Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அடக் கடவுளே....
3 posters
Page 1 of 1
அடக் கடவுளே....
அன்பின் சக்திக்கு,
ஒருமுறை கிருபானந்த வாரியாரிடம் ஒரு கடைக்காரர் கடையில் என்ன படம் மாட்டலாம் என்றாராம்...
அதற்கு வாரியார்..
என்ன படம் வேண்டுமானாலும் மாட்டு ..
ஆனால் கலப்படம் செய்துமட்டும் மாட்டாதே என்றாராம்.
ஆனால் சக்தி..
இன்று கடைக்காரர் நினைத்தாலும் கலப்படம் இல்லா ஒரு பொருளையும் விற்க முடியாது.
மிகவும் கேவலமான,
அருவருக்கத்தக்க மனித விலங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
மிளகின் ஊடே அந்திமந்தாரை விதைகள்..
கடுகோடு நாயுருவி நஞ்சு விதைகள்..
எதிலெல்லாம் கலப்படம் என ஆராயப்புகுந்தால்,
அம்மா...
இந்த தேசத்தில் கலப்படம் இல்லாத எந்தப்பொருளும் இல்லை.
என்ன ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நல்லகுடிநீர் என வாங்கும் அடைக்கப்பட்ட நீர் சுத்தமானது கிடையாதாம்.
அரிசியில் பிளாஸ்டிக் கலக்கிறார்கள் என்றபின் சோற்றைப்பார்க்கும் போதெல்லாம்..பயமாய் இருக்கிறது.
கலப்படங்கள் ஒருபுறம் என்றால்... கலப்படமிலாத விஷங்களும் தான் விற்கிறார்கள்..
கொய்யமிட்டாய் என்னும் விஷம் குழந்தைகளை குறிவைத்தே விற்கப்படுகிறது..
ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் முடியாது போலிருக்கிறது.
எத்தனை விஷ உரங்களில் விளைவதைத்தின்றுகொண்டிருக்கிறோம்.
விழிப்புணர்வு வந்ததாய் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம்.
நாளுக்கு நாள் பெருகும் வீதியோர,விரைவு உணவுகளை என்ன சொல்வது.?
கண்முன்னே கண்டதைப்போட்டு வறுத்துத்தருவதை தின்றுவிட்டு...
என்ன பேசுவது விழிப்புணர்வு பற்றி.?
சின்னவயதில் ,என் காலத்தில் எல்லாம் மாறிவிடும் என்ற பேராசை இருந்தது.
இப்போதெல்லாம் அது நடக்காது என்றே சுய இரக்கம் கொல்கிறது சக்தி.
என்ன வாழ்க்கை?
என்ன சமுதாயம்?
கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..
புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு மயிரும் விளையப்போவதில்லை.
எங்கே போய்க்கொண்டிருக்கிறது தேசம்...?
சூரியகாந்தி எண்ணெயிலிருந்து,மருந்து வரை மக்கள் நலத்தை நாசமாக்கும் கும்பல்,துணை போகும் அரசிலிருந்து,அதிகாரிகள் வரை..
எது தடுத்துக்கொண்டிருக்கிறது..
நம் வாழ்வை மீட்கும் போராட்டத்தை.?
கூட்டணிக்காகவும்,ஆட்சிக்காகவும் அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளே...
அடுத்தடுத்த தேர்தல்களில் செத்தவர்களின் வாக்குகளை நீங்கள் நிறைய போட்டுக்கொள்ளலாம்...
முடியாது சக்தி,கடவுள் என்ற ஒருவன் நினைத்தாலும் ,அவனும் இறந்துதான் படுவான்.
இனி கடவுளையும்,கட்சிகளையும் நம்பக்கூடாது?
நமக்கான உணவையும்,உரிமையும் நாமேதான் அடைய வேண்டும்.
உரமில்லா ஒரு முருங்கை வளர்த்து ஆரம்பிக்கலாம்.
மாற்றவேண்டியது மண்ணிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.
அரசு வேண்டுமானால் விண்கலம் அனுப்பட்டும்..
நாம் மண் கலங்களுக்குத்திரும்புவோம்.
அரசியல்,கட்சி,மொழி, எல்லாம் பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம்.
ஆம் சக்தி..உங்கள் இளைஞர் கண்கள் விழிக்க வேண்டும்.
இப்போது சீனாவில் காற்று விற்கிறார்களாம்.
நாமும் அதை காசுகொடுத்து வாங்கவேண்டிவரும்.
அடக் கடவுளே..
அன்புடன்.
செல்வக்குமார்.
http://naanselva.blogspot.com/2016/02/blog-post.html?m=1
ஒருமுறை கிருபானந்த வாரியாரிடம் ஒரு கடைக்காரர் கடையில் என்ன படம் மாட்டலாம் என்றாராம்...
அதற்கு வாரியார்..
என்ன படம் வேண்டுமானாலும் மாட்டு ..
ஆனால் கலப்படம் செய்துமட்டும் மாட்டாதே என்றாராம்.
ஆனால் சக்தி..
இன்று கடைக்காரர் நினைத்தாலும் கலப்படம் இல்லா ஒரு பொருளையும் விற்க முடியாது.
மிகவும் கேவலமான,
அருவருக்கத்தக்க மனித விலங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
மிளகின் ஊடே அந்திமந்தாரை விதைகள்..
கடுகோடு நாயுருவி நஞ்சு விதைகள்..
எதிலெல்லாம் கலப்படம் என ஆராயப்புகுந்தால்,
அம்மா...
இந்த தேசத்தில் கலப்படம் இல்லாத எந்தப்பொருளும் இல்லை.
என்ன ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நல்லகுடிநீர் என வாங்கும் அடைக்கப்பட்ட நீர் சுத்தமானது கிடையாதாம்.
அரிசியில் பிளாஸ்டிக் கலக்கிறார்கள் என்றபின் சோற்றைப்பார்க்கும் போதெல்லாம்..பயமாய் இருக்கிறது.
கலப்படங்கள் ஒருபுறம் என்றால்... கலப்படமிலாத விஷங்களும் தான் விற்கிறார்கள்..
கொய்யமிட்டாய் என்னும் விஷம் குழந்தைகளை குறிவைத்தே விற்கப்படுகிறது..
ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் முடியாது போலிருக்கிறது.
எத்தனை விஷ உரங்களில் விளைவதைத்தின்றுகொண்டிருக்கிறோம்.
விழிப்புணர்வு வந்ததாய் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம்.
நாளுக்கு நாள் பெருகும் வீதியோர,விரைவு உணவுகளை என்ன சொல்வது.?
கண்முன்னே கண்டதைப்போட்டு வறுத்துத்தருவதை தின்றுவிட்டு...
என்ன பேசுவது விழிப்புணர்வு பற்றி.?
சின்னவயதில் ,என் காலத்தில் எல்லாம் மாறிவிடும் என்ற பேராசை இருந்தது.
இப்போதெல்லாம் அது நடக்காது என்றே சுய இரக்கம் கொல்கிறது சக்தி.
என்ன வாழ்க்கை?
என்ன சமுதாயம்?
கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..
புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு மயிரும் விளையப்போவதில்லை.
எங்கே போய்க்கொண்டிருக்கிறது தேசம்...?
சூரியகாந்தி எண்ணெயிலிருந்து,மருந்து வரை மக்கள் நலத்தை நாசமாக்கும் கும்பல்,துணை போகும் அரசிலிருந்து,அதிகாரிகள் வரை..
எது தடுத்துக்கொண்டிருக்கிறது..
நம் வாழ்வை மீட்கும் போராட்டத்தை.?
கூட்டணிக்காகவும்,ஆட்சிக்காகவும் அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளே...
அடுத்தடுத்த தேர்தல்களில் செத்தவர்களின் வாக்குகளை நீங்கள் நிறைய போட்டுக்கொள்ளலாம்...
முடியாது சக்தி,கடவுள் என்ற ஒருவன் நினைத்தாலும் ,அவனும் இறந்துதான் படுவான்.
இனி கடவுளையும்,கட்சிகளையும் நம்பக்கூடாது?
நமக்கான உணவையும்,உரிமையும் நாமேதான் அடைய வேண்டும்.
உரமில்லா ஒரு முருங்கை வளர்த்து ஆரம்பிக்கலாம்.
மாற்றவேண்டியது மண்ணிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.
அரசு வேண்டுமானால் விண்கலம் அனுப்பட்டும்..
நாம் மண் கலங்களுக்குத்திரும்புவோம்.
அரசியல்,கட்சி,மொழி, எல்லாம் பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம்.
ஆம் சக்தி..உங்கள் இளைஞர் கண்கள் விழிக்க வேண்டும்.
இப்போது சீனாவில் காற்று விற்கிறார்களாம்.
நாமும் அதை காசுகொடுத்து வாங்கவேண்டிவரும்.
அடக் கடவுளே..
அன்புடன்.
செல்வக்குமார்.
http://naanselva.blogspot.com/2016/02/blog-post.html?m=1
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: அடக் கடவுளே....
மிகவும் ஆதங்கமான ஆவேசமான ஒரு பதிவு மனக்கஷ்டங்களையும் கவலைகளையும் நாட்டு நடப்புக்களையும் கொட்டித்தீர்த்த ஒரு பதிவு ஒரு வரியில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்
இன்றய நிதர்சனம்
நாம் விழித்துக்கொள்வோம்
நன்றியுடன் நண்பன்
இன்றய நிதர்சனம்
நாம் விழித்துக்கொள்வோம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடக் கடவுளே....
நண்பன் wrote:மிகவும் ஆதங்கமான ஆவேசமான ஒரு பதிவு மனக்கஷ்டங்களையும் கவலைகளையும் நாட்டு நடப்புக்களையும் கொட்டித்தீர்த்த ஒரு பதிவு ஒரு வரியில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்
இன்றய நிதர்சனம்
நாம் விழித்துக்கொள்வோம்
நன்றியுடன் நண்பன்
என்ன திருத்தம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடக் கடவுளே....
படித்து முடித்து விட்டீர்களா அவரிடம் சொல்லி விட்டு ஒரு வசனத்தை மாற்ற நினைத்தேன் ஆதங்கத்தில் அப்படி எழுதி விட்டார் உங்களுக்கு அந்த வார்த்தை சரியாகப்பட்டதா?Nisha wrote:நண்பன் wrote:மிகவும் ஆதங்கமான ஆவேசமான ஒரு பதிவு மனக்கஷ்டங்களையும் கவலைகளையும் நாட்டு நடப்புக்களையும் கொட்டித்தீர்த்த ஒரு பதிவு ஒரு வரியில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்
இன்றய நிதர்சனம்
நாம் விழித்துக்கொள்வோம்
நன்றியுடன் நண்பன்
என்ன திருத்தம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடக் கடவுளே....
எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே! என்ன வரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடக் கடவுளே....
கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..Nisha wrote:எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே! என்ன வரி?
புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடக் கடவுளே....
நண்பன் wrote:கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..Nisha wrote:எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே! என்ன வரி?
புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒருமயிரும்விளையப்போவதில்லை.
ஆஹா! ஆழ்ந்த வாசிப்பு!
அவரே படித்து விட்டு மாத்தி விடுவார். இப்பதிவு பிளாக்கிலும் போடுவதால் அவரே திருத்துவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடக் கடவுளே....
Nisha wrote:நண்பன் wrote:கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..Nisha wrote:எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே! என்ன வரி?
புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒருமயிரும்விளையப்போவதில்லை.
ஆஹா! ஆழ்ந்த வாசிப்பு!
அவரே படித்து விட்டு மாத்தி விடுவார். இப்பதிவு பிளாக்கிலும் போடுவதால் அவரே திருத்துவார்!
அங்கேயும் சுட்டிக்காட்டி விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடக் கடவுளே....
ஹாஹா@ செல்வா சார் மாட்டிக்கொண்டாரா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடக் கடவுளே....
மாட்ட வில்லை திருத்திக்கொள்வார்Nisha wrote:ஹாஹா@ செல்வா சார் மாட்டிக்கொண்டாரா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடக் கடவுளே....
நன்றி...ஆனால் நான் என் கவிதையின் வரிகளை மாற்றப்போவதில்லை....அந்த வரிகளின் வலியை உணர்வீர்கள் என நினைக்கிறேன்...
வாழும் நாளெல்லாம்...ஏமாற்றப்படும் மக்களின் உணர்வை வேறெந்த வார்த்தை கொண்டு சொல்ல...?
என் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மிகுந்த யோசிப்பினூடே வருகிறது...
மேலும்..நண்பனே...அது ஒன்றும் மிகவும் கேவலமானதில்லை...
ஒரு கடவுளுக்கு அதை விரும்பி செலுத்தும்
வரலாறு தங்களும் அறிவீர்கள்...
வாழும் நாளெல்லாம்...ஏமாற்றப்படும் மக்களின் உணர்வை வேறெந்த வார்த்தை கொண்டு சொல்ல...?
என் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மிகுந்த யோசிப்பினூடே வருகிறது...
மேலும்..நண்பனே...அது ஒன்றும் மிகவும் கேவலமானதில்லை...
ஒரு கடவுளுக்கு அதை விரும்பி செலுத்தும்
வரலாறு தங்களும் அறிவீர்கள்...
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: அடக் கடவுளே....
இலங்கையில் அம்மாதிரி வார்த்தைகளை திட்டி தீர்க்க பயன் படுத்துவார்கள், நல்ல வார்த்தைகள் அகராதியில் அவை இல்லை என்பதால் நண்பன் தும்பி அப்படி சொன்னார் செல்வா சார். அவர் உங்கள் கவிதைகளை ஊன்றி படிப்பதனால் தான் சுட்டி காட்டி இருக்கின்றார். இட்ஸ் ஒக்கே சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அடக் கடவுளே
» கடவுளே...அது காப்பிதான்!
» கடவுளே எனக்கு பண உதவி வேண்டும்
» கடவுளே என்னை ஒல்லியாக்கி விடு....
» கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
» கடவுளே...அது காப்பிதான்!
» கடவுளே எனக்கு பண உதவி வேண்டும்
» கடவுளே என்னை ஒல்லியாக்கி விடு....
» கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|