Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
மதங்களைக்கடந்து மனித ஐக்கியம் காத்தான்குடியில் பல்சமய சமாதான பெருவிழா.....
3 posters
Page 1 of 1
மதங்களைக்கடந்து மனித ஐக்கியம் காத்தான்குடியில் பல்சமய சமாதான பெருவிழா.....
காத்தான்குடியில் பல் சமய சமாதானப் பெருவிழா வொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்திற் கான இலங்கை மதங்களின் பேரவை யினால் இச்சமாதான பெருவிழா நடாத்தப்பட்டது.
அனைத்து மதங்களையும் பிரதிபலிக் கும் வகையில் மிக சிறப்பாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த இன முரண்பாடு உக்கிர மாக இருந்த காலகட்டத்தில் மட்டக் களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டு திருமலை மறை மாவட்ட ஆயரின் அனுசரணையுடன் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பெளத்த மதத் தலைவர்கள் நால்வரும் ஒன்றுபட்டு பல் சமய ஒன்றியம் எனும் பெயரில் இழை ஆரம்பித்தனர்.
இந்த பல் சமய ஒன்றியத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமாதான சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முரண்பாடுகளின்றி மனித நேயம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ இவ் ஒன்றியம் வழி ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங் களிடையேயும், மதங்களிடையேயும் ஏற்படும் சிறிய முரண்பாடுகள் வளர்ந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தாது உடனுக்குடன் ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து மேலும் வளராமல் அமைதியைப் பேண இவ் ஒன்றியம் பிரதானமாக செயற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இயங்கி வந்த பல்சமய சமாதான ஒன்றியம் கடந்த 15-02-2010 இல் அகில இலங்கை பல் சமய சமாதான ஒன்றியத்துடன் இணைந்து தேசிய மன்றமாக செயற்படுகின்றது.
இந்த வகையில்தான் சமாதானத்திற் கான இலங்கை மதங்களின் பேரவை யுடன் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் இணைக்கப்பட்டு தற்போது இப்பெயரில் இவ் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.
இந்த பேரவையினால் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய வகையில் இந்த பல் சமய சமாதான பெருவிழா நடாத் தப்பட்டது.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத் தில் இப்பேரவையின் தலைவரும், மட்டு திருமலை மறை மாவட்ட ஆய ருமான கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் தலைமையில் வெகு சிறப்பாக இவ் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சமாதானத்திற்கான இலங்கை மதங்களின் பேரவை பொதுச் செயலாளரும், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி மெதனார்சிவே தம்மஜோதி தேரர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த பேரவையின் உப தலைவரும், இந்து சமய ஒன்றிய செயலாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத், மட்டு, திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் உட்பட சமய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கத்தான்குடி பள்ளிவாயில்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் சிவில் சமூக பிரதி நிதிகள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் ஆரம்பத்தில் மண்டப நுழைவாயிலில் இருந்து மத கலாசார மதத்தலைவர்கள் வரவேற்கப் பட்டனர்.
நான்கு மத அனுஷ்டானங்களுடன் விழா ஆரம்பமானது. விழாவின் தலைமையுரையினை விழாவின் தலை வர் மட்டு, திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை நிகழ்த்தினார். இதையடுத்து மதத்தலை வர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
ஆசியுரைகளை மட்டு. அம்பாறை மறைமாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஸன் தலைவர் சிறிமத் சுவாமி ஞானமயானந்த ஜீ மற்றும் பேரவையின் உப தலைவரும், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான மெளலவி ஏ. எம். அப்துல் காதர் (பலாஹி) மட்டக்களப்பு மங்களராமய விகாராதி பதி அம்பிட்டிய சுமணரத்தினதேரர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக சமாதான நடவடிக்கையில் தம்மை அர்ப்பணித்து சமாதானத்துக்காக பாடுபட்டு வரும் மாவட்ட சர்வமத தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களைப் பற்றிய கெளரவ உரைகள் இடம்பெற்றன.
ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைபற்றி அருட்தந்தை ஏ. ஏ. நவரட்ணமும், அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தைப் பற்றி கலாபூஷணம் மெளலவி எம். எச். எம். புஹாரி (பலாஹி) அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீயைப் பற்றி பேராசிரியர் கே. தட்சரை மூர்த்தி யும் கெளரவ உரைகளை ஆற்றினர்.
இதையடுத்து இவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்தினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கலில் ஹாஜியாரினால் மாலை அணிவிக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீக்கான கெளரவத்தை சுவாமி ஞான மயானந்த ஜீயிடம் வழங்கப்பட்டது.
இதில் மதங்களை பிரதி பலிக்கும் சிறப்பு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து மதங்களையும் பிரதிபலிக் கும் வகையில் மிக சிறப்பாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த இன முரண்பாடு உக்கிர மாக இருந்த காலகட்டத்தில் மட்டக் களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டு திருமலை மறை மாவட்ட ஆயரின் அனுசரணையுடன் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பெளத்த மதத் தலைவர்கள் நால்வரும் ஒன்றுபட்டு பல் சமய ஒன்றியம் எனும் பெயரில் இழை ஆரம்பித்தனர்.
இந்த பல் சமய ஒன்றியத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமாதான சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முரண்பாடுகளின்றி மனித நேயம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ இவ் ஒன்றியம் வழி ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங் களிடையேயும், மதங்களிடையேயும் ஏற்படும் சிறிய முரண்பாடுகள் வளர்ந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தாது உடனுக்குடன் ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து மேலும் வளராமல் அமைதியைப் பேண இவ் ஒன்றியம் பிரதானமாக செயற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இயங்கி வந்த பல்சமய சமாதான ஒன்றியம் கடந்த 15-02-2010 இல் அகில இலங்கை பல் சமய சமாதான ஒன்றியத்துடன் இணைந்து தேசிய மன்றமாக செயற்படுகின்றது.
இந்த வகையில்தான் சமாதானத்திற் கான இலங்கை மதங்களின் பேரவை யுடன் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் இணைக்கப்பட்டு தற்போது இப்பெயரில் இவ் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.
இந்த பேரவையினால் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய வகையில் இந்த பல் சமய சமாதான பெருவிழா நடாத் தப்பட்டது.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத் தில் இப்பேரவையின் தலைவரும், மட்டு திருமலை மறை மாவட்ட ஆய ருமான கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் தலைமையில் வெகு சிறப்பாக இவ் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சமாதானத்திற்கான இலங்கை மதங்களின் பேரவை பொதுச் செயலாளரும், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி மெதனார்சிவே தம்மஜோதி தேரர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த பேரவையின் உப தலைவரும், இந்து சமய ஒன்றிய செயலாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத், மட்டு, திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் உட்பட சமய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கத்தான்குடி பள்ளிவாயில்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் சிவில் சமூக பிரதி நிதிகள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் ஆரம்பத்தில் மண்டப நுழைவாயிலில் இருந்து மத கலாசார மதத்தலைவர்கள் வரவேற்கப் பட்டனர்.
நான்கு மத அனுஷ்டானங்களுடன் விழா ஆரம்பமானது. விழாவின் தலைமையுரையினை விழாவின் தலை வர் மட்டு, திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை நிகழ்த்தினார். இதையடுத்து மதத்தலை வர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
ஆசியுரைகளை மட்டு. அம்பாறை மறைமாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஸன் தலைவர் சிறிமத் சுவாமி ஞானமயானந்த ஜீ மற்றும் பேரவையின் உப தலைவரும், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான மெளலவி ஏ. எம். அப்துல் காதர் (பலாஹி) மட்டக்களப்பு மங்களராமய விகாராதி பதி அம்பிட்டிய சுமணரத்தினதேரர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக சமாதான நடவடிக்கையில் தம்மை அர்ப்பணித்து சமாதானத்துக்காக பாடுபட்டு வரும் மாவட்ட சர்வமத தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களைப் பற்றிய கெளரவ உரைகள் இடம்பெற்றன.
ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைபற்றி அருட்தந்தை ஏ. ஏ. நவரட்ணமும், அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தைப் பற்றி கலாபூஷணம் மெளலவி எம். எச். எம். புஹாரி (பலாஹி) அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீயைப் பற்றி பேராசிரியர் கே. தட்சரை மூர்த்தி யும் கெளரவ உரைகளை ஆற்றினர்.
இதையடுத்து இவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்தினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கலில் ஹாஜியாரினால் மாலை அணிவிக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீக்கான கெளரவத்தை சுவாமி ஞான மயானந்த ஜீயிடம் வழங்கப்பட்டது.
இதில் மதங்களை பிரதி பலிக்கும் சிறப்பு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Re: மதங்களைக்கடந்து மனித ஐக்கியம் காத்தான்குடியில் பல்சமய சமாதான பெருவிழா.....
தகவலுக்கு நன்றி ஜீ
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதங்களைக்கடந்து மனித ஐக்கியம் காத்தான்குடியில் பல்சமய சமாதான பெருவிழா.....
தகவலறிந்து ஆனந்தமாக இருக்கிறது பாகுபாடுகளற்ற கொண்டாட்டங்கள் யுத்தகாலத்துக்கு முன்னர் இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் யுத்தம் எமக்கு அவைகளை தடைசெய்திருந்தது
இப்போது நடக்கிறதென்று அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது
என்றும் இவ்வாறே தொடர்ந்திட பிரார்த்திப்போம்
இப்போது நடக்கிறதென்று அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது
என்றும் இவ்வாறே தொடர்ந்திட பிரார்த்திப்போம்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
» உல்பா தீவிரவாதிகளுடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்
» அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்
» ஆப்கானிஸ்தான் ராக்கெட் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர்கள் பலி சமாதான பேச்சுக்கு
» சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை
» உல்பா தீவிரவாதிகளுடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்
» அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்
» ஆப்கானிஸ்தான் ராக்கெட் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர்கள் பலி சமாதான பேச்சுக்கு
» சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|