Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று.
அவசியமேயாகும். உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே
இன்பம் அடைகிறார்கள்.
-
அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்கள் அடிக்கடிமாறும்.
மாற்றப்படும். அறிவாளிகள் இயற்றும் நூற்கள் அமரத்துவம்
வாய்ந்தவை, அழிவற்றவை.
-
சிந்தனை என்பது நாம் விரும்பி மேற்கொள்ளும் கற்பனையே.
-
விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி வேண்டாத உணவு.
-
உயிர் உள்ள வரையில் உழைத்து சாக விரும்புகிறேன்.
உழைக்க உழைக்கத் தான் எனக்கு உயிர் வாழ விருப்பம்
இருக்கிறது.
-
தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற
மொழியில் திறன் பெற முடியாது.
-
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம்.
ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
-
நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. ஆனால் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியது
அவசியம்.
-
உண்மையான அறிவின் வேலை நகைச்சுவையுடன்
இணைந்ததே.
-
வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி
அமைதியாயிருப்பதே.
-
அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் வரைமுறை
இல்லை. இரண்டும் எல்லையற்றவை.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Re: ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர், சர்.ராபர்ட் பில். இவர், சிறு வயதில் மெலிந்த உடலுடன் இருந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, முரட்டு சிறுவன் ஒருவன், அவரை வம்புக்கிழுத்து அடித்துக் கொண்டிருந்தான். அவனை திருப்பி அடிக்க சக்தியின்றி, அடியை வாங்கி வந்தார், ராபர்ட் பில்.
அருகில், அக்காட்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், முரட்டு சிறுவனை நெருங்கி, 'இன்னும் இவனை எத்தனை அடிகள் அடிப்பதாக எண்ணியிருக்கிறாய்...' என்று கேட்டான்.
'ஏன், எதற்காக கேட்கிறாய்...' என்று கேட்டான், முரட்டு சிறுவன்.
'இனி, மேற்கொண்டு இவனுக்கு நீ கொடுக்க நினைக்கிற அடிகளை எனக்கு கொடுத்து விடு. நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றான், அச்சிறுவன்.
அந்த சிறுவன் தான், பிற்காலத்தில், இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற கவிஞனாக திகழ்ந்த, பைரன்.
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானி வால்டேர், மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவர் மீது பற்று கொண்டவர்கள், தினமும் அவரை வந்து பார்த்துச் சென்றனர்.
ஒருநாள், பாதிரியார் ஒருவர் வந்து, 'உங்கள் பாவங்களையெல்லாம் கூறி, வருந்தி, பாவ மன்னிப்பை பெறுங்கள்...' என்றார்.
சிரித்துக்கொண்டே, 'உங்களை இங்கு யார் அனுப்பியது...' என்று வினவினார், வால்டேர்.
'நான் கடவுளின் பிரதிநிதி. கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார்...' என்றார், பாதிரியார்.
'அன்புக்கினியவரே... நான் வால்டேராக உருவாகி, பின் வால்டேராகவே திரும்பி செல்கிறேன். உங்கள் நற்சாட்சி பத்திரங்கள் எனக்கு தேவையில்லை. கடவுளிடம் பாவமன்னிப்பு பெறவே விரும்புகிறேன். உங்களிடம் பெற விரும்பவில்லை...' என்று கூறி அனுப்பி விட்டார், வால்டேர்.
'சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஒருமுறை, நியூயார்க் வீதியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நடந்து சென்றார். அப்போது, அவரை யாருமே கண்டுகொள்ளாததை, விசாரிக்காததை பார்த்த ஒருவர், வேகமாக அவரிடம் ஓடி, 'ஐயா, தாங்கள் எவ்வளவு பெரிய மேதை. தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லையே... ஒரு நடிகையாக இருந்தால், இந்த வீதியில் அவளை எவ்வளவு பேர் சூழ்ந்து கொண்டிருப்பர்...' என்று, குறைப்பட்டுக் கொண்டார்.
'மக்களுக்கு ரசிக்க என்னிடம் என்ன இருக்கிறது...' என, சிரித்துக் கொண்டே சொன்னார், ஐன்ஸ்டின்.
டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து:
சமையல் அறையில், எடுபிடி வேலை செய்து வந்தவர், ஹெரால்டு ராபினஸ். பின்பு, நியூயார்க் நகரில் ஒரு ஓட்டலில் சர்வராகவும் பணிபுரிந்தார். இந்த வேலைகள், ஒரு காலகட்டத்தில் அவருக்கு சலிப்பை தந்தன. பல்வேறு நாவல்களை படிக்கும் பழக்கம் இருந்த அவருக்கு, தான் ஏன் நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
சிறு வயதிலேயே படிப்பையும், தன்னை வளர்த்த பெற்றோரையும் விட்டு, ஓட்டலுக்கு வந்து பிழைத்த அவருக்கு தான், இந்த சிந்தனை உதித்தது. தன் எண்ணத்தை செயலில் காட்ட விரும்பினார்.
நாவல்கள் எழுத ஆரம்பித்தவர், 40 ஆண்டுகள் எழுதினார். எழுத்துலகில் கொடி கட்டி பறந்தார். அவரது நாவல்கள், அவர் இறப்பதற்கு முன்பே, 70 கோடி பிரதிகள் விற்பனையானது.
கடந்த, 1997ல் இறந்த இவர், இறுதி, 13 ஆண்டுகள் உடல்நிலை காரணமாக எழுதவில்லை. ஆயினும், 70 கோடி பிரதிகள் விற்றதால், அவர் அடைந்த புகழும், வாழ்வும் பிரமிக்கத்தக்கது.
நடுத்தெரு நாராயணன்
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர், சர்.ராபர்ட் பில். இவர், சிறு வயதில் மெலிந்த உடலுடன் இருந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, முரட்டு சிறுவன் ஒருவன், அவரை வம்புக்கிழுத்து அடித்துக் கொண்டிருந்தான். அவனை திருப்பி அடிக்க சக்தியின்றி, அடியை வாங்கி வந்தார், ராபர்ட் பில்.
அருகில், அக்காட்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், முரட்டு சிறுவனை நெருங்கி, 'இன்னும் இவனை எத்தனை அடிகள் அடிப்பதாக எண்ணியிருக்கிறாய்...' என்று கேட்டான்.
'ஏன், எதற்காக கேட்கிறாய்...' என்று கேட்டான், முரட்டு சிறுவன்.
'இனி, மேற்கொண்டு இவனுக்கு நீ கொடுக்க நினைக்கிற அடிகளை எனக்கு கொடுத்து விடு. நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றான், அச்சிறுவன்.
அந்த சிறுவன் தான், பிற்காலத்தில், இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற கவிஞனாக திகழ்ந்த, பைரன்.
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானி வால்டேர், மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவர் மீது பற்று கொண்டவர்கள், தினமும் அவரை வந்து பார்த்துச் சென்றனர்.
ஒருநாள், பாதிரியார் ஒருவர் வந்து, 'உங்கள் பாவங்களையெல்லாம் கூறி, வருந்தி, பாவ மன்னிப்பை பெறுங்கள்...' என்றார்.
சிரித்துக்கொண்டே, 'உங்களை இங்கு யார் அனுப்பியது...' என்று வினவினார், வால்டேர்.
'நான் கடவுளின் பிரதிநிதி. கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார்...' என்றார், பாதிரியார்.
'அன்புக்கினியவரே... நான் வால்டேராக உருவாகி, பின் வால்டேராகவே திரும்பி செல்கிறேன். உங்கள் நற்சாட்சி பத்திரங்கள் எனக்கு தேவையில்லை. கடவுளிடம் பாவமன்னிப்பு பெறவே விரும்புகிறேன். உங்களிடம் பெற விரும்பவில்லை...' என்று கூறி அனுப்பி விட்டார், வால்டேர்.
'சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஒருமுறை, நியூயார்க் வீதியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நடந்து சென்றார். அப்போது, அவரை யாருமே கண்டுகொள்ளாததை, விசாரிக்காததை பார்த்த ஒருவர், வேகமாக அவரிடம் ஓடி, 'ஐயா, தாங்கள் எவ்வளவு பெரிய மேதை. தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லையே... ஒரு நடிகையாக இருந்தால், இந்த வீதியில் அவளை எவ்வளவு பேர் சூழ்ந்து கொண்டிருப்பர்...' என்று, குறைப்பட்டுக் கொண்டார்.
'மக்களுக்கு ரசிக்க என்னிடம் என்ன இருக்கிறது...' என, சிரித்துக் கொண்டே சொன்னார், ஐன்ஸ்டின்.
டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து:
சமையல் அறையில், எடுபிடி வேலை செய்து வந்தவர், ஹெரால்டு ராபினஸ். பின்பு, நியூயார்க் நகரில் ஒரு ஓட்டலில் சர்வராகவும் பணிபுரிந்தார். இந்த வேலைகள், ஒரு காலகட்டத்தில் அவருக்கு சலிப்பை தந்தன. பல்வேறு நாவல்களை படிக்கும் பழக்கம் இருந்த அவருக்கு, தான் ஏன் நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
சிறு வயதிலேயே படிப்பையும், தன்னை வளர்த்த பெற்றோரையும் விட்டு, ஓட்டலுக்கு வந்து பிழைத்த அவருக்கு தான், இந்த சிந்தனை உதித்தது. தன் எண்ணத்தை செயலில் காட்ட விரும்பினார்.
நாவல்கள் எழுத ஆரம்பித்தவர், 40 ஆண்டுகள் எழுதினார். எழுத்துலகில் கொடி கட்டி பறந்தார். அவரது நாவல்கள், அவர் இறப்பதற்கு முன்பே, 70 கோடி பிரதிகள் விற்பனையானது.
கடந்த, 1997ல் இறந்த இவர், இறுதி, 13 ஆண்டுகள் உடல்நிலை காரணமாக எழுதவில்லை. ஆயினும், 70 கோடி பிரதிகள் விற்றதால், அவர் அடைந்த புகழும், வாழ்வும் பிரமிக்கத்தக்கது.
நடுத்தெரு நாராயணன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|