சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி) Khan11

நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி)

Go down

நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி) Empty நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி)

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 23:15

நிணநீர் தொகுதியானது ஒரு சிக்கலான வலைப்பின்னலாக உடலில் காணப்படும் நிணநீர் அங்கமாகும். நிணநீர் அங்கமானது நிணநீர் முடிச்சு, நிணநீர் கான், நிணநீர் இழையம், நிணநீர் குழாய், நிணநீர் மயிர்த்துளைக் குழாய் ஆகியவற்றைக் கொண்டமைந்ததாகும். இவை நிணநீரை சேர்த்தெடுத்து குருதிச் சுற்றோட்டத்தினுள் விட்டுவிடுகின்றது. நிணநீர்த் தொகுதி உடல் இழையங்களிலுள்ள மேலதிகமான பாயங்களை அகற்றுதல், கொழுப்பமிலங்களை உள்வாங்குதலும் கடத்துதலும், நோயெதிர்ப்புக் கலங்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றை உடலில் செய்கின்றது. இவற்றின் உடற்தொழிலில் ஏதாவது தடங்கல் அல்லது குழப்பம் ஏற்ப்படும் பொழுது நோய் நிலைகள் காட்டப்படுகின்றன. இழையங்களிலிருந்து சேர்க்கப்பட்ட நிணநீரானது நிணநீர்க் குழாய்களினூடாக கீழிலிருந்து மேலாக ஒரு வழிப் பாதையாக கடத்தப்பட்டு கழுத்திலமைந்த குருதிக் குழாயினுள் விடப்படும். நிணநீர் கடத்தலில் தாமதம் ஏற்ப்படுமாயின், தேக்கம் ஏற்ப்பட்டு இழைய வீக்கம் ஏற்படும். அகற்றப்படாத கழிவுகள் தேக்கமடையும். இரண்டாவது செயற்பாடாக, சிறு குடலில் அகத்துறிஞ்சப்படும் கொழுப்பமிலங்களை காவிச் சென்று குருதிச் சுற்றோட்ட தொகுதியினுள் விடுவதற்கு பயன்படுகின்றது. இங்கு நிணநீர் தொகுதி செவ்வனே செயற்படாத பொழுது, கொழுப்பமிலம் காவுதல் நன்றாக நடை பெறாது. மூன்றாவதாக நோயெதிர்ப்புக் கலங்களை உற்பத்தி செய்து நோய்க் கிருமிகளை தாக்கி அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது. இச்செயற்பாட்டின் பொழுது இழையங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பாயம், நிணநீர் முடிச்சுக்களில் வடிகட்டப்பட்டு, நோய்க்காரணிகளை அறிந்து இல்லாது ஒழிக்கின்றது. நோய் காரணிகள் கண்டறியப்பட்டவுடன் நிணநீர் முடிச்சில் மேலதிக நோய் எதிர்ப்புக் கலன்கள் உற்பத்தியாக்கப்பட்டு, நோய் எதிர்ப்பில் பங்கு பெறும். பெரும்பான்மையான மக்களில் மந்தமாக செயற்படும் நிணநீர்த் தொகுதியே காணப்படுகின்றது.

ஆகவே உடல் முழுவதும் பரவிக் காணப்படும் நிணநீர்த் தொகுதியில் ஏற்படக்கூடிய சேதங்கள் அல்லது தடங்கல்களினால், நஞ்சுப் பொருட்கள் இழையங்களில் சேர்க்கப்படுவதோடு கலங்களுக்கு போதியளவு ஊட்டப்பொருட்கள் கிடைப்பதில்லை. நோயெதிர்ப்புத் தன்மையும் குறைக்கப்படுகின்றது. இந்நிலையில் நிணநீர் வடித்தகற்றும் முறையினால் முன்னேற்றம் கொண்டுவரப்படக் கூடும். இது ஒரு நஞ்சகற்றும் அல்லது கழிவகற்றும் முறையாகவும் அமையும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி) Empty Re: நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி)

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 23:15

நிணநீர் அகற்றுதல் சிகிச்சை முறையானது நிணநீர்;த்தொகுதியை நன்றாக செயற்பட தூண்டிவிடுமாறு செய்துவிடுதலாகும். நன்றாக தொழிற்படும் நிணநீர் தொகுதிச் செயற்பாடுகள், உடலானது அதன் உச்ச செயற்திடனும் இயங்க அவசியமானதாகும். இந்த சிகிச்சை முறையில், ஒருவரின் உடலில், சிகிச்சையாளர் கைகளினாலும் விரல்களினாலும் அலை போவது போன்று அழுத்துவார். இலகுவான இந்த அலை இயக்கமான அழுத்தம், நிணநீர்த் தொகுதிகளின் பகுதிகளை உசுப்பிவிட நிணநீர் ஓட்டம் சீர் செய்யப்படுகினறது, நஞ்சகற்றப்படுகின்றது, நோயெதிர்ப்புத் திறன் மேம்படுகின்றது. இந்த சிகிச்சை முறையால் பின்வரும் அனுகூலங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது :
- இழையங்களில் பாயத்தேக்கம் குறைவதனால் வீக்கம் குறைகின்றது.
- உடலில் நஞ்சகற்றப்படுகின்றது
- நெடுநாள் உடல் நோவிலிருந்து விடுதலை கிடைக்கின்றது.
- இழையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
- நோயெதிர்ப்புத் தன்மை தூண்டிவிடப்படுகின்றது.
- நெடுநாள் சோர்வு நிலை நீக்கப்படுகின்றது, புத்துணர்வு ஊட்டப்படுகிறது
- ஆழ்ந்த இழைப்பாற்று கிடைப்பதனால் நித்திரையின்மை, மனவழுத்தம், ஞாபகமறதி போன்றன குறைக்கப்படுகின்றன.
- தோலின் அடியில் அமைந்த கொழுப்புக் கட்டிகள் அகற்றப்படுகின்றன.

உபகரணங்களின் உதவியுடனும் நிணநீர் இறக்கம் செய்யப்படலாம். எம்முறையில் செய்தாலும் சிகிச்சை முறை இலகுவானதும், ஆறுதல் அளிப்பதுமாகும்.

குறிப்பு:
நிணநீர் இழையங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு வீங்கும் பொழுது யானைக்கால் நோய் தோன்றுகின்றது.

நிணநீர் வீக்கம் என்னும் நிலை வழமைக்கு மாறான வீக்கநிலை காணப்படுதலாகும். இது முகம், கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum