Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
Page 1 of 1
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
-
”கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக்
கொண்டே இருக்கிறது…
எல்லாரும் ஜாக்கிரதை…
என்றேனும் பிடிபட்டே தீருவோம்”…
–
ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்று
விட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை
காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை
உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.
–
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகள்களைக்
கொண்டாடியவருக்கும் சமீபத்தில்தான் மகளொருத்தி
பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்
படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த
அளவிற்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
என்பதுதான்.
–
கேட்டால் நொடியில் உடனடியாக ஒரு பாடலை கவிதை
வரிக்களுக்குள் அடக்கி எழுதிக் கொடுத்துவிடுவார் முத்துக்குமார்
என்று திரையுலகினரால் கொண்டாடுப்படுபவர். இரண்டு முறை
தேசிய விருது பெற்ற கலைஞர். ஆனால், 41 வயதில் மரணமென்பது…
மூளையால் வாழ்ந்தவர்களுக்கு, ஆயுள் அதிகமில்லை என்று
பாரதிக்குப் பின் மீண்டும் பொட்டில் அறைந்து சென்றிருக்கின்றது.
–
நான்கு வயதிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ
குழந்தைகள் மீதான பாசம் அதிகம் அவருக்கு. அவருடைய
பாடல்களிலும் சரி, கவிதைப் புத்தககங்களிலும் சரி தந்தைக்கும்,
மகன், மகளுக்குமான இடம் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று பெண்
குழந்தையின் அருகாமையையும், அகமகிழ்ச்சியையும் அப்பாவின்
மனநிலையிலிருந்து பதிவு செய்திருந்ததற்காகவே தேசிய விருதினை
அள்ளிச் சென்றவர் நா.முத்துக்குமார்.
இனி அவர் கனவில் மட்டுமே நம்மைச் சந்திக்க வருவார் அவருடைய
மீதமிருக்கும் கவிதை நினைவுகளால் என்பதை ஏற்றுக் கொண்டே
ஆக வேண்டும் நாம்.
குழந்தைகள் நிறைந்த உங்கள் வீட்டில் இனி நீங்கள் வெறும்
புகைப்படமாக இருந்து மட்டுமே அவர்களைப் பார்த்துக்
கொண்டிருப்பீர்கள். இன்னும் இன்னும் அழுகைக்கு நடுவே
கோவம்தான் அதிகமாக வருகின்றது. கவிதைகளின் காதலனாய்
இருந்த உங்களைக் காமாலை கொண்டு சென்றுவிட்டது என்பதை
நாங்கள்தான் எப்படித் தாண்டி வரப் போகிறோம்?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
இனி உங்கள் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் யார்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?
-
எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?
-
உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..
-
.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!
–
இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….
–
——————————————
பா.விஜயலட்சுமி
விகடன்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?
-
எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?
-
உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..
-
.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!
–
இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….
–
——————————————
பா.விஜயலட்சுமி
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|