சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிஷா பஞ்சகம்
by rammalar Yesterday at 20:20

» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15

» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07

» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59

» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47

» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46

» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42

» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40

» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38

» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36

» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20

» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45

» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34

» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35

» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21

» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43

» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38

» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34

» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46

» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37

» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10

» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57

» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56

» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40

» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19

» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14

» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09

» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48

» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44

» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40

» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25

» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24

உண்மையான பக்தன் Khan11

உண்மையான பக்தன்

Go down

உண்மையான பக்தன் Empty உண்மையான பக்தன்

Post by rammalar Fri 15 Jul 2022 - 12:42

உண்மையான பக்தன் E_1342671856
-ஒரு சமயம் இந்திரன் மற்றும் தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இறைவன், பக்தர்களில் சிறந்தவர் என்று யாரைக் கருதுகிறார் என்னும் சந்தேகமே அது... எனவே, அவர்கள் பிரம்ம தேவரின் தலைமையில், விஷ்ணுவைத் தரிசிப்பதற்காகச் சென்றனர். அவரிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
-
""பூவுலகில் மிகச் சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ரந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை நான் இதுவரை கண்டதே இல்லை,'' என்றார் விஷ்ணு.
-


""அவன் யார் பிரபுவே?'' என்று கேட்டான் இந்திரன்.
""அவன் பூ மண்டலத்தை ஒரு குடையின் நிழலில் ஆண்டவன். இப்போது அவன் என்னருள் பெற வேண்டி ராஜ்ஜியத்தைத் துறந்து, கடுமையான உபவாசத்தை அடர்ந்த காட்டிலேயே இருந்து கொண்டு, என்னை நோக்கிப் பூஜை செய்து வருகிறான். அவனுடைய உபவாசம் இன்றுடன் முடிவடைகிறது!'' என்றார் .
-
""பிரபு, தங்கள் அனுமதியுடன் அவனைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறோம்!'' என்றார் பிரம்மா.
விஷ்ணு மவுனமாகப் புன்னகை புரிந்தார். பின், யோக நித்திரையில் ஆழ்ந்தார். பிரம்மாவும், இந்திரனும் ஏனைய தேவர்களும் கிளம்பினர். ரந்தி தேவனைச் சோதிக்க, அவன் இருப்பிடம் அடைந்தனர்.
-
ஒருவனுக்கு பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களல்லவா? அதே போல இன்று உபவாசம் முடியும் நாள். ஏகப்பட்ட பசியுடன் இருக்கும் அவனிடம், அவன் உண்ணப் போகும் உணவையே தானம் கேட்போம். அப்போது அவன் யோக்கியம் தெரிந்து விடும்.
-
ரந்தி தேவன் உபவாசத்தை முடித்துப் பூஜையின் முடிவு கட்டத்தை அடைந்தான். பின், உணவு உண்ண அமர்ந்தான். அப்போது பிரம்மா, அக்கினியை, ரந்தி தேவனிடம் அனுப்பி வைத்தார். அவன் ஏழைப் பிராமணனாக வந்து ரந்தி தேவன் முன் நின்றான்.
""தவத்தில் சிறந்தவரே! பலநாள் பசி! ஏதாவது சாப்பிடத் தர வேண்டுகிறேன்!'' என்றான்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""பூஜையை முடித்தவுடன், ஒரு அதிதிக்கு அன்னம் அளித்து உபவாசத்தை முடிக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும். ஆகவே, அடர்ந்த காட்டின் நடுவேயும் அன்னம் யாசகம் கேட்கும் அதிதி என்று எண்ணினான்.
-
""கடவுள் வல்லமையுடையவர்... என்னிடம் சிறிதளவு சாப்பாடு உள்ளது. அதில் பாதியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று கூறி அவருக்கு கொடுத்தான். பிராமணனாக வந்த அக்கினி, அதை ஏற்றுத் திருப்தி அடைந்து விலகிச் சென்றான்.
-
அதன் பின், மீண்டும் சாப்பிட அமரும் போது இந்திரன் அவன் கண் முன், ஓர் ஏழை விவசாயியாக வந்து, ""ஐயா, சாப்பிட்டு மூன்று நாளாகிறது. ஏதாவது கொடுங்களேன்!'' என்றான்.
ரந்தி தேவன் எந்தத் தயக்கமுமின்றி, அவனிடம் மீதியுள்ள சாப்பாட்டைக் காட்டி, ""இதில் நாமிருவரும் பகிர்ந்து உண்ணலாம்,'' என்றான்.
-
"சரி' என்ற இந்திரன் அவன் தந்ததை ஏற்றுத் திரும்பினான்.
இப்போது மீதியுள்ள உணவைக் கையில் எடுத்த போது, தர்ம தேவன் ஓர் பரம ஏழை போல், அருவருப்பான இரண்டு நாய்களுடன் அவன் முன் தோன்றி, ""ஐயா பசி!'' என்றான்.
ரந்தி தேவன் எஞ்சியுள்ள உணவைக் கொடுத்து அனுப்பினான்.
-
பின்னர், "சரி அன்னதானம் முடிந்தது. சிறிதளவு நீர் அருந்தி, என் உபவாசத்தை முடிக்கிறேன்' என்ற எண்ணமுடன் நீர் அருந்த தன் கமண்டலத்தை எடுத்தான்.
அச்சமயத்தில், பிரம்மா ஒரு கீழ் மகனைப் போல் அவன் முன் தோன்றினார்.
""ஒரே தாகம், தண்ணீர் தர முடியுமா சுவாமி?''என்று கேட்டார்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""நல்லவேளை, நான் நீர் அருந்திய பின் நீ வந்திருந்தால், என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தா நீயே குடி!'' என்று அவரிடம் கமண்டலத்தை நீட்டினான். அவர் தயங்கி நின்றார்.
""என்ன தயக்கம்?'' என்று அன்புடன் கேட்டான் ரந்தி.
""நான் தாழ்த்தப்பட்டவன். நான் கமண்டலத்தைத் தொட்டு நீர் அருந்தினால் தீட்டாகி விடுமே!'' என்று சொன்னார்.
-
ரந்தி தேவன் எழுந்தான்.
""மனிதர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லை. மேல் ஜாதி, கீழ் ஜாதி இல்லை. நீ, நீர் குடித்தால் தீட்டாகிவிடும் என்ற அச்சம் தேவையில்லை,'' என்று கூறியவாறு அவருடைய கையைப் பிடித்து இழுத்து, மார்புடன் தழுவிக் கொண்டான்.
பின் தண்ணீரை அவருக்குக் குடிக்க கொடுத்தான்.
-
உடனே ரந்தி தேவன் இருந்த இடத்தைப் பேரொளி சூழ்ந்தது. ""ரந்தி தேவா, உன்னை விடப் பக்தர்களில் சிறந்தவன் எவனும் இருக்க முடியாது. உன் உள்ளம் வானத்தை விடப் பரந்தது. நீ ஆசீர்வதிக்கத் தக்கவன்!'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் ரந்தி.
அக்கினி, இந்திரன், தர்ம தேவன், பிரம்மா, ஏனையத் தேவர்கள் அங்கே சூழ்ந்திருந்தனர். அந்த நேரத்தில், விஷ்ணு அங்கே தோன்றினார்.
-
""யாரையும் பாகுபடுத்திப் பார்க்காத அன்பான பக்தனே, ரந்திதேவனே நீ வாழ்க! நீ சீறும் சிறப்புமாக வெகு காலம் வாழ்ந்து, இப்பிறவியிலேயே மோட்சத்தை அடைவாயாக!'' என்று வாழ்த்தினார்.
ரந்தி தலை வணங்கினான்.
-
நன்றி-சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21561
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum