Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த திருவிழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அருள்பாலிக்கின்னறனர்.
இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை மட்டுமே வீதி உலா வருவ வழக்கம். ஆனால் தைப்பூச திருநாள் அன்று மட்டும் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக நகர வீதிகளுக்கு சுவாமிகள் உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவிலின் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், 10மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்டை தீபாராதனையும் நடக்கிறது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாய் உகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நாளை நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.
பழனிமலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை 7.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி,தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன்பின்னர் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களும் நடந்து வருகிறது.
தொடர்ந்து நாளை மாலை 4.20 மணிக்கு தைப்பூச திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பல்வேறு வாகனங்களில் சுவாமி படத்தை அலங்கரித்து வைத்துக்கொண்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.
இதனையொட்டி கோவிலில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோட்டத்தில் பங்கேற்க 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஏற்கனவே முன்பதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 25 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்யாத மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் தரிசனம் மட்டுமே செய்து விட்டு உடனடியாக கிளம்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமி நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். நாளை விழாவை யொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் கோவில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.
இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இந்த கோவில் அறுபடை வீடுகளில் 4-வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்து. 5-ம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழாவை காண பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.
6-வது படை வீடான அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண் டாடப்படுவது வழக்கம். கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இன்று காலை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
நாளை தீர்த்தவாரி மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
maalaimalar
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முருகன் அருள் பெற்ற பக்தர்கள்
» தைப்பூச தாண்டவம்
» வடலூரில் 142 –வது தைப்பூச ஜோதி தரிசன விழாவருகிற 27–ந் தேதி நடக்கிறது
» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» தைப்பூச தாண்டவம்
» வடலூரில் 142 –வது தைப்பூச ஜோதி தரிசன விழாவருகிற 27–ந் தேதி நடக்கிறது
» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|