Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
Page 1 of 1
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன், கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ‘அய்மா’ தலைவர் வேணு மற்றும் தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சி.சுந்தர்ராஜ் கூறுகையில், “சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தோம். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம்” என்றார்.
-
தினத்தந்தி
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன், கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ‘அய்மா’ தலைவர் வேணு மற்றும் தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சி.சுந்தர்ராஜ் கூறுகையில், “சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தோம். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம்” என்றார்.
-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 10-ந் தேதி திறக்கப்படும்
» தமிழகத்தில் 2,000 மெட்ரிக் ., பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத பரிதாபம் !
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» தட்டுங்கள் திறக்கப்படும்
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» தமிழகத்தில் 2,000 மெட்ரிக் ., பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத பரிதாபம் !
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» தட்டுங்கள் திறக்கப்படும்
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|