Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
2 posters
Page 1 of 1
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
குழந்தையின் முதல் ஆசான், அக்குழந்தையின் பெற்றோர் ஆவர். அதிலும் குழந்தை முதலில் அறிந்து கொள்ளும் ஆசான் தாய் தான். அந்த வகையில் ஒரு வீட்டுச் சூழலில் குடும்பம் என்ற ஒரு பெரிய வலையமைப்பிற்குள் ஒரு பிள்ளையின் நடத்தைகளும், கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பமாகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கற்றல் என்பது புத்தகங்களும் ஆசிரியர்களும் கூறுபவற்றை மாத்திரம் ஏற்றுக்கொண்டு பரீட்சையில் மாணவனை வெற்றி பெறச் செய்வது மட்டுமல்ல. மாறாக கற்பவனின் வாழ்க்கைப் பரீட்சையில் அவனை வெற்றிபெறச் செய்வதே உண்மையான கற்றல் செயற்பாடாகும். இக்கற்றல் செயற்பட்டில் பாடசாலையின் வகிபங்கு மட்டுமல்லாது பெற்றோரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் ஒரு பிள்ளையின் கற்றல் செயற்பாட்டில் பெற்றோரின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகக் காணப்படுகிறது.
முதலில் பெற்றோர் தமது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. கற்றல் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழல் காணப்படும் போதே கற்றல் வினைத்திறனாக அமைய முடியும். காற்றோட்டமுள்ள போதியளவு வெளிச்சம் மிக்க, அமைதியான. சுகாதாரமான சூழல் ஒன்றினை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் வீடோன்றினை நிர்மாணிக்கும் போது பிள்ளைகளை கவரக்கூடிய வகையில் கற்றல் அறையொன்றினை நிர்மாணிப்பது பயனுடையதாகக் காணப்படுகின்றது. இதனாலேயே சேரிப்புறங்களில் வாழும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளையும் பார்க்க வசதியான குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு திறன் மிக்கதாகக் காணப்படுகின்றது.
மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் இடையறாத இணைப்பு, பாடசாலையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் அறைகூவல்களையும் சந்திப்பதற்கு பிள்ளையை உளரீதியாக மென்மேலும் தயார்படுத்துகின்றது. பிள்ளைகளிடம் அன்பான தொடர்புகளைப் பேண வேண்டும். குறிப்பாக பிள்ளை பயத்தால் அல்லது கவலையால் பீடிக்கப்பட்டிருக்கும் போது இவ்வாறு பிள்ளைகளிடத்தில் அன்பைப் பேணுவது மிக அவசியமானதாகக் காணப்படுகின்றது. ஏனைய குடும்ப அங்கத்தவரின் அல்லது தொலைக்காட்சியின் இடையூறின்றி ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களையேனும் ஒவ்வொரு பிள்ளையுடனும் அந்த நாள் பற்றி தனியாக உரையாடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொரு முக்கியமான விடயமாக அமைவது சிறுபிள்ளைகள் அனைவரும் புதிய சொற்களைப் பயன்படுத்த மிகவும் விரும்புவார்கள். சில குடும்பங்களில் சொற்களைப் பற்றி துருவி ஆராய்தல் ஊக்குவிக்கப்படுகின்றது. உண்மையில் அது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு ஊற்றாக அமைகின்றது. ஆனால் சில பிள்ளைகள் புதியதொரு சொல்லை தவறாக உச்சரிக்கும் போது அல்லது தவறாகப் பயன்படுத்தும் போது கேலி செய்யப்படுகின்றார்கள். இதனால் சொற்கள் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மங்கிவிடுகிறது. எனவே பெற்றோர் இவ்விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்.
அடுத்து முக்கியமான விடயமொன்றாக இருப்பது மாணவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி வழிகாட்டுவதாகும். உயர் அடைவுகளை எய்தும் மாணாக்கர்கள் வீடுகளில் நேரத்தை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் படிப்பதற்கென குடும்பம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும் போது கற்றலுக்கு குடும்பம் மதிப்பளிக்கின்றதென பிள்ளைகள் உணர்ந்து செயற்படுவார்கள்.
அடுத்து மிக முக்கியமான விடயமான அமைவது கற்பதற்கு பிள்ளைகளிடம் காணப்படும் அர்ப்பணிப்பை மெச்ச வேண்டும். ஒருவரை அவருடன் சகோதர சகோதரிகளுடன் ஒப்பிடுதல் நண்பர்களுடன் ஒப்பிடுதல் என்பன பெற்றோரைப் பொறுத்தவரையில் பிரத்தியேகமான தவறாகக் காணப்படுகின்றது.
அத்துடன் நமது பிள்ளைகள் எந்நிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? யாருடன் சேர்கின்றார்கள் என்பனவற்றை எப்பொழுதுமே பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பிள்ளைக்குக் கற்பிக்கும் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்வது பெற்றோரின் சிறந்த வகிபங்காகக் காணப்படுகின்றது. இவ்வாறு ஆசிரியருடன் சிறந்ததொரு இடைவினையை மேற்கொள்ளும் போதே பிள்ளையின் கல்வித் திறமை பற்றி விசாரித்துக் கொள்ள முடிகின்றது.
மேலும் கற்றலுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள் “எழுதுகோல் போன்ற உபகரணங்களை தவறாது வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் கற்றலுக்குத் தடையாக உள்ள காரணிகளை இனங்கண்டு அகற்றுவது பெற்றோரின் முக்கிய கடமையாக காணப்படுகின்றது.
இன்று இலத்திரனியல் தொடர்புசாதனங்கள் மாணவர்களின் கைகளில் சரளமாகத் தவழ்கின்றன. கையடக்கத் தொலைபேசி, ஐபேட், மடிக்கணனி என்பன மாணவர்களின் கற்றலுக்கான நேரத்தில் பெரும் பகுதியை உள்ளடக்குகின்றன. அத்துடன் இவ்வாறான இலத்திரனியல் சாதனங்களின் மிதமிஞ்சிய உபயோகத்தால் பிள்ளை நோய் வாய்ப்படுவதோடு நடத்தைகளில் மாற்றங்கள் நிகழவும் ஏதுவாகின்றதென்பதை மறுக்க முடியாது.
அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளை ஆரோக்கியமாக இருந்தாலேயே கற்றல் நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ள முடிகின்றது.
எனவே இவ்வாறு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பாடசாலை மட்டுமன்றி பெற்றோர்களின் வகிபங்கும் மிக முக்கியமானது என்பதை பெற்றோர் உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதே இன்றைய தலைமுறையினரை நாளைய ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் உருவாக்க முடியும்.
எஸ். ஏ. டீ. ரைஹானா
கல்விப் பீடம்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
தினகரன் பத்திரிகையிலிருந்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
paransothi wrote:பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்
» லொறி மீது பாடசாலை வான் மோதி 11 குழந்தைகள் பலி
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» குழந்தைகள் மீது செலுத்தும் கோபம் போல் கோழைத்தனம் ஏதுமில்லை....!!!!
» லொறி மீது பாடசாலை வான் மோதி 11 குழந்தைகள் பலி
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» குழந்தைகள் மீது செலுத்தும் கோபம் போல் கோழைத்தனம் ஏதுமில்லை....!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|