Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்
2 posters
Page 1 of 1
போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்
கடந்த காலப் போர் காரணமாகக் கண்பார்வையை இழந்த அதேநேரம் கைகளையும் இழந்த மூன்று மாணவர்கள் இம்முறை யாழ்ப்பாணத்தில் கடும் சவால்களுடன் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை எழுதி வருகிறார்கள். |
கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவரும் இந்த மாணவர்கள் கைதடி நவீல்ட் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் பாடசாலையில் கற்றவர்கள். இவர்களுடன் மேலும் மூன்று பார்வையற்ற மாணவர்களும் நஃபீல்ட் பாடசாலையில் இருந்து சாதாரண தர பரீட்சை எழுதி வருகின்றனர். பாடசாலையின் 56 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இம்முறையே பார்வையற்ற மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சை எழுதியிருக்கிறார்கள் என்று அதிபர் வி.என்.மகேந்திரன் தெரிவித்தார். சிவயோகன் மாதினி, விக்கினராசா விஜயலக்ஷ்மி, கிளைமன் கிறிஸ்ரில்டா, பழனிமுத்து இராஜலக்ஷ்மி, விஜயகுமார் விஜயலாதன், சந்திரராசா விக்னேஸ்வரன் ஆகிய ஆறு மாணவர்களுமே தமது விசேட தேவை நிலையை சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக சாதாரண தரப் பரீட்சையை எழுதி வருகின்றனர். வன்னியின் இறுதிப் போரினுள் அகப்பட்ட இந்த மாணவர்கள் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டவர்கள். பின்னர் முகாம்களிலும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். வெடி குண்டுகள் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களால் இவர்கள் தமது பார்வையை இழந்ததுடன் அவயவங்களையும் இழக்க நேரிட்டது. எனினும் எதிர்காலத்தில் கல்வியே தமக்குத் துணை நிற்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டுள்ள இவர்கள் கடந்த 8 மாதங்களாக நஃபீல்ட் பாடசாலையில் கல்வி கற்று சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என்று அதிபர் தெரிவித்தார். தாம் பரீட்சையை நன்றாகவே செய்திருக்கின்றனர் எனத் தெரிவித்த இந்த மாணவர்கள் எனினும் வரலாறு மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் அதிகம் உள்ள பாடங்களில் தங்களால் விடையளிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்தனர். மாணவர்கள் மூவர் பார்வையற்றிருப்பதுடன் கைகளையும் இழந்திருப்பதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என இரண்டு மொத்தம் ஆறு மேற்பார்வையாளர்கள் உதவி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கேள்விகளை வாசித்துவிடுவார் மற்றையவர் மாணவர் வாயால் சொல்லும் பதிலை எழுதுவார். மாணவரின் பதில் ஒலிநாடாவில் பதிவு செய்யப்படும். விடைத்தாளுடன் சேர்த்து அதுவும் அனுப்பப்படும். கொழும்பில் இருந்து வந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் மாணவர்களை நேரில் பார்வையிட்டதன் பின்னர் இத்தகைய விடையளிக்கும் முறைக்கு அனுமதி வழங்கிச் சென்றனர் என மகேந்திரன் தெரிவித்தார். தாம் எதிர்காலத்தை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தாலும் தமது அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக மாணவர்கள் கவலைப்பட்டார்கள். இருப்பிடமும் உணவும் கிடைக்கின்றன. அதையும் தாண்டி அத்தியாவசியத் தேவைகள் பல இருக்கின்றன. எமது படிப்புக்கே மேலதிகத் தேவைகள் உள்ளன. இன்னும் நாம் விசேட தேவை உள்ளவர்கள் என்பதால் மற்றையவர்களின் உதவிகளைக் குறைத்து நாமே தனித்துச் செயற்படுவதற்கான கருவிகள் உபகரணங்கள் அதிகம் தேவையாக உள்ளன. எமது பொருளாதார நிலையில் அவற்றையெல்லாம் பெறமுடியாத நிலையிலேயே இருக்கிறோம் என்று தெரிவித்தார் மாணவி விஜயலக்ஷ்மி. பலபேர், தொண்டு நிறுவனங்கள் வந்து பார்த்துச் சென்ற போதும் இதுவரையில் தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய உதவிகள் தம்மை வந்தடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம். பி. வாழ்த்து
» போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
» தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம்.பி. வாழ்த்து
» க.பொ.த. விசேட பரீட்சை: 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்
» கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்
» போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
» தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம்.பி. வாழ்த்து
» க.பொ.த. விசேட பரீட்சை: 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்
» கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|