சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Khan11

தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 21:03

First topic message reminder :


அம்மா அம்மா எந்தன் ஆருயிரே!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
அம்மம்மம்மா உன்னைப்போல ஒரு தெய்வம்
அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம்
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா அந்த தெய்வம் உன் போல்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு
அச்சம் என்பது மடமையடா  அஞ்சாமை திராவிடர் உடைமையடா
அடி ஆத்தாடி... இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா
அடி ஆத்தாடி... நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
அறிவுக்கு வேலைகொடு
அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே

எனது நீண்ட நாள் ஆசை    சேனைத் தமிழ் உலாவில்   தமிழ் பாடல் வரிகள்  உருவாக்க வேண்டும் என்பது.  (அ) தொடக்கம் (ஃ) வரைக்கும் உள்ள தமிழ் பாடல்களை நமது சேனைத் தமிழ் உலாவில் கிடைக்கிற மாதிரி செய்ய வேண்டும்   அந்த வகையில்  இப்போது நான் ஆரம்பித்த இந்த திரியில்   நீங்களும்  படத்தின் பெயருடன் பாடல்களைப் பகிருங்கள் பெயர் கிடைக்கா விட்டாலும் பாடல் வரிகளை முழுமையாக பகிருங்கள்    நான் முதலில் அ  இருந்து ஆரம்பிக்கிறேன்
நன்றியுடன் நண்பன்..


Last edited by நண்பன் on Sun 24 Jan 2016 - 19:11; edited 9 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:36

அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

(அக்கம்பக்கம்)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

(அக்கம் பக்கம் )

நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

(அக்கம்பக்கம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:37


அய்யய்யோ என்
ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
ஒத்த பனை மரத்துல
செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன்
சங்கதியை சொல்லி தாரேன் வாடீ... நீ வாடீ...
பத்து கன்னு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
?.. வாடி புள்ள கூச்சத்துக்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
செவ்வெளனி சின்ன கனி..உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..

அய்யய்யோ என் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
என் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ..
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தா புள்ள
அய்யய்யோ .. என் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் காயுறதே அய்யய்யோ
நாழி விதை வாசக்காரி..ஆள கொல்லும் பாசக்காரி..
என் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..
அய்யய்யோ.. என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சி அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ

கல்லுக்குள்ளே தேரை போலே.. வளைஞிருகும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
கால சுத்தும் நிழலை போல..பொட்ட காட்டில் உங்கூடவே தங்கிடவா
ஐய்யனாரை பாத்தாலே உன் நினைப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏண்டா
நான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..
? கண்ணு கருவாச்சியே.. நீ தொட்ட அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தா புள்ள


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:39

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே)

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

(அன்பே)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:41

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழக்திற்கு கவிதாஞ்சலி
(அஞ்சலி ...)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி
மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே ...)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போஅனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ...

(பூவே ...)



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:42

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஒடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஒடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

(ஆத்தங்கர மரமே)

மாமனே உன்னை காணாம
வட்டியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஒடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

(ஆத்தங்கர மரமே)

தாவணி பொண்ணே சுகம் தானா
தங்கமே தழும்பும் சுகம் தானா
பாறையில் சின்ன பாதம் சுகம் தானா
தொட்ட பூ எல்லாம் சுகம் தானா
தொடாத பூவும் சுகம் தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகம் தானா
அயித்தயும் மாமனும் சுகம் தானா
ஆத்துல மீனும் சுகம் தானா
அன்னமே உன்னயும் என்னயும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகம் தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயில பசு தோதாச்சு

(ஆத்தங்கர மரமே)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:42

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா? உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
(அன்பே)
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:45

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:50

அதோ மேக ஊர்வலம்,
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

(அதோ...........)

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!

(அதோ............)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?

(அதோ..........)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:56

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
னாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:56

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 22:57

அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...
மலையூரில் சாரலிலே..
என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே....


நீயுடுத்தி போட்ட உடை... என் மனதை மேயுதடா

நீ சுருட்டி போட்ட முடி... மோதிரமாய் ஆகுமடி

இமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க... இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி... உன்னில் விளக்கேற்றி
என்னாளும் பார்த்திருப்போம்

ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...


நீ முறிக்கும் சோம்பலிலே... நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி

அறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா

என்னை மறந்தாலும்... உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்

ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்

உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:01

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே.
மறவேன் என்றும் உன்னையே

பெண்:
நான் பாலைவனத்தின் விதை போல்
... நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆ:
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை

பெண் :
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆ:
இத்தனையும் இனி கிடைக்குமா?

பெண்:
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரை உன்னை பார்த்ததும்..
உலகே புதிதானதே

பெண் :
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..

ஆ:
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண் :
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆ:
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று.........
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?


பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:03

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

(அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:03

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:03

அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை
ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே
(அலையே.. அலையே.. )

மொட்டுக்குள்ளே வாசம் போலே
கட்டுப்பட்டு நின்றாயே
முட்டிச்செல்லும் காற்றாய் வந்து
தொட்டு திறந்து கொண்டேனே
உனது ஊடல் தீராமல்
எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன் தொல்லை
முகத்திரையை கழட்டிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய பறவை
மடியேறுது மடியேறுது பார் வெளியே
(அலையே.. அலையே.. )

பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க
எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும்
வேரின் வாழ்வு மண்ணோடு
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
கடலோ இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:05

அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்


(அது ஒரு..)


ஓ.. அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில்
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மருந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

(அது ஒரு..)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:08

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:08

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:11

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 23:15

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
அஸ்க் அஸ்க்…

அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொயதேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ஒ..

பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by rammalar Mon 25 Jan 2016 - 20:02



    பாடல்: அழகான பொண்ணு நான்
    திரைப்படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
    பாடியவர்: பி. பானுமதி
    இயற்றியவர்: ஏ. மருதகாசி
    இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி

    ஆண்டு: 1956

    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    எங்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    எங்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்

    ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க
    ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க
    எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
    முள்ளே தான் கொட்டுங்க
    எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
    முள்ளே தான் கொட்டுங்க ஓ..ஓஓ..ஓ

    அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
    அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
    ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது

    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    எங்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்

    இங்கொண்ணு என்னைப் பாத்து கண் ஜாடை பண்ணுது
    இங்கொண்ணு என்னைப் பாத்து கண் ஜாடை பண்ணுது
    ஏமாளிப் பொண்ணு இன்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
    ஏமாளிப் பொண்ணு இன்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
    ஓ..ஓஓ..ஓ

    பெண்ஜாதியைத் தவிக்க விட்டுப் பேயாட்டம் ஆடுது
    பெண்ஜாதியைத் தவிக்க விட்டுப் பேயாட்டம் ஆடுது
    பித்தாக என்னைச் சுத்திக் கைத்தாளம் போடுது

    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
    எங்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான்
    அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

தமிழ் பாடல் வரிகள்  / tamil-paadal-varigal - Page 2 Empty Re: தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum