சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Khan11

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி

Go down

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Empty ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி

Post by rammalar Mon 23 Jan 2017 - 15:33

ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்- 
புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் 
தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
-
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம் 
புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது. 
இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம், 
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே 
ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்
பாராதவிதமாக தடம் புரண்டன.

மீட்புப் பணிகள் தீவிரம்: 
தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் 
மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை 
மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 
100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் 
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின் 
உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு 
இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும் 
விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 
சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில் 
விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே 
துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு 
முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும் 
இல்லை.

எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் 
நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும் 
அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது 
தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா? 
என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் 
தெரிவித்தனர்.

ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில் 
நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று 
ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்: 

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 
இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் 
குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை 
தெரிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை 
குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், 
சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.

மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின் 
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 
தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 
ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் 
சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத் 
திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 
தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு 
தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum