Latest topics
» பல்சுவை தொகுப்புby rammalar Yesterday at 20:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 20:23
» ரசித்த கவிதைகள்
by rammalar Yesterday at 16:48
» வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
by rammalar Yesterday at 16:45
» காடு – உவமைக் கவிஞர் சுரதா
by rammalar Yesterday at 16:30
» வெற்றி மொழிகள்
by rammalar Yesterday at 16:20
» பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்!
by rammalar Yesterday at 13:43
» அவளே சாமி..! - கவிதை
by rammalar Yesterday at 10:32
» ஒரு மொழிபெயர்ப்பு கவிதை
by rammalar Yesterday at 10:30
» அடிமைப்பெண்ணும் அலுமினிய குண்டானும்!- கவிதை
by rammalar Yesterday at 10:28
» செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்!
by rammalar Yesterday at 8:31
» நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் -
by rammalar Yesterday at 7:40
» மீனாட்சியின் கிளி
by rammalar Yesterday at 3:41
» சாய்பல்லவி படம் தாமதம்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:57
» திரிகடுகம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:54
» திருமூலரின் திருமந்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» நாலடியார் நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:47
» மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:45
» அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:42
» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:41
» புத்தரின் போதனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:40
» மஹா பெரியவாவின் அறிவுரைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:39
» சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:38
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:37
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:35
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by rammalar Mon 19 Apr 2021 - 16:07
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:02
» எனக்கு குடிப்பழக்கம் இல்லீங்க...!
by rammalar Mon 19 Apr 2021 - 15:40
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by rammalar Sun 18 Apr 2021 - 13:14
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by rammalar Sun 18 Apr 2021 - 13:05
» நாட்டில், பாலியல் தொல்லை அதிகமாகி விட்டது மந்திரி!
by rammalar Sun 18 Apr 2021 - 13:04
» சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்"
by rammalar Sun 18 Apr 2021 - 4:48
» கடவுளின் விளையாட்டு!
by rammalar Sat 17 Apr 2021 - 18:20
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by rammalar Sat 17 Apr 2021 - 18:15
சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
ஒரு தாமாஷான பேய்க்கதை
(சுஜாதா – குமுதம் 2003)
(சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் இப்படி சில வித்தியாசமான திகில் கதைகள் எழுதியுள்ளார்.)

அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக்கப்பில அதிகம் கைதிகள் இல்லை. குடித்த கேஸ்கள் எல்லாம் தூக்கத்தில். ரைட்டர் மாதவனால் தூங்கமுடியவில்லை.
கொசுவத்திச் சுருள் காலடியில் மேஜை மேல் கொளுத்திவைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் வைத்தும்.. மைலாப்பூர் கொசுக்கள், `இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்காகாது’ என்று காக்கி உடைகளில் உட்கார்ந்து கால்களைத் தேய்த்து நேர்வாகாக ஊசி குத்தி ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு `நன்றி’ சொல்லிப் பறந்தன.
மாதவன் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில், உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று களைத்திருந்தான். ஏதோ அடிபட்டவன் போல் தோன்றினான். காதருகே ரத்தக் கோடு தெரிந்தது.
``யாருப்பா?’’
``ஐயா நான் ஒரு F.I.R. பதிவு செய்ய வந்திருக்கேங்க..”
``என்ன விஷயம்?’’
``ஒரு கொலை நடந்துருச்சு அதைப் பதிவு செய்ய வந்திருக்கேன்..”
``எங்க நடந்துச்சு?’’
``இங்கருந்து நூறு அடி தள்ளி.. இதே ரோடுல..”
``செத்தது யாரு?’’
`நடராசுங்க’’
``உங்க பேரு...”
``நடராசுங்க...!’’
மாதவன் சிரித்தார். ``செத்தது நடராசு.. ரிபோர்ட் செய்தது நடராசு.. வினோதமாத்தான் இருக்கு. இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.’’
``இறந்ததும் நாந்தாங்க...!’’
``புரியலை. இறந்தது நீன்னா.. எப்படிய்யா எஃப்.ஐ.ஆர். எழுத வந்திருக்கே?’’
``ஏங்க, வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக் கூடாதா?’’
``நீ செத்துட்டய்யா!’’
``அதனாலே என்னங்க எப்.ஐ.ஆர். எழுதக்கூடாதா?’’
``பாரு நீ குடிச்சிருக்க. எங்க ஊது?’’
அவன் ஊத...
``ஒண்ணுமில்லையே.. சரி சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா.. சமுதாயத்து மேலே கோவமா.. பொயட்ரி எழுதற ஆளா?’’
``இல்லைங்க.. நான் எறந்துட்டேன். அதை பதிய வந்தேன்...’’ என்றான் பிடிவாதமாக.
மாதவன் கோபத்துடன் ``யோவ்.. உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலியில் உட்கார முடியும்... பேச முடியும்.. புகார் கொடுக்க முடியும்..’’
``என்னலே முடியுதுங்களே...”
``அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம். நோ க்ரைம்.”
``அப்ப நான் சாவலையா?’’
``பாரு நீ சாவலை. வேறு யாரோ செத்ததை நீ செத்தா மாதிரி நினைச்சிட்டிருக்கே. இது ஒரு பிரமை. ஓரு மாதிரி வியாதிம்பாங்க.. ஒரு கிளாஸ் தண்ணி குடி எல்லாம் சரியாயிரும்.’’
மீண்டும் எதையும் கேட்காமல் சொன்னதையே திரும்பச் சொன்னான்.
``சரியாப்போச்சு.’’ என்று அலுத்துக்கொண்டார் மாதவன். ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது. குறும்போ, விளையாட்டோ, கேலியோ இல்லை. மனநோய் போலவும் தெரியவில்லை.
மாதவனை அது சங்கடப்படுத்தியது.
அவன் தொடர்ந்தான்.
ஒரு விபத்துல செத்தேங்க..சைக்கிள் ஓட்டிகிட்டு வந்தப்ப.. எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா வந்து மோதிட்டான். கார் நம்பர்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். பனிரண்டு பதினாறுங்க.. உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க..!””
``யோவ்...! வெளையாடறியா..?”
``இல்லைங்க. மெய்யாலுமே செத்துட்டங்க.’’
மாதவன் சற்று நேரம் அவனையே பார்த்தவாறு என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். பெஞ்சில் படுத்திருந்தவர்களில் போதை விலகிய ஒருவன்.. ``ரைட்டர் ஐயா சொல்லாரில்லே போவியா...” என்றான் அதட்டலாக.
``பாரு நீ செய்யிறதெல்லாம் உயிருள்ளவன் செய்யற வேலை.. நீ சாவலை.. சாவலை...”
``நான் செத்தாச்சுங்க..”
மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.
``சார்.. இந்த ராத்திரி வேளைல தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க..”
``அதான் தொந்தரவு கொடுத்தாச்சே.. சொல்லுங்க..”
``ஒரு ஆளு டெத் ஒண்ணு ரிப்போர்ட் பண்ணனுங்கறான். செத்தது யார்னா.. நாந்தாங்கறான்..?’’
``குடியா..”
தெரியலை. ட்ரக்ஸ் ஏதும் எடுத்தாப்லயும் தெரியலே. சாதுவாத்தான் இருக்கான்.’’
``ஒண்ணு செய்.. அவன காலைல வரச் சொல்லு. இன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.’’
``கேக்க மாட்டேங்கறான் சார். திரும்பத் திரும்ப நான் செத்தாச்சு..செத்தாச்சுங்கறான்..”
``சரி. போனை அவங்கிட்ட குடு நான் பேசறேன்.’’
``இந்தாய்யா, எங்க எஸ்.பி. கிட்ட பேசு.’’ என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன். அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கடீரென்று விழுந்தார்.
``அய்யா.. வணக்கங்க..! எம்பேரு நடராசுங்க..” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்!
-------
(சுஜாதா – குமுதம் 2003)
(சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் இப்படி சில வித்தியாசமான திகில் கதைகள் எழுதியுள்ளார்.)
அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக்கப்பில அதிகம் கைதிகள் இல்லை. குடித்த கேஸ்கள் எல்லாம் தூக்கத்தில். ரைட்டர் மாதவனால் தூங்கமுடியவில்லை.
கொசுவத்திச் சுருள் காலடியில் மேஜை மேல் கொளுத்திவைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் வைத்தும்.. மைலாப்பூர் கொசுக்கள், `இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்காகாது’ என்று காக்கி உடைகளில் உட்கார்ந்து கால்களைத் தேய்த்து நேர்வாகாக ஊசி குத்தி ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு `நன்றி’ சொல்லிப் பறந்தன.
மாதவன் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில், உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று களைத்திருந்தான். ஏதோ அடிபட்டவன் போல் தோன்றினான். காதருகே ரத்தக் கோடு தெரிந்தது.
``யாருப்பா?’’
``ஐயா நான் ஒரு F.I.R. பதிவு செய்ய வந்திருக்கேங்க..”
``என்ன விஷயம்?’’
``ஒரு கொலை நடந்துருச்சு அதைப் பதிவு செய்ய வந்திருக்கேன்..”
``எங்க நடந்துச்சு?’’
``இங்கருந்து நூறு அடி தள்ளி.. இதே ரோடுல..”
``செத்தது யாரு?’’
`நடராசுங்க’’
``உங்க பேரு...”
``நடராசுங்க...!’’
மாதவன் சிரித்தார். ``செத்தது நடராசு.. ரிபோர்ட் செய்தது நடராசு.. வினோதமாத்தான் இருக்கு. இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.’’
``இறந்ததும் நாந்தாங்க...!’’
``புரியலை. இறந்தது நீன்னா.. எப்படிய்யா எஃப்.ஐ.ஆர். எழுத வந்திருக்கே?’’
``ஏங்க, வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக் கூடாதா?’’
``நீ செத்துட்டய்யா!’’
``அதனாலே என்னங்க எப்.ஐ.ஆர். எழுதக்கூடாதா?’’
``பாரு நீ குடிச்சிருக்க. எங்க ஊது?’’
அவன் ஊத...
``ஒண்ணுமில்லையே.. சரி சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா.. சமுதாயத்து மேலே கோவமா.. பொயட்ரி எழுதற ஆளா?’’
``இல்லைங்க.. நான் எறந்துட்டேன். அதை பதிய வந்தேன்...’’ என்றான் பிடிவாதமாக.
மாதவன் கோபத்துடன் ``யோவ்.. உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலியில் உட்கார முடியும்... பேச முடியும்.. புகார் கொடுக்க முடியும்..’’
``என்னலே முடியுதுங்களே...”
``அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம். நோ க்ரைம்.”
``அப்ப நான் சாவலையா?’’
``பாரு நீ சாவலை. வேறு யாரோ செத்ததை நீ செத்தா மாதிரி நினைச்சிட்டிருக்கே. இது ஒரு பிரமை. ஓரு மாதிரி வியாதிம்பாங்க.. ஒரு கிளாஸ் தண்ணி குடி எல்லாம் சரியாயிரும்.’’
மீண்டும் எதையும் கேட்காமல் சொன்னதையே திரும்பச் சொன்னான்.
``சரியாப்போச்சு.’’ என்று அலுத்துக்கொண்டார் மாதவன். ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது. குறும்போ, விளையாட்டோ, கேலியோ இல்லை. மனநோய் போலவும் தெரியவில்லை.
மாதவனை அது சங்கடப்படுத்தியது.
அவன் தொடர்ந்தான்.
ஒரு விபத்துல செத்தேங்க..சைக்கிள் ஓட்டிகிட்டு வந்தப்ப.. எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா வந்து மோதிட்டான். கார் நம்பர்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். பனிரண்டு பதினாறுங்க.. உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க..!””
``யோவ்...! வெளையாடறியா..?”
``இல்லைங்க. மெய்யாலுமே செத்துட்டங்க.’’
மாதவன் சற்று நேரம் அவனையே பார்த்தவாறு என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். பெஞ்சில் படுத்திருந்தவர்களில் போதை விலகிய ஒருவன்.. ``ரைட்டர் ஐயா சொல்லாரில்லே போவியா...” என்றான் அதட்டலாக.
``பாரு நீ செய்யிறதெல்லாம் உயிருள்ளவன் செய்யற வேலை.. நீ சாவலை.. சாவலை...”
``நான் செத்தாச்சுங்க..”
மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.
``சார்.. இந்த ராத்திரி வேளைல தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க..”
``அதான் தொந்தரவு கொடுத்தாச்சே.. சொல்லுங்க..”
``ஒரு ஆளு டெத் ஒண்ணு ரிப்போர்ட் பண்ணனுங்கறான். செத்தது யார்னா.. நாந்தாங்கறான்..?’’
``குடியா..”
தெரியலை. ட்ரக்ஸ் ஏதும் எடுத்தாப்லயும் தெரியலே. சாதுவாத்தான் இருக்கான்.’’
``ஒண்ணு செய்.. அவன காலைல வரச் சொல்லு. இன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.’’
``கேக்க மாட்டேங்கறான் சார். திரும்பத் திரும்ப நான் செத்தாச்சு..செத்தாச்சுங்கறான்..”
``சரி. போனை அவங்கிட்ட குடு நான் பேசறேன்.’’
``இந்தாய்யா, எங்க எஸ்.பி. கிட்ட பேசு.’’ என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன். அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கடீரென்று விழுந்தார்.
``அய்யா.. வணக்கங்க..! எம்பேரு நடராசுங்க..” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்!
-------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
[ltr]பய புள்ள ஆபிரிக்காவில் கேட்டரிங் படிக்க போய் இருப்பான் போல ![/ltr]
[ltr]எப்படிடா சொல்றே![/ltr]
[ltr]நீயே பாரேன்![/ltr]
[ltr]ரசம் செய்யணும், புளி ஊற வை என்று சொன்னால் ! என்ன செய்து இருக்கான் பாருங்க![/ltr]
[ltr]
[/ltr]
[ltr]எப்படிடா சொல்றே![/ltr]
[ltr]நீயே பாரேன்![/ltr]
[ltr]ரசம் செய்யணும், புளி ஊற வை என்று சொன்னால் ! என்ன செய்து இருக்கான் பாருங்க![/ltr]
[ltr]
[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|