Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
சிறுகதை : நானே முதலாளி
3 posters
Page 1 of 1
சிறுகதை : நானே முதலாளி
"என்ன வேலை அதிகமோ?"
ஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:35
"ஆமாங்க... கொன்னு எடுக்குறானுங்க.. எல்லாமே நானேதான் பாக்க வேண்டியிருக்கு"
"உங்க வேலையை மட்டும் பாருங்க... எதுக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டு பார்க்கிறீங்க..?"
"எங்கங்க இழுத்துப் போட்டுப் பார்க்கிறேன்... நாலு டெண்டர் வந்திருக்கு... இதை இதை இப்படிப் பண்ணினால் போதும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்..."
"ம்ஹூம்... அதெல்லாம் நீங்கதான் பாக்கணுமா... என்ன?"
"எனக்கு எல்லாந் தெரியுங்க... சொன்னா கேக்க மாட்டானுங்க... எனக்குத் சொல்லித்தாறியான்னு சொல்லிட்டு சாயந்தரமா வந்து இதை எப்படிச் செய்யலாம்ன்னு கேப்பானுங்க... எப்பவும் இதே வேலையாப் போச்சு..."
"அது சரி... இதெல்லாம் உங்ககிட்ட கேப்பாங்களா...? அப்ப நீங்கதான் எல்லாமே அப்படித்தானே...”
“எதை எதை எப்படிப் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரியாததா... எத்தனை கம்பெனி பாத்திருப்பேன்...”
“ம்...”
“நேத்துக்கூட முதல்ல கேக்க மறுத்தவன், சாயந்தரம் வந்து நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டான்... ஆமான்னு சொன்னதும் நீ சந்தோஷம்ன்னா நானும் சந்தோஷம்தான்... டெண்டர் இன்னும் தயாராகலையில்லன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறான்... ரெடி பண்ண வேண்டிய டெண்டர் டேபிள்ல சிரிச்சிக்கிட்டு கிடக்கு... இனி நாளைக்குப் போயி நாந்தான் எல்லாம் பாக்கணும்”
“பாருங்க... நீங்க செய்யலைன்னதும் அவரும் செய்யலை... மொத்தப் பொறுப்பும் உங்க தலையில... கம்பெனியில இருக்க எல்லா மேனேஜருமே நீங்க சொன்னா செய்யிற மாதிரி இருந்தா எப்படி... அவனவன் வேலையை அவனவன் பாக்க வேண்டாம்... எல்லாத்தையும் ஒராளு மேல அள்ளிப் போட்டா எப்படி... நியாயமா இது..? நீங்க ஏன் மூளையைப் போட்டு கசக்கி வேலை பாக்குறீங்க... கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும்... உங்க உடம்புதாங்க உங்களுக்கு முக்கியம்... கம்பெனி செய்யாட்டி பொயிட்டுப் போகுது... யாருக்கு நஷ்டம்... என்ன நாஞ் சொல்றது...”
“நமக்கு அப்படி யாரோ செய்யட்டும்ன்னு பார்த்துக்கிட்டு இருக்கிற மனசில்லைங்க... எல்லாத்தையும் நான் இழுத்துப் போட்டு செஞ்சிருவேன்...”
“அதுக்காக டெண்டர் வேலை எல்லாம் மேனேஜருங்க.. அதுக்குன்னு உள்ள ஆளுங்க தயார் பண்ணனும் நீங்க எப்படி..?”
“எல்லாமே எனக்குத் தெரியுங்க... என்ன காலம் வெள்ளலை... அவன் முதலாளியா இருக்கான்... நான் இப்படி கெடந்து கஷ்டப்படுறேன்....”
“ம்... சரிங்க.... வொர்ரி பண்ணிக்காதீங்க... ரொம்ப கெரங்கிப் போயிட்டீங்க... எதையும் நெனச்சு கவலைப்படாதீங்க... டெண்டர் விஷயாம ரொம்ப திங்க் பண்ணாதீங்க... நல்லா சாப்பிடுங்க... சுகர் மாத்திரை.. பிரஷர் மாத்திரை எல்லாம் ஒழுங்காச் சாப்பிடுறீங்களா?”
“ம்...”
“விடாம சாப்பிடுங்க... அடிக்கடி டெஸ்ட் பண்ணிக்கங்க... பொறிச்ச அயிட்டங்களை சாப்பிடாம கொறச்சிக்கங்க... எல்லாத்துக்கும் மேல டென்சனைக் குறைங்க... நா அடுத்த வெள்ளிக்கிழமை வர்றேன்.... நாளைக்கு வேலை... இனி இங்கிருந்து முஸாபா போறதுக்குள்ள தாவு தீந்திரும்... சரி... அப்பக் கெளம்பவா...?”
“இருங்க... நானும் பஸ் ஸ்டாப் வரைக்கும் வாறேன்...”
“வேண்டாம்... எதுக்கு லிப்ட்ல எறங்கினா... இதே பில்டிங்குக்கு கீழே பஸ் ஸ்டாப்... வீணாவுல நீங்க எதுக்கு எறங்கி ஏறுறீங்க... நாங்க போயிருவோம்..."
“சரி பின்னே... பாத்து போங்க... பொயிட்டு போன் பண்ணுங்க...”
“சரி...”
புதிதாக அறைக்கு வந்திருந்த நண்பனை அபுதாபி போலாமென கூட்டி வந்திருந்தான். லிப்டுக்கு நிற்கும் போது அவன் மெதுவாக "ஏங்க... உங்க சொந்தக்காரர்தான் பெரிய வேலையில் இருக்காருல்ல... பின்னே ஏன் நீங்க டிகிரி முடிச்சிட்டு ஆபீஸ் பாயா டீக்கிளாஸ் கழுவுறீங்க... இவருக்கிட்ட சொல்லி இவங்க ஆபீசிலேயே நல்ல வேலைக்கு ஏறலாமே..." என்றான்.
"அட நீங்க வேற... இந்தாளு பாக்குறது டாக்குமெண்ட் கண்ட்ரோலர் வேலை... பேசுறது மட்டும் பெரிசா... இன்னும் உக்காந்திங்கன்னா உங்ககிட்டா ஊர்ல இருக்கும் போது கலெக்டருக்கு சந்தேகம் வந்தா வண்டியை எடுத்துக்கிட்டு என்னைத் தேடித்தான் வருவாருன்னு சொல்வாரு... எல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு பழகிடுச்சு... வாய் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படி இருக்கக்கூடாது... இது சும்மா இருந்தா நிம்மதியா வேலையைப் பாத்துட்டு சந்தோஷமா இருக்கலாம்... இதுவே எல்லாத்தையும் தூக்கிச் சுமக்குது" எனச் சிரிக்க, அவர் அதுக்குப் பின் முஸாபா வரைக்கும் பேசவே இல்லை. அடுத்த முறை வரமாட்டார்ன்னு நினைக்கிறேன்.
உறவுகளே பிரதிலிபி 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது சிறுகதையும் இருக்கு. அதற்கு கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அங்கு சென்று 'விமர்சனம் எழுத' என்ற பட்டனைச் சொடுக்கி, பிரதிலிபியில் உறுப்பினராக இல்லை என்றால் முகநூல் நுழைவு முகவரியைக் கொடுத்து உள் சென்று கருத்து இடவில்லை என்றாலும் கதையைப் படித்து மதிப்பெண் கொடுங்கள். மறக்காதீர்கள்... உங்கள் நட்புக்களுக்கும் சொல்லுங்கள்... என் கதை மட்டுமல்ல மற்ற நல்ல ஆக்கங்களுக்கும் உங்கள் மேலான மதிப்பெண்ணை அளியுங்கள். நன்றி.
********
ஓரு வேண்டுகோள்...
உறவுகளே பிரதிலிபி 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது சிறுகதையும் இருக்கு. அதற்கு கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அங்கு சென்று 'விமர்சனம் எழுத' என்ற பட்டனைச் சொடுக்கி, பிரதிலிபியில் உறுப்பினராக இல்லை என்றால் முகநூல் நுழைவு முகவரியைக் கொடுத்து உள் சென்று கருத்து இடவில்லை என்றாலும் கதையைப் படித்து மதிப்பெண் கொடுங்கள். மறக்காதீர்கள்... உங்கள் நட்புக்களுக்கும் சொல்லுங்கள்... என் கதை மட்டுமல்ல மற்ற நல்ல ஆக்கங்களுக்கும் உங்கள் மேலான மதிப்பெண்ணை அளியுங்கள். நன்றி.
நீங்கள் அளிக்க இருக்கும் மதிப்பெண்ணுக்கு இப்பவே நன்றி...!
-'பரிவை' சே.குமார்
ஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:35
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதை : நானே முதலாளி
கதை அருமை குமார்...
சிலர் வாயை வைத்து ஊர்க்கே விருந்து வச்சிடுவாங்க வடை பாயாசத்தோட.
அந்த லின்க்கில் போனால் ஓப்பன் ஆகல குமார்.
சிலர் வாயை வைத்து ஊர்க்கே விருந்து வச்சிடுவாங்க வடை பாயாசத்தோட.
அந்த லின்க்கில் போனால் ஓப்பன் ஆகல குமார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுகதை : நானே முதலாளி
பானுஷபானா wrote:கதை அருமை குமார்...
சிலர் வாயை வைத்து ஊர்க்கே விருந்து வச்சிடுவாங்க வடை பாயாசத்தோட.
அந்த லின்க்கில் போனால் ஓப்பன் ஆகல குமார்.
கருத்துக்கு நன்றி அக்கா...
அதில் போனால் ஓபன் ஆகிறது. அங்கு போய் விமர்சனம் எழுத என்ற பட்டனை அழுத்தி கதை படித்து மதிப்பெண் கொடுக்கலாமே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதை : நானே முதலாளி
நீண்ட நாட்களின் பின் உங்கள் சிறுகதை ஒன்றைப் படிக்கிறேன்
ஹா ஹா பாவம் பயபுள்ள ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று நானும் உருகி உருகி படித்தேன் எம்புட்டு வேலைதான் செய்றான் பய புள்ளன்னு கடைசியில்தான் தெரிய வந்தது எல்லாம் வெறும் புழுவல் என்று ஹா ஹா அருமையான கதை
நன்றி அண்ணா நானும் சென்று மதிப்பெண் இடுகிறேன் இதோ கிளம்புறேன்
நன்றியுடன் நண்பன்
ஹா ஹா பாவம் பயபுள்ள ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று நானும் உருகி உருகி படித்தேன் எம்புட்டு வேலைதான் செய்றான் பய புள்ளன்னு கடைசியில்தான் தெரிய வந்தது எல்லாம் வெறும் புழுவல் என்று ஹா ஹா அருமையான கதை
நன்றி அண்ணா நானும் சென்று மதிப்பெண் இடுகிறேன் இதோ கிளம்புறேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை : நானே முதலாளி
கருத்துக்கு நன்றி நண்பன்...
இந்த மாதிரி இன்னும் இருக்கு....
அப்ப அப்ப அவரை அடையாளம் காண்போம்...
இந்த மாதிரி இன்னும் இருக்கு....
அப்ப அப்ப அவரை அடையாளம் காண்போம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதை : நானே முதலாளி
சே.குமார் wrote:கருத்துக்கு நன்றி நண்பன்...
இந்த மாதிரி இன்னும் இருக்கு....
அப்ப அப்ப அவரை அடையாளம் காண்போம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை : நானே முதலாளி
சே.குமார் wrote:பானுஷபானா wrote:கதை அருமை குமார்...
சிலர் வாயை வைத்து ஊர்க்கே விருந்து வச்சிடுவாங்க வடை பாயாசத்தோட.
அந்த லின்க்கில் போனால் ஓப்பன் ஆகல குமார்.
கருத்துக்கு நன்றி அக்கா...
அதில் போனால் ஓபன் ஆகிறது. அங்கு போய் விமர்சனம் எழுத என்ற பட்டனை அழுத்தி கதை படித்து மதிப்பெண் கொடுக்கலாமே...
அதை தான் செய்தேன் வரல:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுகதை : நானே முதலாளி
இருங்க இப்போது ஒரு தடவை முயற்சிக்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுகதை : நானே முதலாளி
பாருங்க குமார் ஸ்கிரீன் ஷார்ட் போட்டிருக்கேன். அதுல பாஸ்வேர்ட் போட்டேன் .
Invalid Credentials! இப்படி வருகிறது. முகநூலிலும் நுழைய முடியல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுகதை : நானே முதலாளி
அப்பாடா முகநூலில் உள்ளே நுழைந்து விட்டேன். விமர்சனம் பதிவேற்றப்படுகிறது என்று வருகிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» தியேட்டர் முதலாளி
» முதலாளி – ஒரு பக்க கதை
» கருணையுள்ள முதலாளி…!
» அடப் போங்க முதலாளி..
» தியேட்டர் முதலாளி
» முதலாளி – ஒரு பக்க கதை
» கருணையுள்ள முதலாளி…!
» அடப் போங்க முதலாளி..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|