Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள்
இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை,
ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய
ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால்,
முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின்
துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான்
வர வேண்டும்
ஆனால், நவராத்திரியின்போது, இந்த வரிசை மாற்றமடைந்து,
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்றானது. மலைமகளான துர்க்கையே,
முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று
நாட்களும், துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.
ஆன்மாவை, இறைவன்பால் வழிப்படுத்த, திருவருள் தான் துணை
நிற்கிறது. இந்த திருவருட்சக்தி தான் சித்சக்தி, பராசக்தி,
ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி தான்
துர்க்கையாகும்.
முதல் மூன்று ராத்திரிகளிலும் அந்த துர்க்கையை வழிபட்டு
மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம்,
நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு
மஹாலட்சுமியை வழிபட, ஆயத்தமாகிறோம்.
-
---------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
வழிபாடு முறை
அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.
_________________
அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
பாடல்
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே
உத்தமி பைரவி ஆடுகவே
வழிபடும் எங்கள் வாழ்வினிலே வழித்துணையாய் வந்து ஆடுகவே!
நான்காம் நாளான இன்று, அட்சதையினால் படிகட்டு வடிவ கோலமிட சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும், அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ... அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன்' என, இந்த வார்த்தைகளை மந்திரமாய் சொன்னால் போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
பெட்டிச்செய்தி
நவராத்திரியில் அம்பிகைக்கு உகந்த ஸ்ரீசண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழ்மை வராது; அன்பு கிடைக்கும்; எதிரிகள் மற்றும் இயற்கையால் ஆபத்து உண்டாகாது.
சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும். விவசாயிகள்
நற்பலன் கிட்டும். கல்வி, ஞானம் பெருகும். உத்யோக உயர்வு கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கும், விரைவில் நல்ல இல்லறம் அமையும். மன அமைதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
_________________
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே
உத்தமி பைரவி ஆடுகவே
வழிபடும் எங்கள் வாழ்வினிலே வழித்துணையாய் வந்து ஆடுகவே!
நான்காம் நாளான இன்று, அட்சதையினால் படிகட்டு வடிவ கோலமிட சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும், அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ... அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன்' என, இந்த வார்த்தைகளை மந்திரமாய் சொன்னால் போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
பெட்டிச்செய்தி
நவராத்திரியில் அம்பிகைக்கு உகந்த ஸ்ரீசண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழ்மை வராது; அன்பு கிடைக்கும்; எதிரிகள் மற்றும் இயற்கையால் ஆபத்து உண்டாகாது.
சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும். விவசாயிகள்
நற்பலன் கிட்டும். கல்வி, ஞானம் பெருகும். உத்யோக உயர்வு கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கும், விரைவில் நல்ல இல்லறம் அமையும். மன அமைதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
நான்காம் நாள்
சக்தித் தாயை இன்று, வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள்; தீயவற்றை சம்ஹரிப்பவள்; இவளது வாகனம் கருடன்; குஷ்மந்தா வடிவத்தை எடுப்பார்; புராணங்களின்படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும், குஷ்மந்தா உருவாக்கினாள் என்று கூறப்படுகிறது.
அம்பிகையின் வெற்றித் திருக்கோலம். அதனால், அண்டத்தை உருவாக்கியவராக, அவர் வழிபடப் படுகிறார். 16 வயதுள்ள சுமங்கலி - ஷாடசாக் ஷரீ எனப் போற்றப்படுகிறாள்.
அலங்காரம்
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற முடியும்.
அலங்காரத்தின் காரணம்
அருளாளரான குமரகுருபரர், மீனாட்சி அம்மன் சன்னதியில், 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' எனும் நுாலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒன்பது வயது வரையுள்ள பால பருவ விளையாட்டு பாடல்கள் உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைகளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்வர். இதனை ஊஞ்சல் பருவம் என்பர்.
அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை, சேயாக மாறி, ஊஞ்சலில் ஆடுவதை காண, கண் கோடி வேண்டும். அந்த செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். பாசக்காரியான மஹாலட்சுமி, 'என்னை பூஜிப்பவர்களை கைவிட மாட்டேன்' என்று சொல்வதாய் புராணங்கள் கூறுகிறது. நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும்.
_________________
சக்தித் தாயை இன்று, வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள்; தீயவற்றை சம்ஹரிப்பவள்; இவளது வாகனம் கருடன்; குஷ்மந்தா வடிவத்தை எடுப்பார்; புராணங்களின்படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும், குஷ்மந்தா உருவாக்கினாள் என்று கூறப்படுகிறது.
அம்பிகையின் வெற்றித் திருக்கோலம். அதனால், அண்டத்தை உருவாக்கியவராக, அவர் வழிபடப் படுகிறார். 16 வயதுள்ள சுமங்கலி - ஷாடசாக் ஷரீ எனப் போற்றப்படுகிறாள்.
அலங்காரம்
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற முடியும்.
அலங்காரத்தின் காரணம்
அருளாளரான குமரகுருபரர், மீனாட்சி அம்மன் சன்னதியில், 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' எனும் நுாலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒன்பது வயது வரையுள்ள பால பருவ விளையாட்டு பாடல்கள் உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைகளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்வர். இதனை ஊஞ்சல் பருவம் என்பர்.
அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை, சேயாக மாறி, ஊஞ்சலில் ஆடுவதை காண, கண் கோடி வேண்டும். அந்த செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். பாசக்காரியான மஹாலட்சுமி, 'என்னை பூஜிப்பவர்களை கைவிட மாட்டேன்' என்று சொல்வதாய் புராணங்கள் கூறுகிறது. நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும்.
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|