சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

உண்மையான பக்தன் Khan11

உண்மையான பக்தன்

Go down

உண்மையான பக்தன் Empty உண்மையான பக்தன்

Post by rammalar Fri 15 Jul 2022 - 12:42

உண்மையான பக்தன் E_1342671856
-ஒரு சமயம் இந்திரன் மற்றும் தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இறைவன், பக்தர்களில் சிறந்தவர் என்று யாரைக் கருதுகிறார் என்னும் சந்தேகமே அது... எனவே, அவர்கள் பிரம்ம தேவரின் தலைமையில், விஷ்ணுவைத் தரிசிப்பதற்காகச் சென்றனர். அவரிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
-
""பூவுலகில் மிகச் சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ரந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை நான் இதுவரை கண்டதே இல்லை,'' என்றார் விஷ்ணு.
-


""அவன் யார் பிரபுவே?'' என்று கேட்டான் இந்திரன்.
""அவன் பூ மண்டலத்தை ஒரு குடையின் நிழலில் ஆண்டவன். இப்போது அவன் என்னருள் பெற வேண்டி ராஜ்ஜியத்தைத் துறந்து, கடுமையான உபவாசத்தை அடர்ந்த காட்டிலேயே இருந்து கொண்டு, என்னை நோக்கிப் பூஜை செய்து வருகிறான். அவனுடைய உபவாசம் இன்றுடன் முடிவடைகிறது!'' என்றார் .
-
""பிரபு, தங்கள் அனுமதியுடன் அவனைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறோம்!'' என்றார் பிரம்மா.
விஷ்ணு மவுனமாகப் புன்னகை புரிந்தார். பின், யோக நித்திரையில் ஆழ்ந்தார். பிரம்மாவும், இந்திரனும் ஏனைய தேவர்களும் கிளம்பினர். ரந்தி தேவனைச் சோதிக்க, அவன் இருப்பிடம் அடைந்தனர்.
-
ஒருவனுக்கு பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களல்லவா? அதே போல இன்று உபவாசம் முடியும் நாள். ஏகப்பட்ட பசியுடன் இருக்கும் அவனிடம், அவன் உண்ணப் போகும் உணவையே தானம் கேட்போம். அப்போது அவன் யோக்கியம் தெரிந்து விடும்.
-
ரந்தி தேவன் உபவாசத்தை முடித்துப் பூஜையின் முடிவு கட்டத்தை அடைந்தான். பின், உணவு உண்ண அமர்ந்தான். அப்போது பிரம்மா, அக்கினியை, ரந்தி தேவனிடம் அனுப்பி வைத்தார். அவன் ஏழைப் பிராமணனாக வந்து ரந்தி தேவன் முன் நின்றான்.
""தவத்தில் சிறந்தவரே! பலநாள் பசி! ஏதாவது சாப்பிடத் தர வேண்டுகிறேன்!'' என்றான்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""பூஜையை முடித்தவுடன், ஒரு அதிதிக்கு அன்னம் அளித்து உபவாசத்தை முடிக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும். ஆகவே, அடர்ந்த காட்டின் நடுவேயும் அன்னம் யாசகம் கேட்கும் அதிதி என்று எண்ணினான்.
-
""கடவுள் வல்லமையுடையவர்... என்னிடம் சிறிதளவு சாப்பாடு உள்ளது. அதில் பாதியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று கூறி அவருக்கு கொடுத்தான். பிராமணனாக வந்த அக்கினி, அதை ஏற்றுத் திருப்தி அடைந்து விலகிச் சென்றான்.
-
அதன் பின், மீண்டும் சாப்பிட அமரும் போது இந்திரன் அவன் கண் முன், ஓர் ஏழை விவசாயியாக வந்து, ""ஐயா, சாப்பிட்டு மூன்று நாளாகிறது. ஏதாவது கொடுங்களேன்!'' என்றான்.
ரந்தி தேவன் எந்தத் தயக்கமுமின்றி, அவனிடம் மீதியுள்ள சாப்பாட்டைக் காட்டி, ""இதில் நாமிருவரும் பகிர்ந்து உண்ணலாம்,'' என்றான்.
-
"சரி' என்ற இந்திரன் அவன் தந்ததை ஏற்றுத் திரும்பினான்.
இப்போது மீதியுள்ள உணவைக் கையில் எடுத்த போது, தர்ம தேவன் ஓர் பரம ஏழை போல், அருவருப்பான இரண்டு நாய்களுடன் அவன் முன் தோன்றி, ""ஐயா பசி!'' என்றான்.
ரந்தி தேவன் எஞ்சியுள்ள உணவைக் கொடுத்து அனுப்பினான்.
-
பின்னர், "சரி அன்னதானம் முடிந்தது. சிறிதளவு நீர் அருந்தி, என் உபவாசத்தை முடிக்கிறேன்' என்ற எண்ணமுடன் நீர் அருந்த தன் கமண்டலத்தை எடுத்தான்.
அச்சமயத்தில், பிரம்மா ஒரு கீழ் மகனைப் போல் அவன் முன் தோன்றினார்.
""ஒரே தாகம், தண்ணீர் தர முடியுமா சுவாமி?''என்று கேட்டார்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""நல்லவேளை, நான் நீர் அருந்திய பின் நீ வந்திருந்தால், என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தா நீயே குடி!'' என்று அவரிடம் கமண்டலத்தை நீட்டினான். அவர் தயங்கி நின்றார்.
""என்ன தயக்கம்?'' என்று அன்புடன் கேட்டான் ரந்தி.
""நான் தாழ்த்தப்பட்டவன். நான் கமண்டலத்தைத் தொட்டு நீர் அருந்தினால் தீட்டாகி விடுமே!'' என்று சொன்னார்.
-
ரந்தி தேவன் எழுந்தான்.
""மனிதர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லை. மேல் ஜாதி, கீழ் ஜாதி இல்லை. நீ, நீர் குடித்தால் தீட்டாகிவிடும் என்ற அச்சம் தேவையில்லை,'' என்று கூறியவாறு அவருடைய கையைப் பிடித்து இழுத்து, மார்புடன் தழுவிக் கொண்டான்.
பின் தண்ணீரை அவருக்குக் குடிக்க கொடுத்தான்.
-
உடனே ரந்தி தேவன் இருந்த இடத்தைப் பேரொளி சூழ்ந்தது. ""ரந்தி தேவா, உன்னை விடப் பக்தர்களில் சிறந்தவன் எவனும் இருக்க முடியாது. உன் உள்ளம் வானத்தை விடப் பரந்தது. நீ ஆசீர்வதிக்கத் தக்கவன்!'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் ரந்தி.
அக்கினி, இந்திரன், தர்ம தேவன், பிரம்மா, ஏனையத் தேவர்கள் அங்கே சூழ்ந்திருந்தனர். அந்த நேரத்தில், விஷ்ணு அங்கே தோன்றினார்.
-
""யாரையும் பாகுபடுத்திப் பார்க்காத அன்பான பக்தனே, ரந்திதேவனே நீ வாழ்க! நீ சீறும் சிறப்புமாக வெகு காலம் வாழ்ந்து, இப்பிறவியிலேயே மோட்சத்தை அடைவாயாக!'' என்று வாழ்த்தினார்.
ரந்தி தலை வணங்கினான்.
-
நன்றி-சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum