சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Khan11

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

2 posters

Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 6:46

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Large_143951
சென்னை : ஆந்திராவில் 5 வயதில் காணாமல் போன சிறுவன், 16 ஆண்டுகளுக்கு பின், இளைஞனாக பெற்றோரிடம் சேர்ந்த ருசிகர சம்பவம் நேற்று சென்னையில் நடந்தது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மெகபூப்நகர் ஆலம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் புரான்(56)- சுபேதா பேகம்(50). இவர்களது மகன் சபீர், கடந்த 94ம் ஆண்டு, ஐந்து வயதான நிலையில், நண்பர்களுடன் விளையாடிய போது, காணாமல் போய்விட்டான். சபீரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆந்திராவில் காணாமல் போன சிறுவன் சபீர், ரயில் மூலம் சென்னை வந்துள்ளான். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்ட பெண் போலீஸ் ஒருவர், குழந்தைகள் காப்பகத்தில் அவனைச் சேர்த்தார். காப்பகத்தில் அலீம் என்ற பெயரில் தங்கியிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின், அங்கிருந்து வெளியேறி சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் தோல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியில் மாதம் 3,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து, நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அதே கம்பெனியில் பணிபுரியும்,"சூப்பர்வைசர்' சுரேஷிடம், "ஐயப்பன் கோவிலுக்கு நானும் உங்களுடன் மாலை போட விரும்புகிறேன்' என, அலீம் கூறினார். "வேறு மதத்தில் பிறந்த நீ எதற்கு அய்யப்பனுக்கு மாலை போட வேண்டும்?' என, சுரேஷ் கேட்டதற்கு, "சிறு வயதில் என் தாய் - தந்தையை பிரிந்து சென்னை வந்து விட்டேன். பிரிந்து போன பெற்றோரை மீண்டும் கண்டுபிடிக்க ஐயப்பன் உதவ வேண்டும் என்பதற்காகவே மாலை போட விரும்புகிறேன்' என, கூறினார்.

நண்பரான அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் அரிமா சங்க பிரதிநிதிகள் உதவியுடன், அலீமின் பெற்றோர் குறித்து தகவலறிய, ஆந்திராவில் உள்ள அரிமா சங்க செயலர் ஒருவர் உதவியை சுரேஷ் நாடினார். அவர்களிடம் அலீம் பற்றிய அடையாளம் மற்றும் கிராமத்தின் பெயரை தெரிவித்தனர். அதன் பேரில், ஆந்திராவில் உள்ள, அலீமின் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன மகனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் பெற்றோர் கட்டித் தழுவினர். அலீமின் பெற்றோருக்கு தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகள் தெரியும். ஆனால், அலீமுக்கு தமிழ் மட்டுமே தெரியும். இதனால், அவர்கள் மனம் விட்டு பேச முடியாமல் தவித்தனர்.

அலீம் நிருபர்களிடம் கூறியதாவது: என் சொந்த ஊரிலிருந்து பெற்றோரை பிரிந்து, எப்படியோ சென்னை வந்துட்டேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் இருப்பவர்கள் உதவியுடன் இன்று என் பெற்றோரை சந்தித்துள்ளேன்; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் இடது கையில் கட்டை விரலில் கூடுதலாக, ஒரு விரல் உள்ளது. எனக்கு ஆறு விரல்கள் உள்ளதை அடையாளமாக தெரிவித்திருந்தேன். அதை வைத்து என் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக பிரிந்திருந்த, என் அப்பா - அம்மாவை மீண்டும் சந்தித்துள்ளேன். என் பெற்றோருக்கு தமிழ் தெரியாததால், அவர்களிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. என் பெற்றோர் இப்போது ரொம்ப கஷ்டத்தில் இருப்பதால், சென்னையிலேயே தங்கி வேலை செய்து, அவர்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்ப விரும்புகிறேன். இவ்வாறு அலீம் கூறினார். அலீமை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்களுடன் பேச வைக்க பெற்றோர் விரும்பினர். ஆனால், சபரிமலைக்கு போய் வந்த பின், ஊருக்குச் செல்ல விரும்புவதாக அலீம் கூறினார். இதையடுத்து, பெற்றோரை அலீம் தங்கிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

நன்றி தினமலர் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by நண்பன் Sun 12 Dec 2010 - 10:35

மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 14:14

ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .

தங்களின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by நண்பன் Sun 12 Dec 2010 - 14:19

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .

தங்களின் மறுமொழிக்கு நன்றி

எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 14:24

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .

தங்களின் மறுமொழிக்கு நன்றி

எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:
உங்களுக்கும் அந்த உண்மை தெரிந்து விட்டதா. :lol:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by நண்பன் Sun 12 Dec 2010 - 14:25

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .

தங்களின் மறுமொழிக்கு நன்றி

எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:
உங்களுக்கும் அந்த உண்மை தெரிந்து விட்டதா. :lol:

நாங்க யாரு மாமு சும்மா அதிருதுல்ல ஹா ஹா

நாங்க புறாவுக்கு வேணா அத நான் சொல்லக் கூடாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம் Empty Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum