சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

மனிதனின் மதிப்பு. Khan11

மனிதனின் மதிப்பு.

2 posters

Go down

மனிதனின் மதிப்பு. Empty மனிதனின் மதிப்பு.

Post by ஹம்னா Thu 16 Jun 2011 - 20:27

மனிதனின் மதிப்பு. Manithan


காட்டு வழியே ஒரு மனிதன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் மிகவும் கொடியவன். காட்டில் தங்கியிருந்த திருடர்கள் அவனைத் தாக்கி, அவன் உடைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றார்கள். படுகாயமுற்ற அந்த மனிதன் வீழ்ந்து அரை மயக்கமாகக் கிடந்தான்.

அந்தக் காட்டில் ஒரு நரியும் வசித்து வந்தது. அது மிகச் சிறப்பான நுண் உணர்வு மிக்கது. ஒருவரைப் பார்த்த உடனே அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் அறிந்துகொண்டுவிடும். அதற்கு இரண்டு குட்டிகள்.

அவை மூன்றும் அந்த நேரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தன. தங்கள் அம்மாவிற்கு முன்னால் ஓடி வந்த குட்டி நரிகள், விழுந்து கிடக்கும் அந்த மனிதனைப் பார்த்தன. விரைந்து சென்று தங்கள் அம்மாவிடம் விவரத்தைக் கூறின:

""சீக்கிரம் வாருங்கள் அம்மா. ஒரு மனிதன் மிகவும் ஆபத்தான நிலையில் கிடக்கிறான். நாம் அவனுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.''

அம்மா நரி, தன் குட்டிகளுடன் அந்த மனிதனின் அருகில் வந்தது. குட்டி நரிகளில் ஒன்று தன் அம்மாவிடம் சொன்னது:

""அம்மா, நாம் முதலில் இந்த மனிதனின் முகத்தில் நீர் தெளித்து இவன் மயக்கத்தைத் தெளியவைப்போம். பிறகு இவன் காயங்களுக்கு மூலிகைகளால் மருந்திடுவோம்.''

அவை பேசிக்கொள்வதையெல்லாம் அந்த மனிதன் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.


"இவனுக்கு நாம் உதவி செய்யலாமா கூடாதா என்று நான் உங்களுக்கு ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறேன். அது வரையில் பொறுத்திருங்கள்!'' என்றது அம்மா நரி. பிறகு அது நீண்ட நேரம் அந்த மனிதனைச் சுற்றிச் சுற்றி வந்து ஆராய்ந்தது. பின்பு தன் குட்டிகளிடம் சொன்னது:

""பிள்ளைகளே, இந்த மனிதன் எந்த உதவிக்கும் தகுதியானவன் அல்ல! இவனுக்கு நாம் உதவி செய்யக்கூடாது.''

குட்டிகள் கேட்டன: ""ஏன் அம்மா இவனுக்கு நாம் உதவி செய்யக்கூடாது. ஆபத்தில் இருப்பவனைக் காப்பாற்றவேண்டியது நம் கடமை அல்லவா?''

அம்மா நரி சொன்னது: ""என் பிள்ளைகளே! நான் இந்த மனிதனைப் பார்த்தே இவனது குணநலன்களையும், இவனது கடந்த கால வாழ்க்கையையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இவனுக்கு உதவி செய்து நாம் பிழைக்க வைத்தால் நாம் இந்தச் சமூகத்திற்குத் தீங்கு செய்தவர்கள் ஆவோம்.

ஏனென்றால், இவன் இதுவரை வாழ்ந்த காலத்தில் தன் காதுகளை நல்ல விஷயங்களைக் கேட்பதற்குப் பயன்படுத்தவில்லை. துன்பப்படுபவர்களையும் ஏழைகளையும் கண்டு இவன் தன் கண்களைத் திருப்பிக்கொண்டான். இவன் தலை நிறைய ஆணவம்தான் இருந்தது. மற்றவர்களை ஏமாற்றிய செல்வத்தால்தான் இவன் உண்டான். எவருக்கும் உதவி செய்ய இவன் தன் கால்களைப் பயன்படுத்தி எங்கும் செல்லவில்லை. இவன் கரங்களோ எந்த தானதருமங்களையும் செய்யவில்லை.

தன் சுயநலம் ஒன்றிற்காக மட்டும்தான் தன் உடலையும் அறிவையும் பயன்படுத்தினான். இவனைக் காப்பாற்றினால் மீண்டும் இவன் இதுபோன்றுதான் வாழ்வான். அதனால் நிறையப் பேருக்குத் துன்பம் விளையும். ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்கள்தான் அவனுக்கான மதிப்பைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் இந்த மனிதனுக்கு எந்த மதிப்பும் இல்லை.''

நரிகள் சென்றதும் அந்த மனிதன் கண்விழித்தான். நரியின் பேச்சு பேரிடியைப்போல அவனைத் தாக்கியது. மிருகங்கள்கூட தன்னைப் புறக்கணித்து கைவிட்டுச் செல்லும் அளவிற்கு தான் இழிந்தவனாக இருப்பதை நினைத்து பெரிதும் வேதனையுற்றான்..


தன் வாழ்க்கை சற்றும் பொருட்படுத்தத் தகுதியற்றதாக இருப்பதை அப்போதுதான் அவன் கண்ணீருடன் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்றான். போனதெல்லாம் போகட்டும். வருங்காலத்திலாவது எனக்கென்று மதிப்பை உருவாக்கிக்கொள்வேன் என்று உறுதிகொண்டிருந்தான் அவன்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மனிதனின் மதிப்பு. Empty Re: மனிதனின் மதிப்பு.

Post by kalainilaa Thu 16 Jun 2011 - 21:20

நன்றி பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum