Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm
» கதம்பம்- மே 24
by rammalar Today at 5:41 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
Page 1 of 1
தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்?
2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்?
# சமந்தா
‘24′, ‘தெறி’ என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து விட்டதையும் சொல்ல வேண்டும்.
# ஏமி ஜாக்சன்
‘கெத்து’, ‘தெறி’ என இரு படங்களில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வந்து போனார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தமிழ் சினிமாவில் நானும் நாயகி என்று அட்டென்டென்ஸ் போட்டிருக்கிறார். அவ்வளவுதான்.
# ஹன்சிகா
அழகு மட்டுமே நடிகைக்கான முழுத் தகுதியாகிவிடாது என்பது ஹன்சிகாவுக்குத் தெரிந்திருக்கும். ‘அரண்மனை2′, ‘மனிதன்’, ‘போக்கிரி ராஜா’, ‘உயிரே உயிரே’ என நான்கு படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் நடிக்கத் தெரிந்த நடிகையாக ஹன்சிகா வரவில்லை. வளரவில்லை.
# த்ரிஷா
15 வருட சினிமா அனுபவத்தை நிரூபிப்பதற்கான காலமும், களமும் த்ரிஷாவுக்குக் கனிந்திருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால் த்ரிஷாதான் அதற்குத் தயாராகவில்லை. ‘கொடி’ படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு போதிய வலுவும், பலமும் இருந்தும் த்ரிஷா அதைச் சரியாகக் கையாளவில்லை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186
Re: தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
# ஸ்ரீதிவ்யா
‘பென்சில்’, ‘மாவீரன் கிட்டு’, ‘மருது’, ‘காஷ்மோரா’, ‘பெங்களூர் நாட்கள்’ என ஐந்து படங்களில் நடித்தார். இதில் ‘காஷ்மோரா’ தவிர மற்ற படங்களில் நடிக்க அவ்வளவு வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பளிச் தோற்றம், சின்ன புன்னகை மட்டுமே நடிப்புக்கான இலக்கணம் அல்ல. கதாபாத்திரத்தை உள்வாங்குவதே முதன்மையானது.
# ஆனந்தி
கண்களால்கூட நடிக்க முடியும் என்று முன்பு அசரவைத்த ஆனந்தி, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘விசாரணை’ ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ‘விசாரணை’ நாயகிக்கான களம் அமைக்கவில்லை என்பதை தவிர்த்துப் பார்த்தால், ஆனந்தி மற்ற இரு படங்களிலும் வெறுமனே கடந்து போகிறார்.
# ஐஸ்வர்யா ராஜேஷ்
‘தர்மதுரை’, ‘ஹலோ நான் பேய் பேசறேன்’, ‘குற்றமே தண்டனை’, ‘பறந்து செல்ல வா’, ‘மனிதன்’, ‘கடலை’ என ஆறு படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதிகப் படங்கள் நடித்த கதாநாயகி என்ற பெருமையைப் பெற்றார். ‘தர்மதுரை’யில் சில காட்சிகளே என்றாலும் ஸ்கோர் செய்தார். ஆனால், மற்ற படங்களில் காமா சோமா பாத்திரம்தான்.
# ராதிகா ஆப்தே
‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஈடாக நடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும், கொஞ்சமும் சளைக்காமல் நடித்த ராதிகா ஆப்தேவின் நடிப்பு அருமை! பாண்டிச்சேரி காட்சியில் கண்கள் கசியப் பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பைக் கொடுத்தார்.
# நிவேதா பெத்துராஜ்
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆச்சரிய வரவு. சூழல், நெருக்கடி உணர்ந்து அதற்கேற்ற முகபாவங்களை, உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்தில் பல உணர்வுகளைக் கண்முன் கடத்துகிறார். அப்பா- காதலன் இடையில் தவிப்பது, பிரிவில் வருந்துவது, காதலனை விலகி இன்னொரு வனைக் கைபிடிக்கும் நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பது என நடிப்பில் புருவம் உயர்த்த வைத்தார். அவரின் நடிப்புக்காகவே ஜெயம் ரவி, உதயநிதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
‘பென்சில்’, ‘மாவீரன் கிட்டு’, ‘மருது’, ‘காஷ்மோரா’, ‘பெங்களூர் நாட்கள்’ என ஐந்து படங்களில் நடித்தார். இதில் ‘காஷ்மோரா’ தவிர மற்ற படங்களில் நடிக்க அவ்வளவு வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பளிச் தோற்றம், சின்ன புன்னகை மட்டுமே நடிப்புக்கான இலக்கணம் அல்ல. கதாபாத்திரத்தை உள்வாங்குவதே முதன்மையானது.
# ஆனந்தி
கண்களால்கூட நடிக்க முடியும் என்று முன்பு அசரவைத்த ஆனந்தி, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘விசாரணை’ ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ‘விசாரணை’ நாயகிக்கான களம் அமைக்கவில்லை என்பதை தவிர்த்துப் பார்த்தால், ஆனந்தி மற்ற இரு படங்களிலும் வெறுமனே கடந்து போகிறார்.
# ஐஸ்வர்யா ராஜேஷ்
‘தர்மதுரை’, ‘ஹலோ நான் பேய் பேசறேன்’, ‘குற்றமே தண்டனை’, ‘பறந்து செல்ல வா’, ‘மனிதன்’, ‘கடலை’ என ஆறு படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதிகப் படங்கள் நடித்த கதாநாயகி என்ற பெருமையைப் பெற்றார். ‘தர்மதுரை’யில் சில காட்சிகளே என்றாலும் ஸ்கோர் செய்தார். ஆனால், மற்ற படங்களில் காமா சோமா பாத்திரம்தான்.
# ராதிகா ஆப்தே
‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஈடாக நடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும், கொஞ்சமும் சளைக்காமல் நடித்த ராதிகா ஆப்தேவின் நடிப்பு அருமை! பாண்டிச்சேரி காட்சியில் கண்கள் கசியப் பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பைக் கொடுத்தார்.
# நிவேதா பெத்துராஜ்
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆச்சரிய வரவு. சூழல், நெருக்கடி உணர்ந்து அதற்கேற்ற முகபாவங்களை, உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்தில் பல உணர்வுகளைக் கண்முன் கடத்துகிறார். அப்பா- காதலன் இடையில் தவிப்பது, பிரிவில் வருந்துவது, காதலனை விலகி இன்னொரு வனைக் கைபிடிக்கும் நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பது என நடிப்பில் புருவம் உயர்த்த வைத்தார். அவரின் நடிப்புக்காகவே ஜெயம் ரவி, உதயநிதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186
Re: தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
# நயன்தாரா
பெரிய பட்ஜெட் படங்களின் தவிர்க்க முடியாத நாயகி நயன்தாரா. நான்கு படங்கள் நடித்தாலும் அதில் நயனுக்கான இடம் குறைவாகவே இருந்தது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைத்தார். இருமுகனில் கொஞ்சமே வந்தாலும் கெத்து காட்டினார். ‘காஷ்மோரா’ படத்தில் கம்பீர முகம் காட்ட நயனைத் தவிர வேறு ஆள் இல்லை என்ற அளவுக்கு வியக்க வைத்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரத்தையும், வசீகரத்தையும் அள்ளி வழங்குவதால் நயன் இப்போதும் இளமையின் வசீகர அடையாளம்.
# மற்றும் சிலர்…
பூஜா தேவ்ரியா, நித்யா மேனன், மடோனா செபாஸ்டியன், மஞ்சிமா மோகன், அமலாபால். ரம்யா பாண்டியன் ஆகியோரும் இந்த ஆண்டில் கவனம் பெற்றார்கள்.
கவனிக்க வைத்த 3 நாயகிகள்
# வரலட்சுமி சரத்குமார்
‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி காதலனின் அப்பாவுடன் மது அருந்துவது, உட லைக் கேட்கும் ஆண்களைப் புரட்டி எடுப்பது, சசிகுமார் ‘இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்’ என லாகவமாகப் பேசும்போது அவரை எட்டி உதைப்பது, பெயர் கேட்டால் ‘மிஸ்டர் சூறாவளி’ என கெத்து காட்டுவது என அசாத்திய நடிப்பில் கவனம் ஈர்த்தார்.
# தமன்னா
பார்பி பொம்மையாகவே வந்து போன தமன்னாவுக்கு ‘தோழா’, ‘தர்மதுரை’, ‘தேவி’ மூன்றும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட படங்கள். கிராமத்துப் பெண், நடிகை, லிவிங் டு கெதர் வாழ்வைப் பின்பற்றும் துணிச்சலான பெண் எனச் சகலத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார் தமன்னா. ‘தர்மதுரை’ படத்தில் சிக்கலான, கனமான பாத்திரத்தையும் மிகச் சரியாகக் கையாண்டார். உடல் மொழி, உடைகள் உட்பட எல்லாவற்றிலும் தமன்னா முன்பைவிட மெருகேறி இருக்கிறார்.
# கீர்த்தி சுரேஷ்
சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’, தனுஷுடன் ‘தொடரி’ என கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஸ்டார். சாதாரண ஹோம்லி லுக்கில் வந்து போனாலும் கீர்த்தியின் புன்னகையும், விழி மொழியும் ரொம்பவே ஈர்க்கின்றன. ‘தொடரி’யில் அளவாக நடித்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். அடுத்தடுத்து ஓவர் ஆக்டிங் நடிப்பைப் பின் தொடர்ந்தது சிக்கல். ‘ரெமோ’வில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தார்.
சிறப்பிடம்: ரித்திகா சிங்
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகப் படலத்திலேயே ஆஹா எனச் சொல்ல வைத்தார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையின் கதை என்பதால் நிஜ வீராங்கனை ரித்திகா நடித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், நடிப்பு ரீதியாகவும் அது மிகச் சிறந்த தேர்வாக இருந்ததுதான் பலம். கோபம், சண்டை, ஆவேசம் எனப் பன்முக உணர்வுகளை வெளிப்படுத்திய ரித்திகாவின் நடிப்பு அபாரம். யாருக்கும் அடங்காமல் வெடிப்பதும், நிலைமை உணர்ந்து துடிப்பதுமாக நடிப்பில் முழு ஆதிக்கம் செலுத்தினார்.
விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் ரித்திகா மிக அழகாக முத்திரை பதித்தார். பாஸ்போர்ட் அலுவலத்தில் நின்றுகொண்டு விஜய் சேதுபதி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதும், வெட்கமும் தயக்கமும் பூரிப்பும் புன்னகையுமாக அவர் சம்மதம் சொல்லும் அழகுக்காகவே ரித்திகாவை ரசிக்கலாம். இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகை ரித்திகா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
–
க.நாகப்பன்
தி இந்து
பெரிய பட்ஜெட் படங்களின் தவிர்க்க முடியாத நாயகி நயன்தாரா. நான்கு படங்கள் நடித்தாலும் அதில் நயனுக்கான இடம் குறைவாகவே இருந்தது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைத்தார். இருமுகனில் கொஞ்சமே வந்தாலும் கெத்து காட்டினார். ‘காஷ்மோரா’ படத்தில் கம்பீர முகம் காட்ட நயனைத் தவிர வேறு ஆள் இல்லை என்ற அளவுக்கு வியக்க வைத்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரத்தையும், வசீகரத்தையும் அள்ளி வழங்குவதால் நயன் இப்போதும் இளமையின் வசீகர அடையாளம்.
# மற்றும் சிலர்…
பூஜா தேவ்ரியா, நித்யா மேனன், மடோனா செபாஸ்டியன், மஞ்சிமா மோகன், அமலாபால். ரம்யா பாண்டியன் ஆகியோரும் இந்த ஆண்டில் கவனம் பெற்றார்கள்.
கவனிக்க வைத்த 3 நாயகிகள்
# வரலட்சுமி சரத்குமார்
‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி காதலனின் அப்பாவுடன் மது அருந்துவது, உட லைக் கேட்கும் ஆண்களைப் புரட்டி எடுப்பது, சசிகுமார் ‘இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்’ என லாகவமாகப் பேசும்போது அவரை எட்டி உதைப்பது, பெயர் கேட்டால் ‘மிஸ்டர் சூறாவளி’ என கெத்து காட்டுவது என அசாத்திய நடிப்பில் கவனம் ஈர்த்தார்.
# தமன்னா
பார்பி பொம்மையாகவே வந்து போன தமன்னாவுக்கு ‘தோழா’, ‘தர்மதுரை’, ‘தேவி’ மூன்றும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட படங்கள். கிராமத்துப் பெண், நடிகை, லிவிங் டு கெதர் வாழ்வைப் பின்பற்றும் துணிச்சலான பெண் எனச் சகலத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார் தமன்னா. ‘தர்மதுரை’ படத்தில் சிக்கலான, கனமான பாத்திரத்தையும் மிகச் சரியாகக் கையாண்டார். உடல் மொழி, உடைகள் உட்பட எல்லாவற்றிலும் தமன்னா முன்பைவிட மெருகேறி இருக்கிறார்.
# கீர்த்தி சுரேஷ்
சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’, தனுஷுடன் ‘தொடரி’ என கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஸ்டார். சாதாரண ஹோம்லி லுக்கில் வந்து போனாலும் கீர்த்தியின் புன்னகையும், விழி மொழியும் ரொம்பவே ஈர்க்கின்றன. ‘தொடரி’யில் அளவாக நடித்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். அடுத்தடுத்து ஓவர் ஆக்டிங் நடிப்பைப் பின் தொடர்ந்தது சிக்கல். ‘ரெமோ’வில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தார்.
சிறப்பிடம்: ரித்திகா சிங்
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகப் படலத்திலேயே ஆஹா எனச் சொல்ல வைத்தார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையின் கதை என்பதால் நிஜ வீராங்கனை ரித்திகா நடித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், நடிப்பு ரீதியாகவும் அது மிகச் சிறந்த தேர்வாக இருந்ததுதான் பலம். கோபம், சண்டை, ஆவேசம் எனப் பன்முக உணர்வுகளை வெளிப்படுத்திய ரித்திகாவின் நடிப்பு அபாரம். யாருக்கும் அடங்காமல் வெடிப்பதும், நிலைமை உணர்ந்து துடிப்பதுமாக நடிப்பில் முழு ஆதிக்கம் செலுத்தினார்.
விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் ரித்திகா மிக அழகாக முத்திரை பதித்தார். பாஸ்போர்ட் அலுவலத்தில் நின்றுகொண்டு விஜய் சேதுபதி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதும், வெட்கமும் தயக்கமும் பூரிப்பும் புன்னகையுமாக அவர் சம்மதம் சொல்லும் அழகுக்காகவே ரித்திகாவை ரசிக்கலாம். இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகை ரித்திகா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
–
க.நாகப்பன்
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி
» உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா?
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி
» உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|