சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Khan11

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

4 posters

Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:31

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து
மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.


சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.



சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.



தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.



உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து
வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.



கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.



ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.



தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.



பாகற்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து
கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்இ கசப்பு காணாமல் போய்விடும்.



இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.



தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு
இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி
நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.



மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.



பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து
பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.



வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.



தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.



எலுமிச்சை தேங்காய் புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு
பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர்
செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.



உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது
உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல்
நல்ல பதத்துடன் இருக்கும்.



தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.



துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை
தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும்
வாசனையாகவும் இருக்கும்.


வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட்
துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையாகவும்
இருக்கும்.



கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து போட்டு
திரிச்சால் சப்பாத்தியோ, பூரியோ...எதுவானாலும் சுவை - வசனை - சத்து மூணும்
அதிகப்படியாகும்.



புதுசா வாங்கின அரிசி, வடிக்கும் போது குழைஞ்சிடுதா?அரை மூடி எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்குங்க. பொல, பொலன்னு இருக்கும்.



கத்திரிக்கா, கூட்டோ, பொரியலோ, எது செஞ்சாலும் கொஞ்சம் கடலை மாவை தூவி சில நிமிடம் கழித்து இறக்குங்க. மணம் கம, கமன்னு இருக்கும்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:32

தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ப்ரீசரில் வைத்து
விடுங்கள். அதன் மீது ஐஸ் கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும், அதனை
பாலிதின் கவரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கும் வைத்துக்
கொள்ளலாம்.

பச்சை நிறக் காய்களை சமைக்கும்போது, தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள்
தூள் போட்டு பின்னர் காய்களைப் சேர்த்து வதக்கினால் அதன் பச்சை நிறம்
மாறாது.

கீர் செய்யும் போது பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, வாணலியில்
முதலில் சர்க்கரையை கரையவிட்டு பின்னர் பாலை ஊற்றினால் பால் எளிதாக
கெட்டியாகும்.

ப்ரீசரில் ஐஸ் ட்ரே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க, முதலில் ஐஸ் ட்ரேயின் அடியில் சிறிது கிளிசரின் தடவிய பின் ப்ரீசரில் வைக்கலாம்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:33

சில பயனு‌ள்ள தகவ‌ல்க‌ள்

1.பாயச‌த்து‌க்கு முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம்.
தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள்.
சுவை கூடும்.

2.தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு
இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும்
மிக நல்லது.

3.பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக
வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:33

சமைய‌ல் சமா‌‌ச்சார‌ங்க‌ள்

1.சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ
அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால்
சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.
பிரச்சனை தீர்ந்துவிடும்.

2.பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று
ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில்
சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை
சமைத்து எடுக்கலாம். ருசியாகவும் காணப்படும்.

3.கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம்
செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும்
கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:34

சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்

1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.

2.ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில்
கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக
வைத்தும் சாப்பிடலாம்.

3.சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள்,
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப்
பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by T.KUNALAN Tue 1 Mar 2011 - 22:34

ஓ... நீங்க நல்லா சமைப்பீங்களோ?
சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:35

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க

1.தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால்
தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப்
பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

2.பூரி நமத்து போகாமல் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது
கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப்
போகாமல் இருக்கும்.

3.சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது,
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி,
மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:36

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்

1.எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும்.
வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர்
நறுக்குங்கள். அழுகை குறையும்.

2.கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில்
கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

3.இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு,
பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி
விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:36

ஆரோக்​கிய சமை​யல் Tips

* காய்​கறி சாலட் செய்​யும்​போது ஒரு கைப்​பிடி பாசிப் பருப்பை அரை​மணி
நேரம் ஊற வைத்து சேர்த்​துக்​கொள்​ளுங்​கள் சத்​துக்​கும் சத்து;​
சுவைக்​கும் சுவை!​

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்​களை அரைத்​தும்,​​ ஒரு ஸ்பூன்
சீர​கத்​தைப் பொடித்​தும் போட்டு பஜ்ஜி செய்​தால்,​​ பஜ்ஜி நல்ல
சுவை​யு​ட​னும் இருக்​கும்.​ கடலை மாவி​னால் வரும் வாயுத் தொல்லைகளையும்
ஏற்​ப​டா​மல் தடுக்​கும்.​

* மோர்க் குழம்பு செய்ய சமான்​களை வறுத்​து​விட்டு,​​ தேங்​காய்க்​குப்
பதி​லாக பச்​சை​யா​கவே துளி கச​க​சாவை போட்டு அரைத்து மோர்க்​கு​ழம்பு
செய்து பாருங்​கள்.​ சுவை​யாக இருக்​கும்.​ தேங்​காய் போடா​த​தால்
கொலஸ்ட்​ரால் குறை​யும்.​ கச​கசா போடு​வ​தால் வயிற்​றுக்கு குளுமை.​

* உளுந்து -​ அரை கப்,​​ அரிசி -​ கால் கப்,​​ சிறிது வெந்​த​யம் இவை​களை
ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்​வ​ரகு மாவு​டன் கலந்து மறு​நாள் காலை
தோசை வார்க்​க​வும்.​ சத்​தான,​​ சுவை​யான தோசை தயார்.​

* துவ​ரம் பருப்​புத் துவை​யல் தயார் செய்​யும்​போது,​​ சிறிது
கொள்​ளினை​யும் வறுத்​துச் சேர்த்து அரைத்​தால் சுவை​யும் மண​மும்
கூடு​த​லாக இருக்​கும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* சாம்​பார்,​​ கீரை,​​ புளிப்பு கூட்டு போன்​ற​வற்​றைக் கொதித்து
இறக்​கும் சம​யம் துளி வெந்​த​யப் பொடி தூவி இறக்​கி​னால் நல்ல வாச​னை​யாக
இருக்​கும்.​ உட​லுக்​கும் ஆரோக்​கி​யம்.​

* எந்த வகை கீரை​யா​னா​லும் அதைச் சமைக்​கும்​போது அள​வுக்கு மீறி காரம்,​​
உப்பு,​​ புளி இவற்றைச் சேர்த்து சமைத்​தால்,​கீரை​யி​லுள்ள சத்​துக்​கள்
முழு​மை​யாக கிடைக்​காது.​

* வெந்​த​யத்​தைக் கறுப்​பாக வறுத்​துத் தூள் செய்து காப்​பிப் பொடி​யில்
கலந்து காப்​பிப் போட்​டுக் குடித்​தால் சர்க்​க​ரை
வியா​தி​கா​ரர்​க​ளுக்கு நல்​லது.​

* இரண்டு மிளகு,​​ அரை ஸ்பூன் தனியா -​ தூள் செய்து தேநீர் கொதித்து
வரும்​போது தூவி இறக்கி வடி​கட்டி சர்க்​கரை கலந்து சாப்​பிட
உடம்​புக்​கொரு ஊட்​டச்​சத்து கிடைத்து களைப்பு நீங்​கும்.​

* மழை மற்​றும் குளிர் காலங்​க​ளில் தயிர் உறை​யாது.​ உறை​யூற்​றும்​போது
பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்​தி​ரத்​தை​யும் கவிழ்த்து
மூடி​விட்​டால் விரை​வில் உறைந்​து​வி​டும்.​

* மிக்​ஸி​யில் மாவு அரைக்​கும்​போது அது எளி​தில் சூடா​கி​வி​டும்.​
சூட்​டைத் தணிக்க ​ மாவில் ஐஸ் வாட்​டர் தெளித்து அரைக்​க​லாம்.​​

* ரத்​தக்​கறை படிந்த துணி​களை உப்​புக் கலந்த தண்​ணீ​ரில் சிறிது நேரம் ​ ஊற வைத்து துவைத்​தால் கறை​கள் நீங்​கி​வி​டும்.​

* குழந்​தை​க​ளின் நகங்​க​ளில் அழுக்​குச் சேர விடக்​கூ​டாது.​ நகத்தை
வெட்​டி​விட வேண்​டும்.​ அப்​படி வெட்​டு​வ​தற்கு முன்பு குழந்​தை​க​ளின்
விரல்​க​ளைத் தண்​ணீர் முக்​கித் துடைத்​து​விட்டு,​​ அதன் மேல் பவு​ட​ரைப்
பூசி​னால் ​ எது​வரை நகத்தை வெட்​ட​லாம் என்​ப​தைத் தெளி​வா​கக்
காட்​டும்.​

* கார​ண​மின்றி திடீ​ரென வயிறு வலித்​தால்,​​ இரண்டு ஸ்பூன் சர்க்​க​ரையை
வாயில் போட்​டுக் கொண்டு தண்​ணீர் குடித்​தால் ​ வலி பறந்​து​வி​டும்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Tue 1 Mar 2011 - 22:39

[quote="T.KUNALAN"]ஓ... நீங்க நல்லா சமைப்பீங்களோ? பின்னே சும்மாவா இப்படியெல்லாம் வாருங்கள் ஒரு நாள் சமைத்து தருகிறேன் சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by *சம்ஸ் Wed 2 Mar 2011 - 5:47

T.KUNALAN wrote:ஓ... நீங்க நல்லா சமைப்பீங்களோ?
சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 331844
மீனுவின் வேலை அதுதான் உங்களுக்கு தெரியாதா குணாளன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 13:24

:!+: :!+:


சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Wed 2 Mar 2011 - 13:26

*ரசிகன் wrote:
T.KUNALAN wrote:ஓ... நீங்க நல்லா சமைப்பீங்களோ?
சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 331844
மீனுவின் வேலை அதுதான் உங்களுக்கு தெரியாதா குணாளன்
அப்போ எனக்கு வேற வேலை இல்லையா ரசிகன் நன்றி சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 459498
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Wed 2 Mar 2011 - 13:27

சரண்யா wrote: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 331844 சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 331844
சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 930799 சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Empty Re: சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum