Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
இன்றைய ஹதீஸ் (20-05-2011)
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ் (20-05-2011)
ஹதீஸ் எண் : 12
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம். சுpல நபர்களோடு எங்களுடன் அபூபக்கருக்கும், உமரும் இருந்தனர். எங்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் திரும்பிவர தாமதமானது. எங்களது எதிரிகளினால் அவர்கள் சங்கடப்படுத்தப்படுவார்களோ எனப் பயந்து திடுக்கமுற்று எழுந்தோம். அவ்வாறு திடுக்கிட்டவர்களில் முதலாமவனாக நான் (அபூஹுரைரா) இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை தேடிக்கொண்டு பனின்னஜ்ஜார் கிளையிலுள்ள அன்சாரி ஒருவருக்குரிய தோட்டத்தை வந்து அடைந்தேன். அதற்கு எங்கேயும் வாசல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. வேலியில் இருந்த கிணற்றிலிருந்து கால்வாய் ஒன்று சுவற்றின் துவாரத்தின் வழியாக நுழைவதைக் கண்டேன். குள்ளநரியைப்போன்று என்னை ஒடுக்கிக்கொண்டு (அதில் நுiழுந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தடைந்தேன். “அபூஹுரைராவா? ” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம் என்றேன். ‘என்ன செய்தி?‘ எனக் கேட்டார்கள். “எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து சென்ற நீங்கள் (திரும்பி) வரத் தாமதமானதால் உங்களுக்கு, இணைவைப்பவர்களால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு இருக்குமோ! என்று நாங்கள் பயந்தோம். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நான் முதலாமவன். ஆகவே இந்த தோட்டத்திற்கு வந்து குள்ளநரி ஓடுங்குவது போன்று ஓடுங்கி உள்ளே நுழைந்து விட்டேன். ஜனங்களெல்லாம் எனக்கு (சுவற்றிற்கு) அப்பால் உள்ளார்கள். ‘அபூஹுரைராவே!‘ என அழைத்து அவர்களது இரு காலணிகளையும் (தம்மைப் பார்த்ததற்கு அடையாளமாக) கொடுத்து இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்வீராக! வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாறுமில்லை என்பதை மனதால் உறுதி கொண்டு சாட்சி கூறும் எவரையாவது நீர் இந்த சுவற்றுக்கப்பால் சந்தித்தால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக! என்றனர்.
(அதற்குப் பிறகு) முதலில் நான் சந்தித்த மனிதர் உமராவார். (உமர் அவர்கள் என்னைப் பார்த்ததும்) “அபூஹுரைராவே! இந்த இரு பாதஅணிகள் என்ன? ” என்று கேட்டார்கள். இவை இரண்டும் அல்லாஹ்வின் தூதருடைய காலணிகளாகும். இவ்விரண்டையும் கொடுத்து என்னை அனுப்பினார்கள். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என மனதால் உறுதிகொண்டு சாட்சி கூறுபவரை நான் சந்தித்தால் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவேன் என்றேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நடுமார்பில் அடிக்க நான் பின்புறமாக கிழே விழுந்தேன். “அபூஹுரைராவே! நீர் திரும்பிச்செல்லும் ” என்றனர். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்று அழுதவாறு சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அபூஹுரைராவே!’ உமக்கு என்ன நேர்ந்தது? என்றனர்.
“உமரை சந்தித்தபோது எதைக் கொண்டு செல்லுமாறு கூறினீர்களோ அதைத் தெரிவித்தேன். என் நடுமார்பில் ஒர் அடி அடித்தார். பின்புறமாய் நான் விழுந்துவிட்டேன்” ‘திரும்பிச் செல்’ என என்னிடம் அவர் கூறினார். உமர் அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்ய உம்மைத் தூண்டியது எது? ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய பெற்றோர் தங்களுக்கு அர்பணமாகட்டும். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என்பதை மனதில் உறுதிகொண்டு சாட்சி கூறும் யாரைச் சந்தித்தாலும் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவதற்கென்று அபூஹுரைராவிடம் தங்களது காலணிகளை கொடுத்தனுப்பினார்களா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்றனர். (அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) “அவ்வாறு தாங்கள் செய்ய வேண்டாம். காரணம் ஜனங்கள் அதையே சார்ந்து நின்றுவிடுவர். (ஆகவே) அவர்களை செயல்பட விடுங்கள் ” என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்களை(ச் செயல்பட) விட்டுவிடுங்கள் ” என்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாமாக கூறவில்லை, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுவந்துதான் கூறுகிறார்கள் என்பதற்கும், அக் காலணிகள் இல்லாமலே அவர்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பினும், அக் காலணிகளை பார்ப்பவர்களின் மனதில் இது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடையது தான், ஆகவே அவரின் கூற்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றேதான் என்பது மனதில் பதிவதற்காகவும் இவ்வாறு கொடுத்தனுப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம். சுpல நபர்களோடு எங்களுடன் அபூபக்கருக்கும், உமரும் இருந்தனர். எங்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் திரும்பிவர தாமதமானது. எங்களது எதிரிகளினால் அவர்கள் சங்கடப்படுத்தப்படுவார்களோ எனப் பயந்து திடுக்கமுற்று எழுந்தோம். அவ்வாறு திடுக்கிட்டவர்களில் முதலாமவனாக நான் (அபூஹுரைரா) இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை தேடிக்கொண்டு பனின்னஜ்ஜார் கிளையிலுள்ள அன்சாரி ஒருவருக்குரிய தோட்டத்தை வந்து அடைந்தேன். அதற்கு எங்கேயும் வாசல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. வேலியில் இருந்த கிணற்றிலிருந்து கால்வாய் ஒன்று சுவற்றின் துவாரத்தின் வழியாக நுழைவதைக் கண்டேன். குள்ளநரியைப்போன்று என்னை ஒடுக்கிக்கொண்டு (அதில் நுiழுந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தடைந்தேன். “அபூஹுரைராவா? ” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம் என்றேன். ‘என்ன செய்தி?‘ எனக் கேட்டார்கள். “எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து சென்ற நீங்கள் (திரும்பி) வரத் தாமதமானதால் உங்களுக்கு, இணைவைப்பவர்களால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு இருக்குமோ! என்று நாங்கள் பயந்தோம். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நான் முதலாமவன். ஆகவே இந்த தோட்டத்திற்கு வந்து குள்ளநரி ஓடுங்குவது போன்று ஓடுங்கி உள்ளே நுழைந்து விட்டேன். ஜனங்களெல்லாம் எனக்கு (சுவற்றிற்கு) அப்பால் உள்ளார்கள். ‘அபூஹுரைராவே!‘ என அழைத்து அவர்களது இரு காலணிகளையும் (தம்மைப் பார்த்ததற்கு அடையாளமாக) கொடுத்து இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்வீராக! வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாறுமில்லை என்பதை மனதால் உறுதி கொண்டு சாட்சி கூறும் எவரையாவது நீர் இந்த சுவற்றுக்கப்பால் சந்தித்தால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக! என்றனர்.
(அதற்குப் பிறகு) முதலில் நான் சந்தித்த மனிதர் உமராவார். (உமர் அவர்கள் என்னைப் பார்த்ததும்) “அபூஹுரைராவே! இந்த இரு பாதஅணிகள் என்ன? ” என்று கேட்டார்கள். இவை இரண்டும் அல்லாஹ்வின் தூதருடைய காலணிகளாகும். இவ்விரண்டையும் கொடுத்து என்னை அனுப்பினார்கள். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என மனதால் உறுதிகொண்டு சாட்சி கூறுபவரை நான் சந்தித்தால் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவேன் என்றேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நடுமார்பில் அடிக்க நான் பின்புறமாக கிழே விழுந்தேன். “அபூஹுரைராவே! நீர் திரும்பிச்செல்லும் ” என்றனர். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்று அழுதவாறு சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அபூஹுரைராவே!’ உமக்கு என்ன நேர்ந்தது? என்றனர்.
“உமரை சந்தித்தபோது எதைக் கொண்டு செல்லுமாறு கூறினீர்களோ அதைத் தெரிவித்தேன். என் நடுமார்பில் ஒர் அடி அடித்தார். பின்புறமாய் நான் விழுந்துவிட்டேன்” ‘திரும்பிச் செல்’ என என்னிடம் அவர் கூறினார். உமர் அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்ய உம்மைத் தூண்டியது எது? ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய பெற்றோர் தங்களுக்கு அர்பணமாகட்டும். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என்பதை மனதில் உறுதிகொண்டு சாட்சி கூறும் யாரைச் சந்தித்தாலும் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவதற்கென்று அபூஹுரைராவிடம் தங்களது காலணிகளை கொடுத்தனுப்பினார்களா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்றனர். (அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) “அவ்வாறு தாங்கள் செய்ய வேண்டாம். காரணம் ஜனங்கள் அதையே சார்ந்து நின்றுவிடுவர். (ஆகவே) அவர்களை செயல்பட விடுங்கள் ” என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்களை(ச் செயல்பட) விட்டுவிடுங்கள் ” என்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாமாக கூறவில்லை, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுவந்துதான் கூறுகிறார்கள் என்பதற்கும், அக் காலணிகள் இல்லாமலே அவர்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பினும், அக் காலணிகளை பார்ப்பவர்களின் மனதில் இது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடையது தான், ஆகவே அவரின் கூற்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றேதான் என்பது மனதில் பதிவதற்காகவும் இவ்வாறு கொடுத்தனுப்பினார்கள்.
Re: இன்றைய ஹதீஸ் (20-05-2011)
சிறந்த ஹதீஸ் தோழரே தொடருங்கள் ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இன்றைய ஹதீஸ் 12-2-2011
» இன்றைய ஹதீஸ் 27-2-2011
» இன்றைய ஹதீஸ்(10-05-2011)
» இன்றைய ஹதீஸ் (24-05-2011)
» இன்றைய ஹதீஸ் (11-06-2011)
» இன்றைய ஹதீஸ் 27-2-2011
» இன்றைய ஹதீஸ்(10-05-2011)
» இன்றைய ஹதீஸ் (24-05-2011)
» இன்றைய ஹதீஸ் (11-06-2011)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|