சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Khan11

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Go down

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by rammalar Sat 27 Apr 2024 - 11:05

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Sup10



டெல்லி: 
மனைவிக்கு அவரது குடும்பத்தினர் கொடுக்கும் நகை, பணம் 
உள்ளிட்ட சீதனங்களில் கணவர் எவ்வித உரிமையும் கோர 
முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


பொதுவாக நமது நாட்டில் திருமணத்தின் போது பெண்களுக்கு 
அவர்களின் குடும்பத்தில் இருந்து சீதனம் வழங்குவார்கள். 
பெண்களுக்கு இந்த சீதனம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான 
சூழல்களில் இதை கணவன்மார்களே வைத்திருப்பார்கள்.


உரிமை இல்லை: இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச 
நீதிமன்றம் இப்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
அதாவது மனைவிக்குச் சீதனமாகத் தரப்படும் பொருட்களின் மீது 
கணவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று உச்ச 
நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


குடும்பத்திற்குக் கஷ்டம் ஏற்படும் போது கூட பெண்களுக்குச் 
சீதனமாகத் தரப்படும் பொருட்களில் கணவரால் உரிமை கோர 
முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


தனது தங்கத்தைக் கணவர் முறைகேடாக பயன்படுத்தி
விட்டதாகப் பெண் அளித்த புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த 
உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த பெண்ணிடம் எடுத்த
 தங்கத்திற்கு ஈடாக ₹25 லட்சத்தை அவருக்கு இழப்பீடாக 
வழங்கவும் அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


மனைவிக்கு வரும் சீதனத்தை அவர்களிடமே தருவது 
கணவன்மார்களின் தார்மீகக் கடமை என்றும் நீதிமன்றம் 
குறிப்பிட்டது.


என்ன வழக்கு: 
திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் 
தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் 
சீதனமாக வழங்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். 


திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக 
வைப்பதாகக் கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை எ
ல்லாம் வாங்கியுள்ளார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் 
கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்டதற்கு அப்போது 
தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் 
செய்துள்ளார்.


இருப்பினும், தனது கணவரும் மாமியாரும் தனக்குச் சீதனமாக 
வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார 
சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதே அந்த 
பெண் தொடர்ந்து வழக்கு.


நீதிமன்றங்கள்: கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த 
குடும்பநல நீதிமன்றம், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும் 
அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாகத் 
தீர்ப்பளித்தது. 


இருப்பினும், கணவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
அதில் தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த 
பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் 
தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


சுப்ரீம் கோர்ட்: 
இருப்பினும், அந்த பெண் கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் 
கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த போது தான் 
சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணுக்கு அவரது 
குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின் 
சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு 
உரிமையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி 
இருக்கிறது.


மேலும், கேரள ஐகோர்ட் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. 
திருமணத்தில் நம்பிக்கையும், பரஸ்பர புரிதலும் அவசியம் என்றும், 
ஒரு பெண் தன் கணவனை ஆரம்பத்திலிருந்தே நம்பவில்லை என்று 
கருதுவது சாத்தியமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


இதைப் புரிந்து கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் 
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


25 லட்சம்: அந்த பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்ற 
போது நகைகளை எடுத்துச் சென்றது புகைப்படங்கள் மூலம் 
நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் 
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும் இந்திய அரசியலமைப்புச் 
சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் 89 சவரன் தங்கத்திற்கு நிகராக 
ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.


-விக்னேஷ்குமார்- தமிழ் ஒன் இந்தியா & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum