகராமல் அப்படியே நின்றுவிட்டான்.
கழுதையை இழுத்து வந்த விவசாயி கயிற்றை இழுத்துப் பார்த்து வராததால், திரும்பிப் பார்த்தான். தன் கழுதைக்கு பதில் அந்தக் கயிற்றில் மனிதன் இருப்பது கண்டு திகைத்தான்.
""நீ யார்?'' என்று விவசாயி அவனைப் பார்த்துக் கேட்டான்.
உடனே அந்தத் திருடன் கண்களில் கண்ணீர் மல்க, ""ஐயா! நான் தங்கள் கழுதை தான்... என் கதை வேடிக்கையானது. இளம் வயதிலிருந்தே நான் கெட்டவனாக இருந் தேன். என்னிடம் எல்லா கெட்ட பழக்கங் களும் இருந்தன.
ஒருநாள் நன்றாக குடித்து விட்டு, வீட்டுக்கு வந்தேன். என் தாயார் எவ்வளவோ அறிவுரை சொன்னார்கள். நான் அவர்களைப் பிடித்து தள்ளியதோடு நன்றாக அடித்துவிட்டேன். என் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் என்னை, "கழுதையாக போ' என்று சாபம் கொடுத்து விட்டார்கள். நான் உடனே கழுதையாக மாறிவிட்டேன்.
""என்னை நீங்கள் சந்தையில் வாங்கினீர் கள். அதோடு, மட்டுமின்றி என்னை அடித்து உதைத்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தினீர் கள். நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, உங்களுக்கு உண்மையாக உழைத்தேன்.
""இன்றுதான் என் அம்மா என்மேல் இரக்கப்பட்டு எனக்காக கடவுளிடம் வேண்டியிருக்கிறார். அதனால் எனக்கு என் சுய உருவம் வந்து விட்டது,'' என்றான்.
இதையெல்லாம் அறிந்த அந்த விவசாயி, ""ஐயோ! நீ மனிதன் என்று தெரியாமல், உன்னை அடித்து துன்புறுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு,'' என்று அவன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான்.
இருவரும் அவரவர்கள் வழியே சென்றனர்.
ஒருவாரம் சென்றது.
விவசாயி மீண்டும் கழுதை வாங்குவதற் காக சந்தைக்கு சென்றான். அங்கே அவன் கழுதை விற்பனைக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
அந்தக் கழுதை தன் முதலாளியைக் கண்டதும் சந்தோஷத்தில் கத்தியது.
அதைப் பார்த்த அந்த விவசாயி அதன் அருகே சென்று ""மடப்பயலே! மீண்டும் குடித்துவிட்டு, உன் தாயை அடித்தாயா? இம்முறை உன்னை வாங்குவதற்கு என்னை என்ன மடையன் என்று நினைத்தாயா?'' என்று கத்திவிட்டு, அதன் முகத்தில் உமிழ்ந்து விட்டுச் சென்றான்.
ஏமாளிகள் இருக்கிற வரையில், ஏமாற்றுக் காரர்கள் இருக்கவே செய்கின்றனர்.
நன்றி _ சிறுவர்மலர்
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
அடக்கழுதையே!.
இப்படியெல்லாம் ஈ வாயன்கள் இருப்பாங்களா?
அருமை
இப்படியெல்லாம் ஈ வாயன்கள் இருப்பாங்களா?
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
அனைத்தும் அருமையாக உள்ளது முண் பானை குளிர்ந்த நீர் மற்றும் வலிகள் ஏற்படுவது அனைத்தும் அருமை கழுதையின் கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது இது வெறும் கற்பனையே இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
பகிர்வுக்கு நன்றி ஐயா இன்னும் தொடருங்கள்
பகிர்வுக்கு நன்றி ஐயா இன்னும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
நன்றி நன்றிநண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது முண் பானை குளிர்ந்த நீர் மற்றும் வலிகள் ஏற்படுவது அனைத்தும் அருமை கழுதையின் கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது இது வெறும் கற்பனையே இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
பகிர்வுக்கு நன்றி ஐயா இன்னும் தொடருங்கள்
Similar topics
» இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள்....
» மானம் அவமானம் இவற்றை சமமாக கருது!
» இவற்றை கலைக்கண்ணுடன் மட்டும் பாருங்கள் ! காமக்கண்ணுடன் பார்க்காதீர்கள்
» குட்டீஸ் படுக்கையரை.
» அழகு குட்டீஸ்
» மானம் அவமானம் இவற்றை சமமாக கருது!
» இவற்றை கலைக்கண்ணுடன் மட்டும் பாருங்கள் ! காமக்கண்ணுடன் பார்க்காதீர்கள்
» குட்டீஸ் படுக்கையரை.
» அழகு குட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|