சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடா முயற்சி
by rammalar Yesterday at 15:19

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31

» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24

» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16

» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20

» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01

» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18

» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02

» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55

» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44

» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38

» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35

» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03

» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23

» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20

» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18

» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11

» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44

» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41

» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38

» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34

» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27

» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43

» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50

» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52

» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43

» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53

» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45

» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20

» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58

» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16

» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Khan11

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:48

.
‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி 
எனக்கு நினைவுக்கு வருகின்றது.


செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் 
தலையைக்காக்கிறது.


ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.


புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!


பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.


கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான்
 ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.


அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.


ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே
 இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே 
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.


நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:50

திரிகடுகம்


குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், 
தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து 
குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
-------------------
-


சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 
5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
---------------------
-


சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
-
அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா? 
அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம் 
தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று 
கேட்கின்றன
-
ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில். வலிமை பெறு என்று 
அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே 
பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது. 
வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் 
சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
---------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:51

இராமகிருஷ்ணரின் உபதேசம்
-
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது. 
அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன் 
கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை. 
அதற்கான மனமும் இருக்காது.
- :cherry_blossom:


இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது. 
சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல் 
உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள், 
எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால் 
இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன் 
பேசுவதைக் கேட்கலாம்.
பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.
இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது. 
இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது. 
அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.
---------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:53

குருவின் தன்னம்பிக்கை பாடம்!
..
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் 
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் 
வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க 
வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு 
ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். 


அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு 
சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் 
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் 
வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு 
அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. 


சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் 
மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, 
பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.


பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் 
துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று 
கூறினார். 


மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே 
நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், 
துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய 
பாடத்தை முடித்தார்.
-------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum