சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! Khan11

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!

Go down

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! Empty விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!

Post by rammalar Mon 24 Jun 2024 - 6:35

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! 723305d8410769253fee26fa1d502a478a2c12876a86103d266775b5481ab78d

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்
-
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் 
ரேஞ்ச்சில் 'புஷ்பக்' என பெயரிடப்பட்டுள்ள ஏவுகலத்தை 
300 கிலோமீட்டர் வேகத்தில் இறக்கி பேராசூட் மூலம் வேகத்தை 
கட்டுப்படுத்தி இஸ்ரோ சாதனை படைந்துள்ளது.
-
மறு பயன்பாட்டு ஏவுகள சோதனை என்றால் என்ன?
-
பொதுவாக செயற்கைக்கோள்களையோ விண்கலன்களையோ 
மேலே அனுப்பும்போது ராக்கெட் மூலமாக வளிமண்டலத்திற்கு 
மேலே அனுப்பிவிட்டு, ராக்கெட் பாகங்கள் ஒவ்வொன்றாக 
கடலில் விழுந்துவிடும்.


இந்நிலையில் அனுப்பப்படும் ராக்கெட்டை வளிமண்டலத்தில் 
நிலை நிறுத்திய பின்னர் மீண்டும் ராக்கெட்டை பூமிக்கு கொண்டு 
வரும் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துவருகின்றனர். 
இது மறு பயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.


எப்படி பூமியின் ஈர்ப்பு விசையான 9.81 நியூட்டன் / மீட்டர் என்பதை 
தாண்டி வளிமண்டலத்திற்கு செல்வது எவ்வளவு கடினமோ, அதே
போன்று மீண்டும் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி பூமியில் 
பத்திரமாக தரவிறங்குவதும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. 


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய ஸ்பேஸ் யூனியன் போன்ற 
நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பம் குறித்தான ஆராய்ச்சியில் 
ஈடுபட்டு வருகிறது. இதில் எலான் மஸ்கின் ஸ்பேசிக்ஸ் நிறுவனம் 
தொடர்ச்சியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் மிக
முன்னேறிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
-
18 வருட கனவு திட்டம்!
-
2006ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவால் மறு பயன்பாட்டு ராக்கெட் 
என்கிற கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 
இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று 
விண்வெளியில் இருந்து திரும்பும் போது வாகனத்தின் வடிவமைப்பு 
இயக்கம் தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. 


கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் 
இன்று காலை 7:10 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது.


'புஷ்பக்' என்று பெயரிடப்பட்ட ஏவுகலம் இந்திய விமானப்படையின் 
சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்
பட்டது. 4.5 கிமீ தொலைவில் இருந்து ஓடுபாதையை கண்டறிந்து 
துல்லியமாக கிடைமட்டத்தில் தரையிறங்கியது.


புஷ்பக் விமானம் இன்று காலை 7:10 மணிக்கு 320 கிமீ வேகத்தில் தரை 
இறங்கியது. டச் டவுனுக்குப் பிறகு, வாகனத்தின் வேகம் அதன் பிரேக் 
பாராசூட்டைப் பயன்படுத்தி மணிக்கு 100 கிமீ வேகத்தில் குறைக்கப்
பட்டது, அதன்பிறகு தரையிறங்கும் கியர் பிரேக்குகள் வேகத்தைக் 
குறைப்பதற்கும் ஓடுபாதையில் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. 
இந்த செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கியாக செய்யப்பட்டதாக 
இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
750 விஞ்ஞானிகளின் உழைப்புக்கு கிடைத்த பலன்!
-
புஷ்பக் ஏவுகலத்தில் இனெர்ஷியல் சென்சார், ரேடார் அல்டிமீட்டர், 
ஃப்ளஷ் ஏர் டேட்டா சிஸ்டம், சூடோலைட் சிஸ்டம் மற்றும் NavIC போன்ற 
சென்சார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பரிசோனையில் 
மதிப்பிடப்பட்டது.


ஏற்கனவே இரண்டு முறை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு 
ஏவுகலம் சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக 
இன்றும் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் 
வாழ்த்து தெரிவித்தார்.


சுமார் 750 விஞ்ஞானிகள் இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தில் 
2006 லிருந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மதிப்பில் சுமார் 137 கோடி 
செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுகளில் 
மறு பயன்பாட்டு ஏவுகலம் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் அனுப்ப 
இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


-புதியதலைமுறை & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
» எய்ட்ஸ் நோய்க்கான புதியதடுப்பூசி தயார்: 32 நோயாளிகளுக்கு சோதனை வெற்றி.
» எதிரி ஏவுகணையை நடுவானில் அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி
» கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி
» துல்லியமாக இலக்கை தாக்கியது: இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum