சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Khan11

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Go down

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Empty சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Post by rammalar Sun 21 Feb 2021 - 20:02

ஒருமுறை பக்கத்து ஊரில் துலாபாரம் படம் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு படத்துக்குப்போனோம் குடும்பத்தில் மூவர்.
அன்றிலிருந்து கொஞ்ச வருடமாய் சினிமா ஆசையே அற்றுப்போகச் செய்த அத்தனை சோகமான படமது. மகிழ்வாய் ஆரம்பித்த படம் கொஞ்சம் கொஞ்சமாய் சோகமாகி அழுது தவித்து வெளியே விட்ட கதை.
அந்தப்படத்தில் இந்தப்பாடலே அத்தனை சுகமானது.
கதையெல்லாம் சொன்னால் பதிவு நீளும் நேராக கவிஞரின் வரிகளுக்குள் போய்விடலாம்.
*******
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
*******
என நாட்டியமாடும் ஒரு மங்கைக்கு பாட்டுச் சொல்லும் பாவணையில் காதலில் விழுந்த நாயகனும்,நாயகியும் சங்கம் வளர்த்த தமிழ் வெல்லுமெனும் நம்பிக்கை வரியில் பல்லவியைத் தொடங்கி அடுத்து
*********
செவ்வரி யோடிய கண்களி ரெண்டினில்
சேலொடு வேலாட!
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட!
********
எனக் காதலன் நாட்டியத்துக்கு வரி சொல்வதுபோல் தன் காதலியின் அழகை ரசித்துச்சொல்ல.
அவளோ..
********
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட..!
*******
எனக் காதலன் சொன்னதை இல்லையென மறுக்காமல் அவளழகை அவளே மகிழ்வாய் சொன்னபின்.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்.
******
என அங்கே அங்க வர்ணிப்போடு அப்படியே நின்றுவிடாமல் அவன்
தமிழின் பெருமை சொல்லி முடித்ததும்.
அவளோ விட்டதைத் தொடர்வாள்
********
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து
******
என்றதும்
அடடா..! என அவன் வியந்து
******
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!
*********
என்று சங்கம் வளர்த்த அத் தமிழில் சுவையூரிய சொற்களையெடுத்துச் சொல்லிவிட்டு அச் சரணத்தின் இரண்டாம் பாகத்தில்.
********
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்.
******
என்று ஒருவருக்கொருவர் இன்ப வயப்பட்டு எடுத்துச் சொன்ன இரு சரணத்தின் முடிவில் இருவரும் இணைந்து.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......
****
எனப் பாடிமுடிப்பர் அப் பாடலை.
இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பையெல்லாம் சொல்ல ஒரு பதிவு பத்தாது.
சங்கம் வளர்த்த தங்கத் தமிழெடுத்து தமிழைப் புகழ்ந்து, காதலில் நுழைந்து, காமத்தில் நனைந்து, கேட்போரையும் தமிழால் நனைத்து சந்த வரிகளை தந்த கவி யாராக இருப்பார் ? நம்ம அப்பச்சி கண்ணதாசனேதான்.
ஜி.தேவராஜன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ் &சுசிலா பாடிய துலாபாரம் படத்தில்தான் இப்பாடல்.
(சொன்னதைச் சொன்னாலும் மீண்டும்)
இன்னும் சொல்ல வருகிறேன்
வாஞ்சையுடன் உங்கள்
வளநாடன்.
(முகநூலில் படித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Empty Re: சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Post by rammalar Sun 21 Feb 2021 - 20:02

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் காத்த மரம் - கவிஞர் வாலி
» தமிழ் வைத்தியர்கள் நிந்திக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் _
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» மனைவி வளர்த்த பூனை..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum