Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்
Page 1 of 1
மனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்
சென்ற திங்கள்கிழமை நம்ம தஞ்சையம்பதி செல்வராஜூ அய்யா அவர்களின் பேத்தியின் பிறந்ததினம். மாலை அவர்கள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. கில்லர்ஜி அண்ணா அவர்கள் ஒருவாரமாகவே ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கும் செல்ல ரொம்ப ஆசை... ஆனால் கடந்த சில வாரங்களாகவே ஒரு பிரச்சினைக்குரிய வேலையை எடுத்திருக்கிறோம். இதை முடித்தால் இந்த வேலை முடிவுக்கு வந்துவிடும். அதன் காரணமாக எங்களுக்குள் பிரச்சினை மேகம் சூழ்ந்திருந்தது. அது பெருமழையாகி அடிதடி... வெட்டுக்குத்து... என எல்லாம் நடக்கலாம் என்ற சூழலில்தான் பயணித்தோம்... இன்னும் பயணிக்கிறோம். அதனால் மாலை சீக்கிரம் வீடு திரும்ப முடியவதில்லை... அண்ணனிடம் விபரம் சொன்னேன்... சரி ஆறு மணிக்குள் வர முடிந்தால் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்... நம்ம நேரம் பாருங்க... அன்னைக்கு நான் வெளியில் வந்து போன் பண்ணும் போது ஆறுக்கு மேலாகியிருந்தது. இனி அறைக்கு வந்து கிளம்பி... நம்மால் ஏன் அவருக்கும் தாமதமாக வேண்டும் என அண்ணனிடம் மீண்டும் போனில் பேசி விபரம் சொல்லி எனது வாழ்த்தையும் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி விட்டேன். இங்கு சொந்தங்கள் கிடைப்பதே அரிது... அப்படியிருக்க அன்பாய் அழைத்த பிறந்தநாளுக்குச் செல்ல முடியவில்லை... குட்டீஸ்க்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற வருத்தம்தான் மனசில்... கில்லர்ஜி அண்ணாவுடன் இடையில் ஒருநாள் சென்று வர வேண்டும்... இப்போதைக்கு செல்லக்குட்டிக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
இந்த மனுசனை கொஞ்ச நாளாத்தான் பதிவுப்பக்கம் காணோம்...ஆனா ஆளு எதோ முக்கியமான வேலையா இருக்காருன்னு மட்டும் தெரியுது. இல்லேன்னா எங்க யாரு எழுதியிருந்தாலும் அங்க இவரோட கருத்து இருக்கும். சில நாட்களில் இங்கு இரவு பனிரெண்டு மணிக்கு (இந்திய நேரம் இரவு 1.30) யாருக்காச்சும் கருத்துப் போடப் போயி அங்க நாமதான் முதல்லு நினைச்சு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டா... இவர் அங்கு கருத்து இட்டிருப்பார்... வலைச்சரத்தில் உங்களைப் பற்றிச் சொல்லிய அந்த வார ஆசிரியர் விவரம் சொல்ல வருமுன் இவர் அங்கே சொல்லி இணைப்பும் கொடுத்திருப்பார்... நமது தளத்தில் ஏதாவது பிரச்சினையா ஓடி வந்து உதவுவார்... யாரைச் சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் தெரியாமயா இருக்கும்... ஆமா நம்ம வலைச்சித்தர் அண்ணன் தனபாலன் அவர்களைத்தான் சொல்றேன். அவரைப் பற்றி எதுக்கு எழுதுறான்னு எல்லாம் நினைக்கமாட்டீங்க... ஏன்னா நீங்கள்லாம்தான் அவரோட முகநூல் பக்கத்துல வாழ்த்து மழை பொழிஞ்சிட்டீங்களே... அந்த குங்குமப் பொட்டுக்காரரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் இரண்டு முறை போனிலும் சில பல மின்னஞ்சலிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்பு அண்ணன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்லச் சொன்னார்... எல்லாருக்கும் என் மனைவியின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்தே எங்களை மலர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நலமோடும் வளமோடும் வாழ வைக்கும்... மீண்டும் நன்றி.
என் மனைவியின் பிறந்தநாளுக்கு சேனையில் வாழ்த்துப் போட்ட நிஷா அக்காவுக்கும் அங்கு வாழ்த்திய நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும், என் கொலையாளி யார்..? குறுநாவலின் தொடர் வாசகி, என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்த என் எழுத்தின் ரசிகை, எனது அன்பு அக்கா பானு ஷாபனா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தை தொடர்ந்து பூங்கதிர் சார்பகிர்ந்து வருவது மகிழ்ச்சி என்றால் சென்ற வாரத்தில் வாசகர் வாய்ஸ் என்ற பகுதிக்கு எழுதியதில் பாக்யராஜ் சார் தேர்வு செய்த கருத்துக்களில் என் கருத்தும் ஒன்று... ரொம்பச் சந்தோஷமாக இருந்தது... திரைக்கதை மன்னனல்லவா அவர்... அவரின் மனசுக்கு பிடிச்ச மாதிரி நம்ம கருத்து இருப்பதே பெரிய விஷயம் அல்லவா.. என்னவோ தெரியலை முந்தாநாள் தாவணிக் கனவுகள் படம் பார்க்கணுமின்னு தோணுச்சு... இதற்கு முன் அந்தப்படத்தை முழுவதும் பார்த்ததில்லை... கோழி கிளறியது போல் சில இடங்களை மட்டும் பார்த்திருப்பேன். நேற்று உட்கார்ந்து பார்த்தேன்... என்ன அழகான ஸ்கிரீன்பிளே... ஐந்து தங்கைகளின் அண்ணனாக... அதுவும் கஷ்டப்படும் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக மனுசன் வாழ்ந்திருக்கிறார். வசனங்களில் அத்தனை ஷார்ப்... அதுவும் பாரதிராஜா அவர்களின் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து ராதிகாவிடம் நடித்துக் காண்பிக்கும் போது பேசும் வசனங்கள்.... அதேபோல் இறுதிக்காட்சியில் மனிதர் பேசாமல் பெண்களைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கும் இடத்தில் வரும் வசனங்கள்... தியேட்டர் காட்சிகள் சிரிக்க வைத்தாலும் ரொம்பவே சிந்திக்க வைத்தது. திரைக்கதை மன்னன்னா அவர்தான் போங்க... அவருக்கும் பிறந்தநாளாம்... ஆர்.வி. சரவணன் அண்ணன் மட்டும்தான் சொல்வாரா நாமளும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிடுவோம்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்.
என்னடா ஒரே பிறந்த நாளா இருக்குன்னு யோசிக்காதீங்க வாங்க கொஞ்சமா அரசியலும் பேசுவோம், பொங்கல் பரிசுன்னு சொல்லி ஒரு ரெண்டு கோடியை அம்மா கட்டம் கட்டிருச்சு போல. வெள்ள நிவாரணத்துக்கு வந்த தொகை இப்போ மக்களை மயக்கி முட்டாளாக்கி ஜெயிக்கிறதுக்காக பயன்படப்போகுது... சரி விடுங்க... பச்சரிசி, வெல்லம், கரும்பு, கையில 100 ரூபா... (இதுல நிறைய 100 ரூபாய் அம்மாவுக்கே திரும்பி போயிரும் டாள்மார்க் வாயிலாக) எல்லாம் கொடுக்கிறாங்களாம்.. விடாதீங்க... வாங்கிக்கங்க... ஆமா என்ன கொடுத்தாலும் வாங்கிக்கங்க.. செய்வீங்களா... செய்வீங்களான்னு கேட்டா செய்வோம்... வச்சிச் செய்வோம்ன்னு மறக்காம சொல்லிடுங்க...? அதே மாதிரி ஐந்து வருடத்துக்கு முன்னால நாம அனுப்புன எம்.எல்.ஏ. ஓட்டுக் கேட்டு வருவாப்ல... இப்பத்தான் வழி தெரிஞ்சுச்சான்னு எல்லாம் கேக்காதீங்க... வரவேற்பு கொடுங்க... ஆளுயர மாலை போடுங்க...முடிஞ்சா அடிக்காம அடிக்கு ஒரு கட் அவுட்டோ பதாகையோ வையுங்க.. உனக்குத்தான் ஓட்டு... உன்னை வச்சிக் குத்துறோம்ன்னு சொல்லுங்க... அப்புறம் ஆல் அல்லக்கைஸ் கண்டிப்பா அம்மா, அய்யான்னு வருவாங்க... தவறிக்கூட உங்க கோபத்தைக் காட்டிராதீங்க... கொடுக்கிறதை வாங்கிக்கங்க... அவங்களை கொண்டாடி அற்புதப்படுத்துங்க... முடிஞ்சா கரகாட்டம், ஆடல்பாடல் எல்லாம் வச்சி ஜமாய்ங்க... ஆனா தப்பித்தவறிக்கூட உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லாதீங்க.... எல்லாம் உங்களுக்கேன்னு சொல்லி வர்றவனுக்கிட்ட எல்லாம் வஞ்சமில்லாம சிரிச்சி வையுங்க... ஆனா தேர்தலப்போ சிந்தித்து ஓட்டுப் போடுங்க... காசுக்கும் சேலைக்கும் பொங்கல் பரிசுக்கும் ஏமாந்துறாதீங்க... அப்புறம் அடுத்த அஞ்சு வருசத்துக்கு உங்க வாழ்க்கையில பஞ்சம்தான்... இந்த முறை ஆணவ ஆட்சியையும் வாரிசு அரசியலையும் ஒளித்து வாழ்க்கைக்கு வளமான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுங்க.
பசி படம் பார்க்கணும்ன்னு ரொம்பநாளா ஆசை... ஆனா பார்க்க முடியாமலே போனது... நேற்றுப் பார்க்க முடிந்தது... அருமையான படம்... அதுவும் ஷோபா... அப்பப்பா அந்த மாதிரி நடிக்கிற நடிகை நம்ம காலத்துல இல்லாமப் பொயிட்டாங்களே... குப்பத்துப் பெண்ணாய்... சும்மா மும்பையில அந்தப் பையன் அடித்த ஆயிரம் ரன்னு மாதிரி பத்து மடங்கு புகுந்து விளையாடியிருக்காங்க... என்ன நடிப்பு... என்ன நடிப்பு... அடேங்கப்பா... டெல்லிகணேஷ் குடும்பத்தை பற்றி சிந்திக்காத ஒரு தந்தையாக வருகிறார்... அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே அருமையா நடிச்சிருக்காங்க. கமல் ஒரு காட்சியில் வருகிறார். சோகமான முடிவாய் இருந்தாலும் கடைசிக் காட்சியில் திரையில் போடப்படும் வரிகள் அருமை. படம் பார்க்கும் போது நல்ல நடிகை... தேசிய விருது வாங்கியவர்... தற்கொலை செய்து கொண்டு எதற்காக சாகணும்... வாழ்ந்திருக்கலாமே... இன்னும் நிறைய சாதிச்சிருக்கலாமே என்றுதான் தோன்றியது. பாவம் ஷோபா...
சில தொடர்கள், சில கதைகள் எழுதும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அலுவலக வேலையின் பிடியில் சிக்கி கற்பனைக்கு சிறையிட்டு இருக்க வேண்டியதாகிவிட்டது. அப்படியிருந்தும் 2016 தொடக்கத்தில் எதாவது எழுதணும் என இரண்டு கதைகள் எழுதியாச்சு.. இனி வரும் நாட்களில் நிறைய எழுதணும்... வித்தியாசமான முயற்சியாய் நல்ல தொடர்கள் எழுதணும்... இங்கு இன்னுமொரு காதல் தொடர்கதை ஆரம்பிக்கணும் என்ற ஆசையிருக்கிறது. எண்ணங்கள் ஈடேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
அப்படியே ஷோபா நடித்த முள்ளும் மலரும் படத்தில் இருந்து ஒரு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...
மனசின் பக்கம் அடுத்த வெள்ளியில் மீண்டும்..
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : அகமும் புறமும்
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : அகமும் புறமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|