Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
Page 1 of 1
அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
-----------
அழுதால் அவர்கள் கோழை, பெண்கள்தான் அழுவார்கள்,
அழுகை என்பது இயலாமை, அடிக்கடி அழுபவர்கள் மனதளவில்
மிகவும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றுதான்
இதுவரை நமக்கு சொல்லப் பட்டிருக்கும். ஆனால், உண்மை அது
இல்லை.
சிரிப்பு, கோபம், உறக்கம், அமைதி, வலி போன்றுதான் அழுகையும்
ஓர் உணர்வு. அதை அடக்கிவைக்கத் தேவை இல்லை. எப்படி நமக்கு
அடிபட்டால் மருந்து தடவுகிறோமோ அதேபோலதான் அழுகையும்.
பல மன வலிகளுக்கு அழுகைதான் மருந்தாகிறது.
ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்று
சொல்வதைக் கேட்கும் போதெல்லாம், ஆண்கள் மனதளவில்
வலிமை குறைந்துப்போவதற்குக் காரணம் அவர்கள் துன்பங்களில்
கூட அழுவதற்கு தயங்குவதுதான்.
அடக்க முடியாத மன அழுத்தம், வாழ்க்கை சிக்கல்களில் தலை
வெடித்துவிடும்போல தோன்றும்போது சத்தமாக கத்தி
அழவேண்டும்போல இருக்கும்போது அழுவதில் தவறேதும் இல்லை.
அப்படி அழுது முடிக்கும்போது மனபாரம் பெருமளவில்
குறைந்திருப்பதையும், மனம் இலகுவானதையும் நிச்சயமாக உணர
முடியும்.
அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது, இனி வாழ வழியே இல்லை
என தோன்றும் நிலைகளில்கூட அழத் தோன்றினால் அழுதுவிட்டு
பார்த்தால், தெளிவான மனநிலையுடன் அசாதாரணமான திடமான
மன வலிமையுடன் மீண்டு விடுவோம்!
சிறு குழந்தைகள் அழும்போது, பெண்ணைப்போல அழாதே, அழுவது
கோழைத்தனம் நீ ஒரு வீரன் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காதீர்கள்.
வீரனும் அழலாம் தவறில்லை. அழத் தோன்றினால் அழுத்துவிடு
பரவாயில்லை. ஆனால், அழுது முடித்து உன் மனநிலை சீரானதும்
சிந்தித்து முடிவெடு என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
உங்களிடம் யாரேனும் பிரச்னையைச் சொல்லி அழுதால்
அவர்களைத் தடுக்கவேண்டாம். நன்றாக அழு. நான் இருக்கிறேன்.
பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் சொல்லுங்கள்.
அவர்கள் அழுத்து முடித்த
பின்னர் அவர்களுக்கு என்ன பிரச்னை எனக் கேளுங்கள். அவர்கள்
உங்களிடம் அறிவுரை கேட்டால், உன் மனம் சொல்வதை தைரியமாய்
செய் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுங்கள்!
இங்கு பலருக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது பணமோ பொருளோ
இல்லை. ஆறுதலான வார்த்தைகள்தான்.
நீங்கள் அடிக்கடி அழுபவராக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர் கள், தைரியமானவர்கள்,
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள்
என்பதை எண்ணி பெருமைகொள்ளுங்கள்.
சோகங்களில் மட்டுமல்ல, சில சந்தோஷமான தருணங்களில்கூட
நம்மை அறியாமல் அழுகை வந்துவிடும். எதிர்பாராத நேரத்தில்
கிடைக்கும் மகிழ்ச்சிகூட கண்களைக் கலங்க வைக்கும். இதற்கு
காரணம் அதீத மகிழ்ச்சிதான்.
அதீத சோகம் மட்டுமல்ல, அதீத மகிழ்ச்சியும் அழுகையை தரும்.
அதிகப்படியான கோவத்தில் கூட சிலர் அழுவதுண்டு. அப்படி
அழுபவர்கள் உண்மையில் மனது தூய்மையானவர்களாகவும்,
உண்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுகள்
குறிப்பிடுகின்றன.
துக்கம் தொண்டையை அடைக்கும் உணர்வு வரும்போதெல்லாம்
நிச்சயமாக கண்ணீர் வரும். அப்படி வரும்போது கட்டுப்படுத்தி அடக்கி
ஆள வேண்டாம். மாறாக கண்ணீர் வழிந்தோடட்டும். அந்தக்
கண்ணீரோடு நம் கவலைகளும், மன பாரங்களும் வழிந்தோடி
மறையட்டும்.
ஆகவே, இனி நாம் அழுவதை இயலாமை என கருதாமல் மனதின்
வலிகளுக்கு மருந்தாக நினைப்போம்.
-
-மரியசாரா - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24676
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
» சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
» அழுகை
» அழுகை
» குழந்தையின் அழுகை
» சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
» அழுகை
» அழுகை
» குழந்தையின் அழுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|