Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல் _
2 posters
Page 1 of 1
ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல் _
அதேவேளை நான்காவது உலையில் தீ பிடித்ததுடன் எங்கும் ஐதரசன் புகை வெளியேறத்தொடங்கியது.கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஏற்பட்டுவரும் அணு உலை வெடிப்புக்களால் கதிர்வீச்சு அபாயமும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் நவாடோ கானும் கவலை வெளியிட்டிருந்தார்.
""பாதிக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது.இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.இதனால் பெரும் அபாயம் உள்ளது'' என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை ஜப்பானிய அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காற்றில் பரவி தற்பொழுது ரஷ்யா, ஜப்பான் எல்லையில் இருக்கும் விளாடி வஸ்தக் நகரிலும் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து ரஷ்ய இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது.அத்துடன் சீனா ஏற்கனவே ஜப்பானுக்கான தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தின் அளவு 6 ரிச்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்பானிய மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.நான்காம் எண் அணு உலையில் ஏற்பட்ட தீயை அடுத்து டோக்கியோ நகருக்குள்ளும் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொதுமக்கள் சிலர் தலைநகர் டோக்கியோவிலிருந்தும் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நான்காம் எண் அணு உலையில் இருந்த யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள் உருகி வெப்பம் வெளியேறி இருக்கலாம் எனவும் இதுவே அதிக கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை டோக்கியோ மின்சக்தி நிபுணர்கள் கருத்து வெளியிடுகையில்;ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி போரிக் அமிலத்தை அணு உலையில் ஊற்றி அதன் வெப்பத்தை தணிக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு, சுனாமியை அடுத்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவி வருகின்றது.அத்துடன் அணு உலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் எந்தளவுக்கு நேர்ந்துள்ளது என்று குறிப்பாக கூறமுடியாது என கூறியுள்ள நிபுணர்கள் அதில் துவாரங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது உருகி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
அணு உலைகளிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வெளியேறியுள்ளனர்.
இதேவேளை 3 ஆம் எண் அணு உலையில் இருந்து புகை மேலெழுந்து வருவதாகவும் கடந்த இரு தினங்களில் இரண்டாவது தடவையாக நான்காம் அணு உலை வெடித்து தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இப்பகுதியில் நான்கு தடவைகள் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிச்டர் என்று கூறப்பட்ட போதும் அது 9 ரிச்டர் என தற்பொழுது கூறப்படுகிறது.இதனிடையே கதிர்வீச்சு தொடர்பில் ஜப்பான் முறையான தகவல்களை வெளியிடவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நேற்று புதன்கிழமை ஜப்பானிய அமைச்சரவை செயலர் யூக்சியோ எடோனோ கருத்து வெளியிடுகையில்; புகுஷிமா அணு உலைப்பகுதியில்கடமையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்தும் வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 50 ஊழியர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.அதேவேளை தற்பொழுது அணுக் கதிர்வீச்சு அளவு குறைந்து வருவதாகவும் எடோனோ மேலும் தெரிவித்தார். இதேவேளை கியூடோ செய்திச்சேவை தகவலின்படி அணு உலைகள் கொதித்துக் கொண்டிருப்பதால் மேலும் கதிர்வீச்சு அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அணு உலைகள் வெடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடல் நீரையும் போரிக் அமிலத்தையும் ஹெலிகொப்டரிலிருந்து ஊற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல் _
##* ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பிரான்ஸ் வரை பரவிய ஜப்பானிய கதிர்வீச்சு
» காற்றின் கோரம்....
» இங்கிலாந்தில் 20 அழகிகள் மூலம் உளவு பார்த்த ரஷ்யா
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
» காற்றின் கோரம்....
» இங்கிலாந்தில் 20 அழகிகள் மூலம் உளவு பார்த்த ரஷ்யா
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|