சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

மனசு பேசுகிறது : பஞ்சாயத்து Khan11

மனசு பேசுகிறது : பஞ்சாயத்து

Go down

மனசு பேசுகிறது : பஞ்சாயத்து Empty மனசு பேசுகிறது : பஞ்சாயத்து

Post by சே.குமார் Sat 3 Dec 2016 - 8:46

ன்னைக்கு காசுப் பிரச்சினையை விட குடும்ப பிரச்சினையைத் தீர்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக எதிர் எதிர் வாதங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினையாக பத்திரிக்கைகளை அலங்கரித்து வருகிறது. ஆளாளுக்கு டுவிட்டுறாங்க... இது ஒரு பக்கம்ன்னா சினிமாக்காரனுங்க ஒரு சங்கம்ன்னு வச்சிக்கிட்டு அவனுக அடிச்சிட்டுக்கிட்டு இது ஒண்ணும் லவ் லெட்டர் இல்லைன்னு இன்னொரு பக்கம் டுவிட்டுறாங்க. சரி நாம பஞ்சாயத்துக்குள்ள போவோம்.


மனசு பேசுகிறது : பஞ்சாயத்து Mqdefault


கிராமங்கள்ல இந்த பஞ்சாயத்து பிரசித்தம்... ஆனால் எங்க ஊருப் பக்கம் சினிமாவில் காட்டுவது போல ஒரு ஆல மரமும், ஒரு அடி வாங்கின சொம்பும், நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு சொல்ல நாலு பேரும் இருக்கமாட்டார்கள். கிராமத்துக்கு ஒரு அம்பலம் இருப்பார். அவர் சொல்வதே இறுதித் தீர்ப்பு... ஆனால் அந்த அம்பலத்தையே எங்க ஊருல இருபது வருசத்துக்கு மேல எதுலயும் சேர்க்காம ஒதுக்கி வச்சிருந்தாங்க... அதனால யார் தப்புச் செய்தாலும் தீர்ப்பு மட்டும் சரியா இருக்கும். அம்மாவுக்கு குமாரசாமி சொன்ன மாதிரியெல்லாம் அபத்தமாக இருக்காது. நாட்டாமை தப்புப் பண்ணினாலும் தண்டனை தண்டனைதான். ஊரு கூடி பேசி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பாங்க. குடும்பப் பிரச்சினைகளை தெருவுக்கு கொண்டு வரமாட்டாங்க. பொண்ணு புள்ள பிரச்சினையின்னா ஊருல ரெண்டு குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சிப் பேசுவாங்க. அதுல சரியா வரலைன்னா நாட்டு அம்பலங்களை வச்சி நாட்டுக் கூட்டம் போட்டு பெரும்பாலும் நல்ல முடிவா எடுப்பாங்க.

ஊர் பஞ்சாயத்துங்கிறதை எல்லா விஷயத்துக்கும் கூட்டுவாங்க... திருவிழாவா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... விவசாயப் பிரச்சினையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க.... அங்காளி பங்காளி சண்டையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இடத் தகராறா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... கணவன் மனைவி பிரச்சினை குடும்ப அளவில் வந்துவிட்டதா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இப்படி கண்மாயில் இருந்து கல்யாணம் வரை பல பிரச்சினைகள் ஊர் கூடி நல்ல முடிவெடுப்பாங்க. இதுலயும் சினிமாவுல காட்டுற மாதிரி தீர்த்து வைக்கிறது... அத்து விடுறது போன்ற விசயங்களைச் செய்ய மாட்டார்கள். நாலு சுவத்துக்குள்ள நடக்குற பிரச்சினையை நாலு சாதி சனம் முன்னாடிக் கூட கொண்டு வர யோசிப்பாங்க. பிரச்சினை பெரிதாகும் போது... அடுத்து என்ன செய்வது பொண்ணோட வாழ்க்கையில்ல என்ற கையறு நிலையில்தான் ஊர்க்கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பாங்க. ஆனால் இன்னைக்கு மேக்கப் போட்டு... பிரகாசமான விளக்கொளியில் அமர்ந்து உலகமே பார்க்க, குடும்ப பிரச்சினையை சந்திக்கு இழுக்க யோசித்த மக்களை, சமுத்திரம் தாண்டி எல்லாரும் பார்க்கும்படி அடித்து அழ வைத்து தங்கள் டி.ஆர்.பியை ஏற்ற எல்லாத் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டி குடும்ப பஞ்சாயத்தை நடத்துகின்றன.

ஒரு குடும்ப பிரச்சினையை பொதுவெளியில் வைத்து, அவர்களை மெல்ல மெல்லச் சூடேற்றி அடித்துக் கொள்ள வைத்து அதை அப்படியே ஒளிபரப்பி... என்ன கேவலமான செயல் இது.  நல்லாப் பாருங்க இது ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்ல... முன்கூட்டியே பதியப்பட்ட நிகழ்ச்சிதான். இதுபோன்ற அடிதடிகளை எடிட் செய்து ஒளிபரப்ப முடியும் இருந்தும் செய்ய மாட்டோம். ஏன்னா அதைப் பார்க்கத்தான் ஆவலாய் இருக்கிறோமே நாம்... அடுத்த வீட்டுச் சண்டையின்னா வாசல்ல நின்னு பாக்குற ஆளுங்கதானே நாம்... அதான் அவன் அதை பயன்படுத்திக்கிறான். அதுலயும் என்னமோ சண்டை நேரடி ஒளிபரப்பு போல அப்பத்தான் விளம்பர இடைவேளையை அவசரமா விட்டு என்னாச்சோன்னு குடும்பத் தலைவிகளை தவிக்க வைப்பாங்க... அடுத்த சேனல் மாற்றாமல் விளம்பரங்களையும் பார்க்கும் தெருக்குழாய் சண்டையை பார்க்காத எம் இனம்...  இந்த சிம்பு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னைக்கு ஆரம்பிச்சி வச்சானே எல்லாப் பயலும் புடிச்சிக்கிட்டான். ஒப்பாரியை ஒளிபரப்பி டி.ஆர்.பியை ஏத்திக்கிறான்.


லஷ்மி இராமகிருஷ்ணன் என்னவோ தன்னோட குடும்பத்துல... உறவினர் வீடுகளில் நிகழ்ந்த சண்டைகளுக்கு தீர்வு சொன்னது போல் சினிமாவில் தன்னோட நிகழ்ச்சியை காமெடி என்ற பெயரில் கலாய்த்து விட்டார்கள் என டுவிட்டரில் பொங்கினார். ஜி.வி. பிரகாசையும், ஆர்.ஜே. பாலாஜியையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். ஜி.வி.பியை எனக்கு சுத்தமாக பிடிக்காது... அவன் என்னவோ நல்ல குடும்பப் படங்களைக் கொடுப்பது போல் ஆட்டம் போடுகிறான்... கேவலமான படங்கள்... இரட்டை அர்த்த வசனங்கள் என பென்சில் தவிர வேறு படங்களை பார்க்கவேயில்லை... ஆர்.ஜே. பாலாஜி, காமெடியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். என்பதை அறிவோம். இந்தம்மா டுவிட்டரில் சண்டை போட்டதற்குப் பதில் போனில் அவரிடம் கேட்டிருக்கலாம்... அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மாதிரி, அசிங்கப்பட்டு மீடியாக்களில் இனி எந்த நிகழ்ச்சியும் நடத்தமாட்டேன் என்ற நல்ல முடிவை எடுத்திருக்கிறார். இவரால் கெட்ட குடிகள் போதும். இனிமேலும் குடிகெடுக்க நினைக்க வேண்டாம்.

அப்புறம் நம்ம குஷ்பு... இந்தம்மாவை பல விதத்துல கிண்டல் பண்றானுங்க... பாவம் சுந்தர் மாமான்னு எல்லாம் எழுதுறானுங்க... இது குடும்ப பஞ்சாயத்துப் பண்ணுது... காங்கிரஸ்க்கு இது போனப்போ இளங்கோவன் வழிஞ்சதை எல்லோரும் அறிவோம். இது உள்ளே போக அங்க குந்திக்கின்னு இருக்க நக்மாவுக்கு பிரச்சினை... அது ஏழரையை ஆரம்பிச்சி வச்சி வெளியேத்த ஆயத்தமாயிக்கிட்டு இருக்கு. இதுல இந்தம்மா பஞ்சாயத்து பண்றேன்னு அடிக்கப் போகுது. என்ன நடக்கு இங்கே... ஏழைகள் வாழ்க்கை அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லையா..? நடிகை ஸ்ரீபிரியாவும் ரஞ்சனியும் நல்லாக் கேட்டிருந்தாங்க. உடனே அதுக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம் இதுக்கு நாங்க பதில் சொல்லமாட்டோம்ன்னு ஜால்ஜாப்பு பதில்கள் இவர்களிடம் இருந்து. இதே ஒரு சாதாரண ரசிகனோ ரசிகையோ கேட்டிருந்தா இன்னேரம் ஆளாளுக்கு வரிந்து கட்டி களத்தில் இறங்கியிருப்பாங்க.

ஆமா அடுத்த வீட்டு பிரச்சினைய தீர்த்து வைக்க இவங்க யாரு...? இதுவரைக்கும் சமூகத்துக்கு இவங்க என்ன நல்லது செஞ்சிருக்காங்க...? சொற்ப பணம் கொடுத்து தங்களது குடும்பச் சண்டையை சந்தி அல்ல.. இந்த உலகமே சிரிக்கக் காண்பித்து டி.ஆர்.பி ஏற்றி அதன் மூலம் கல்லாக் கட்டிக் கொள்ளும் இந்த களவாணிகளிடம் அபலைகளே ஏன் போய் விழுகிறீர்கள்..? உங்கள் பிரச்சினையை நீங்கள் பேசித் தீர்க்க முடியாதா..? உங்கள் உறவுகள் இல்லையா... அதில் இரு தரப்புக்கும் எடுத்துச் சொல்லி பிரச்சினையை தீர்க்கும் நல்ல மனிதர்கள் இல்லையா..? யோசியுங்கள்... இனியும் இவர்களிடம் மாட்டாதீர்கள்... இவர்கள் நம் வாழ்க்கையை வைத்து மாளிகை கட்டி வாழும் மனிதப் பதர்கள்... இந்த இழிபிறவிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவத்துக்குள்ளோ நாலு நல்ல மனிதர்கள் முன்னிலையிலோ தீர்க்கப் பாருங்கள்... தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அல்ல குடும்ப விஷயங்களைப் பேசும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum