Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
2 posters
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை

குழந்தையின் முதல் ஆசான், அக்குழந்தையின் பெற்றோர் ஆவர். அதிலும் குழந்தை முதலில் அறிந்து கொள்ளும் ஆசான் தாய் தான். அந்த வகையில் ஒரு வீட்டுச் சூழலில் குடும்பம் என்ற ஒரு பெரிய வலையமைப்பிற்குள் ஒரு பிள்ளையின் நடத்தைகளும், கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பமாகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கற்றல் என்பது புத்தகங்களும் ஆசிரியர்களும் கூறுபவற்றை மாத்திரம் ஏற்றுக்கொண்டு பரீட்சையில் மாணவனை வெற்றி பெறச் செய்வது மட்டுமல்ல. மாறாக கற்பவனின் வாழ்க்கைப் பரீட்சையில் அவனை வெற்றிபெறச் செய்வதே உண்மையான கற்றல் செயற்பாடாகும். இக்கற்றல் செயற்பட்டில் பாடசாலையின் வகிபங்கு மட்டுமல்லாது பெற்றோரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் ஒரு பிள்ளையின் கற்றல் செயற்பாட்டில் பெற்றோரின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகக் காணப்படுகிறது.
முதலில் பெற்றோர் தமது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. கற்றல் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழல் காணப்படும் போதே கற்றல் வினைத்திறனாக அமைய முடியும். காற்றோட்டமுள்ள போதியளவு வெளிச்சம் மிக்க, அமைதியான. சுகாதாரமான சூழல் ஒன்றினை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் வீடோன்றினை நிர்மாணிக்கும் போது பிள்ளைகளை கவரக்கூடிய வகையில் கற்றல் அறையொன்றினை நிர்மாணிப்பது பயனுடையதாகக் காணப்படுகின்றது. இதனாலேயே சேரிப்புறங்களில் வாழும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளையும் பார்க்க வசதியான குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு திறன் மிக்கதாகக் காணப்படுகின்றது.
மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் இடையறாத இணைப்பு, பாடசாலையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் அறைகூவல்களையும் சந்திப்பதற்கு பிள்ளையை உளரீதியாக மென்மேலும் தயார்படுத்துகின்றது. பிள்ளைகளிடம் அன்பான தொடர்புகளைப் பேண வேண்டும். குறிப்பாக பிள்ளை பயத்தால் அல்லது கவலையால் பீடிக்கப்பட்டிருக்கும் போது இவ்வாறு பிள்ளைகளிடத்தில் அன்பைப் பேணுவது மிக அவசியமானதாகக் காணப்படுகின்றது. ஏனைய குடும்ப அங்கத்தவரின் அல்லது தொலைக்காட்சியின் இடையூறின்றி ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களையேனும் ஒவ்வொரு பிள்ளையுடனும் அந்த நாள் பற்றி தனியாக உரையாடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொரு முக்கியமான விடயமாக அமைவது சிறுபிள்ளைகள் அனைவரும் புதிய சொற்களைப் பயன்படுத்த மிகவும் விரும்புவார்கள். சில குடும்பங்களில் சொற்களைப் பற்றி துருவி ஆராய்தல் ஊக்குவிக்கப்படுகின்றது. உண்மையில் அது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு ஊற்றாக அமைகின்றது. ஆனால் சில பிள்ளைகள் புதியதொரு சொல்லை தவறாக உச்சரிக்கும் போது அல்லது தவறாகப் பயன்படுத்தும் போது கேலி செய்யப்படுகின்றார்கள். இதனால் சொற்கள் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மங்கிவிடுகிறது. எனவே பெற்றோர் இவ்விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்.
அடுத்து முக்கியமான விடயமொன்றாக இருப்பது மாணவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி வழிகாட்டுவதாகும். உயர் அடைவுகளை எய்தும் மாணாக்கர்கள் வீடுகளில் நேரத்தை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் படிப்பதற்கென குடும்பம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும் போது கற்றலுக்கு குடும்பம் மதிப்பளிக்கின்றதென பிள்ளைகள் உணர்ந்து செயற்படுவார்கள்.
அடுத்து மிக முக்கியமான விடயமான அமைவது கற்பதற்கு பிள்ளைகளிடம் காணப்படும் அர்ப்பணிப்பை மெச்ச வேண்டும். ஒருவரை அவருடன் சகோதர சகோதரிகளுடன் ஒப்பிடுதல் நண்பர்களுடன் ஒப்பிடுதல் என்பன பெற்றோரைப் பொறுத்தவரையில் பிரத்தியேகமான தவறாகக் காணப்படுகின்றது.
அத்துடன் நமது பிள்ளைகள் எந்நிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? யாருடன் சேர்கின்றார்கள் என்பனவற்றை எப்பொழுதுமே பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பிள்ளைக்குக் கற்பிக்கும் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்வது பெற்றோரின் சிறந்த வகிபங்காகக் காணப்படுகின்றது. இவ்வாறு ஆசிரியருடன் சிறந்ததொரு இடைவினையை மேற்கொள்ளும் போதே பிள்ளையின் கல்வித் திறமை பற்றி விசாரித்துக் கொள்ள முடிகின்றது.
மேலும் கற்றலுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள் “எழுதுகோல் போன்ற உபகரணங்களை தவறாது வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் கற்றலுக்குத் தடையாக உள்ள காரணிகளை இனங்கண்டு அகற்றுவது பெற்றோரின் முக்கிய கடமையாக காணப்படுகின்றது.
இன்று இலத்திரனியல் தொடர்புசாதனங்கள் மாணவர்களின் கைகளில் சரளமாகத் தவழ்கின்றன. கையடக்கத் தொலைபேசி, ஐபேட், மடிக்கணனி என்பன மாணவர்களின் கற்றலுக்கான நேரத்தில் பெரும் பகுதியை உள்ளடக்குகின்றன. அத்துடன் இவ்வாறான இலத்திரனியல் சாதனங்களின் மிதமிஞ்சிய உபயோகத்தால் பிள்ளை நோய் வாய்ப்படுவதோடு நடத்தைகளில் மாற்றங்கள் நிகழவும் ஏதுவாகின்றதென்பதை மறுக்க முடியாது.
அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளை ஆரோக்கியமாக இருந்தாலேயே கற்றல் நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ள முடிகின்றது.
எனவே இவ்வாறு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பாடசாலை மட்டுமன்றி பெற்றோர்களின் வகிபங்கும் மிக முக்கியமானது என்பதை பெற்றோர் உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதே இன்றைய தலைமுறையினரை நாளைய ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் உருவாக்க முடியும்.
எஸ். ஏ. டீ. ரைஹானா
கல்விப் பீடம்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
தினகரன் பத்திரிகையிலிருந்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
paransothi wrote:பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
» லொறி மீது பாடசாலை வான் மோதி 11 குழந்தைகள் பலி
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» குழந்தைகள் மீது செலுத்தும் கோபம் போல் கோழைத்தனம் ஏதுமில்லை....!!!!
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
» லொறி மீது பாடசாலை வான் மோதி 11 குழந்தைகள் பலி
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» குழந்தைகள் மீது செலுத்தும் கோபம் போல் கோழைத்தனம் ஏதுமில்லை....!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|