Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
கைது செய்த ராகுலை விடுவித்தது உத்திரபிரதேச பொலிஸ்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கைது செய்த ராகுலை விடுவித்தது உத்திரபிரதேச பொலிஸ்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விவசாயிகள் நிலம் அதி விரைவு சாலை போடுவதற்காக கையகப்படுத்தப்பட்டது.
அந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார்.
விவசாயிகளோடு அமர்ந்து தர்ணா செய்தார். பொலிசார் பல தடவை பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்து சொன்ன பிறகும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் உத்தரபிரதேச மாநில பொலிசார் ராகுல்காந்தியை இரவு 11 மணிக்கு கைது செய்தனர். ராகுல் காந்தியை பொலிசார் வானில் ஏற்றி அழைத்து சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக இருந்தது. அவர் இன்று மாஜிஸ் திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அங்கும் - இங்குமாக அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு கஸ்னா பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அங்கு பொலிஸ் காரர்களிடம் அவர் எந்த அடிப்படையில் என்னை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு பொலீசார் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியை சொந்த பிணையில் விடுவிப்பதாக பொலிசார் தெரிவித்தார்கள். அதை ராகுல் ஏற்றுக் கொண்டதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
ராகுல்காந்தியை உத்தர பிரதேச மாநில பொலிசார் தங்களது பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இரவு 2.15 மணி அளவில் அவர் சாரை காலேகான் என்ற பகுதியில் இறங்கி விடப்பட்டார். இதைத் தொடர்ந்து ராகுல் கைதான பிறகு நிலவிய 3 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. ராகுலுடன் கைதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா, காங்கிரஸ் எம்.பி.ராஜ்ப்பர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போது திக்விஜய்சிங் கூறியதாவது, விவசாயிகள் பிரச்சினைக்காக சியை செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாயாவதி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பட்டா பரகலில் கூடுதல் இழப்பீடு கேட்ட விவசாயிகள் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய மனித உரிமைக் கொமிஷன் விசாரிக்க வேண்டும். ராகுலை கைது செய்ததற்காக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
மாயாவதி அரசு எல்லை மீறி நடந்து கொள்கிறது. ராகுல்காந்தி 144 தடை உத்தரவை மீறி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் போராட்டத்தை தொடங்கிய பிறகே இந்த தடை உத்தரவை அவசரம், அவசரமாக பிறப்பித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. நாங்கள் நடத்தியது அமைதியான போராட்டம், விவசாயிகளுடன் அமர்ந்து இருந்த போது ராகுல் பேசக் கூடவில்லை. விவசாயிகளின் போராட்டம் மாயாவதி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றுதிக் விஜய்சிங் தெரிவித்தார்.
ராகுல்காந்தி கூறியதாவது, மாயாவதி அரசு விவசாயிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. பெண்கள், இளைஞர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டுள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக உள்ளது மாயாவதி தன் சொந்த மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல்காந்தி, திக்விஜய்சிங் குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் மாயாவதி பதில அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராகுல்காந்தி ஏழை - எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் தலைவர் அல்ல. விவசாயிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
ராகுல்காந்தி மீது தடையை மீறியதற்காக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் போராட்டம் நடத்த வரும் முன்பே தடை உத்தரவு அமலில் உள்ளது என்று மாயாவதி தெரிவித்தார்.
அந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார்.
விவசாயிகளோடு அமர்ந்து தர்ணா செய்தார். பொலிசார் பல தடவை பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்து சொன்ன பிறகும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் உத்தரபிரதேச மாநில பொலிசார் ராகுல்காந்தியை இரவு 11 மணிக்கு கைது செய்தனர். ராகுல் காந்தியை பொலிசார் வானில் ஏற்றி அழைத்து சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக இருந்தது. அவர் இன்று மாஜிஸ் திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அங்கும் - இங்குமாக அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு கஸ்னா பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அங்கு பொலிஸ் காரர்களிடம் அவர் எந்த அடிப்படையில் என்னை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு பொலீசார் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியை சொந்த பிணையில் விடுவிப்பதாக பொலிசார் தெரிவித்தார்கள். அதை ராகுல் ஏற்றுக் கொண்டதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
ராகுல்காந்தியை உத்தர பிரதேச மாநில பொலிசார் தங்களது பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இரவு 2.15 மணி அளவில் அவர் சாரை காலேகான் என்ற பகுதியில் இறங்கி விடப்பட்டார். இதைத் தொடர்ந்து ராகுல் கைதான பிறகு நிலவிய 3 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. ராகுலுடன் கைதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா, காங்கிரஸ் எம்.பி.ராஜ்ப்பர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போது திக்விஜய்சிங் கூறியதாவது, விவசாயிகள் பிரச்சினைக்காக சியை செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாயாவதி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பட்டா பரகலில் கூடுதல் இழப்பீடு கேட்ட விவசாயிகள் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய மனித உரிமைக் கொமிஷன் விசாரிக்க வேண்டும். ராகுலை கைது செய்ததற்காக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
மாயாவதி அரசு எல்லை மீறி நடந்து கொள்கிறது. ராகுல்காந்தி 144 தடை உத்தரவை மீறி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் போராட்டத்தை தொடங்கிய பிறகே இந்த தடை உத்தரவை அவசரம், அவசரமாக பிறப்பித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. நாங்கள் நடத்தியது அமைதியான போராட்டம், விவசாயிகளுடன் அமர்ந்து இருந்த போது ராகுல் பேசக் கூடவில்லை. விவசாயிகளின் போராட்டம் மாயாவதி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றுதிக் விஜய்சிங் தெரிவித்தார்.
ராகுல்காந்தி கூறியதாவது, மாயாவதி அரசு விவசாயிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. பெண்கள், இளைஞர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டுள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக உள்ளது மாயாவதி தன் சொந்த மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல்காந்தி, திக்விஜய்சிங் குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் மாயாவதி பதில அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராகுல்காந்தி ஏழை - எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் தலைவர் அல்ல. விவசாயிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
ராகுல்காந்தி மீது தடையை மீறியதற்காக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் போராட்டம் நடத்த வரும் முன்பே தடை உத்தரவு அமலில் உள்ளது என்று மாயாவதி தெரிவித்தார்.
Similar topics
» பணமோசடி முயற்சி: பொலிஸ் அதிகாரி கைது
» அரசை கவிழ்க்க சதி துருக்கியில் பல பொலிஸ் அதிகாரிகள் கைது
» ஜெரூசலம் தலைமை முப்தி இஸ்ரேல் பொலிஸ் கைது
» பாஸ்போர்ட் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது _
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
» அரசை கவிழ்க்க சதி துருக்கியில் பல பொலிஸ் அதிகாரிகள் கைது
» ஜெரூசலம் தலைமை முப்தி இஸ்ரேல் பொலிஸ் கைது
» பாஸ்போர்ட் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது _
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|