சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Khan11

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

Go down

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Empty அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

Post by rammalar Thu 26 Apr 2018 - 7:50

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை 
ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். 
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு 
அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின்
வேந்தராகவும் இருக்கிறீர்கள்? இரண்டு பதவிகளின் 
அதிகாரமும் என்ன?

பதில்:- 
தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான். 
வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு 
ஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை. 

ஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின் 
ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல் 
சாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு 
தெரிந்திருக்காது.

மாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது. 
வேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது. 
பல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது. 

வேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல் 
கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.

கேள்வி:- 
3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில் 
சில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 
துணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு 
குறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:- 
5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள் 
மட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே 
உள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம் 
தொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது. 
ஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர் 
தேர்வு செய்யப்பட வேண்டும். 

மேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில் 
உள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட
வேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு
காட்ட முடியாது.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர். 
மற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை
வேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் 
கல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான் 
அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற 
பொருத்தமானவராக இருக்க முடியும்.

அதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த 
கல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின் 
இயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள் 
பேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு 
செய்யப்பட்டார்.

அந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர் 
பெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும்.
மாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன். 
-
-----------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum