Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
Page 1 of 1
உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
தமிழகத்தில் உதயமானது "அம்மா திமுக" என்ற புதிய அரசியல்
கட்சி நேற்று சனிக்கிழமை உதயமாகி உள்ளது. இதையடுத்து
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்துள்ளது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின்
சகோதரர் இனியன் சம்பத். இவர் "அம்மா திமுக" என்ற பெயரில் புதிய
கட்சியை தொடங்கி உள்ளார்.
-
தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஈ.வி.கே.சம்பத், திமுகவின்
ஆரம்பகாலத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.
சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சுலோச்சனா சம்பத்துக்கு
எம்.ஜி.ஆர். துவங்கிய அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
-
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலராக
ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழக முதல்வராகவும்
பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டங்களில் சுலோச்சனா சம்பத்துக்கு
வாரியத் தலைவர், மகளிர் அணித் தலைவர் உள்ளிட்ட முக்கிய
பதவிகளையும் பொறுப்புகளையும் தந்து சிறப்பித்தித்தார் ஜெயலலிதா.
கடந்த 2015 ஜூலை 5-ஆம் தேதி சுலோச்சனா சம்பத் காலமானார்.
-
சுலோச்சனா சம்பத்தின் மகன்களில் ஒருவரான
ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்
நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். ஆரம்பத்தில்
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இனியன் சம்பத்,
1989-இல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின்
மாநில செயலாளராகவும் பதவி வகித்தார்.
பின்னர் அதிலிருந்தும் விலகி 2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற
புதிய கட்சியை ஆரம்பித்தார். ஓராண்டுக்கு முன்பு தனது கட்சியை
பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து கொண்டு
பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
எதிலும் விலைபோகாத இனியன் சம்பத், அங்கிருந்து விலகி கடந்த ஜூன்
மாதம் 28-ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை
இணைத்துக்கொண்டார்.
இவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற யூகம்
நிலவி வந்த வேளையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர்
ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தோழியான சசிகலா பொதுச்
செயலாளர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த
நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சசிகலாவை
ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்களும் தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிவதும்,
அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்தும்
போஸ்டர்கள், தட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சென்னையில் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன்
ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி
வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபாவை
அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து ஜெ. தீபா பேரவையும்
தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது சாவில் நாளுக்கு நாள் பல
சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதிமுகவின் இரண்டாம்
கட்ட தலைவர்கள் சிலர் மவுனமாயிருப்பதை பார்த்து அடிமட்டத்
தொண்டர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள்
பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும், அதிமுக கட்சி
எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்துக்
கிடக்கின்றன. மேலும், அதிமுகவில் முக்கிய பதவி யாருக்கு என்ற எதிர்
பார்ப்பு மேலோங்கி வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது அடைமொழியான
அம்மா என்பதை முன்வைத்து ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தந்தை
பெரியாரின் 43-வது நினைவு தினமான நேற்று சனிக்கிழமை தொடங்கி
உள்ளதாக இனியன் சம்பத் தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டில் இம்மியளவும்
மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார்.
அந்த திசை வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த
இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என இனியன் சம்பத் கூறினார்.
இக்கட்சியின் இதர பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சிக்கான பெயர்ப் பலகையை, தனது வீட்டிலேயே நிறுவியுள்ள இனியன் சம்பத்,
இதற்கான ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
"அம்மா திமுக" என்ற பெயரை சுருக்கமாக எழுதும்போது, அதிமுக என்றே எழுத
முடியும் என்பதால், இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும்
கூறப்படுகிறது. எது எப்பாடியோ ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு
கொண்டாட்டாம்தான்.
-
-----------------------------------------------
தினமணி
கட்சி நேற்று சனிக்கிழமை உதயமாகி உள்ளது. இதையடுத்து
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்துள்ளது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின்
சகோதரர் இனியன் சம்பத். இவர் "அம்மா திமுக" என்ற பெயரில் புதிய
கட்சியை தொடங்கி உள்ளார்.
-
தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஈ.வி.கே.சம்பத், திமுகவின்
ஆரம்பகாலத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.
சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சுலோச்சனா சம்பத்துக்கு
எம்.ஜி.ஆர். துவங்கிய அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
-
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலராக
ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழக முதல்வராகவும்
பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டங்களில் சுலோச்சனா சம்பத்துக்கு
வாரியத் தலைவர், மகளிர் அணித் தலைவர் உள்ளிட்ட முக்கிய
பதவிகளையும் பொறுப்புகளையும் தந்து சிறப்பித்தித்தார் ஜெயலலிதா.
கடந்த 2015 ஜூலை 5-ஆம் தேதி சுலோச்சனா சம்பத் காலமானார்.
-
சுலோச்சனா சம்பத்தின் மகன்களில் ஒருவரான
ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்
நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். ஆரம்பத்தில்
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இனியன் சம்பத்,
1989-இல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின்
மாநில செயலாளராகவும் பதவி வகித்தார்.
பின்னர் அதிலிருந்தும் விலகி 2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற
புதிய கட்சியை ஆரம்பித்தார். ஓராண்டுக்கு முன்பு தனது கட்சியை
பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து கொண்டு
பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
எதிலும் விலைபோகாத இனியன் சம்பத், அங்கிருந்து விலகி கடந்த ஜூன்
மாதம் 28-ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை
இணைத்துக்கொண்டார்.
இவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற யூகம்
நிலவி வந்த வேளையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர்
ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தோழியான சசிகலா பொதுச்
செயலாளர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த
நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சசிகலாவை
ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்களும் தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிவதும்,
அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்தும்
போஸ்டர்கள், தட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சென்னையில் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன்
ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி
வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபாவை
அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து ஜெ. தீபா பேரவையும்
தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது சாவில் நாளுக்கு நாள் பல
சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதிமுகவின் இரண்டாம்
கட்ட தலைவர்கள் சிலர் மவுனமாயிருப்பதை பார்த்து அடிமட்டத்
தொண்டர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள்
பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும், அதிமுக கட்சி
எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்துக்
கிடக்கின்றன. மேலும், அதிமுகவில் முக்கிய பதவி யாருக்கு என்ற எதிர்
பார்ப்பு மேலோங்கி வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது அடைமொழியான
அம்மா என்பதை முன்வைத்து ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தந்தை
பெரியாரின் 43-வது நினைவு தினமான நேற்று சனிக்கிழமை தொடங்கி
உள்ளதாக இனியன் சம்பத் தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டில் இம்மியளவும்
மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார்.
அந்த திசை வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த
இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என இனியன் சம்பத் கூறினார்.
இக்கட்சியின் இதர பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சிக்கான பெயர்ப் பலகையை, தனது வீட்டிலேயே நிறுவியுள்ள இனியன் சம்பத்,
இதற்கான ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
"அம்மா திமுக" என்ற பெயரை சுருக்கமாக எழுதும்போது, அதிமுக என்றே எழுத
முடியும் என்பதால், இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும்
கூறப்படுகிறது. எது எப்பாடியோ ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு
கொண்டாட்டாம்தான்.
-
-----------------------------------------------
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
» அக்னிப் பறவைகள்: விண் டிவி தேவநாதனின் புதிய கட்சி!
» சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.
» அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த திமுக!
» அக்னிப் பறவைகள்: விண் டிவி தேவநாதனின் புதிய கட்சி!
» சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.
» அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த திமுக!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|