சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும். Khan11

வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்.

2 posters

Go down

வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும். Empty வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்.

Post by *சம்ஸ் Fri 24 Dec 2010 - 13:38

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியமான நோய்களில் ஒன்று வயிற்றுப்போக்கு ஆகும். இதனால் குழந்தை ஓயாமல் அழுதுகொண்டிருக்கும். உடனே கிராமமாக இருந்தால் தாய்மார்கள் உரம் விழுந்துவிட்டது என்று கூறி சேலையின் நடுவே போட்டு இரண்டு முனைகளையும் தூக்கிப்பிடித்துக்கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டுவார்கள். இன்னும் சிலர் தொக்கம் விழுந்திருக்கிறது என்று கூறி நாட்டு வைத்தியரிடம் சென்று தொக்கம் எடுப்பார்கள். இன்னும் சிலர் வயிற்றில் குடல் விழுந்திருக்கிறது, அதனால் தான் குழந்தை அழுகிறது என்று கூறி வயிற்றில் குடல் தட்டுவார்கள். இன்னும் சிலரோ அப்போதைக்கு திடீர் மருத்துவராக மாறி தன் அனுபவங்களைக் கூறி ஒரு வழி பண்ணிவிடுவர். இது போன்ற வேலைகளால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்காதது மட்டுமன்றித் தேவையற்ற பிரச்னைகள் குழந்தைக்கு ஏற்பட்டு மேலும் பல உபாதைகளில் கொண்டு போய்விடும்.

ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் அழுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று அறிந்து மருத்துவம் செய்பவர் முறையான மருத்துவர் மட்டுமே. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு சீதபேதி போன்றவை ஏன் ஏற்படுகின்றது? அதன் மூல காரணம் என்ன? அதனை எப்படித் தடுப்பது, அடுத்து வராமல் எப்படித் தற்காப்பது போன்ற செய்திகளை நம் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர். கண்ணன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வயிற்றுப் போக்கு என்றால் என்ன...?

இது எல்லோர்க்கும் தெரிந்ததுதான். தண்ணி தண்ணியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறைக்கும் மேலாக ஒரு குழந்தை மலங்கழித்தால் அது வயிற்றுப்போக்கு எனப்படும்.

சீதபேதி என்பது என்ன...?

அதே திரவத்தன்மையுடன் ரத்தம் மற்றும் சளிபோன்ற கோழைகளுடன் மலங்கழிப்பது சீத பேதி எனப்படும்.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..?

அடிக்கடி திரவமாக மலம் கழிவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துபோகும். சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள்கள் குறைந்துபோகும். இதனால் சத்துக்குறைந்து குழந்தை சவலையாகிவிடும். குழந்தைகள் சவலையாவதால் மிகுந்த பாதிப்பு உண்டாகும்.

இவை என்ன காரணங்களால் ஏற்படுகிறது?

இவை கீழ்கண்ட கிருமிகளால் ஏற்படுகிறது.

1. ரோட்டா வைரஸ்

2. நார்வால்க் வைரஸ்

3. கால்சி வைரஸ்

4. ஆஸ்டீரோ வைரஸ்

5. கொரோனா வைரஸ்

6. அடினோ வைரஸ்

7. இ கோலை

8. ஷிக்கல்லா

9. காலரா

10. டைபாய்டு பாக்டீரியா

11. கேம்பைலோ பாக்டர் கிளாஸ்டிரியம்

12. ஜியார்டி யாசிஸ்

13. அமீபியாசிஸ்

14. வயிற்றுப்புழுக்கள்

அதிகமான வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை...?

சுய நினைவில் மாற்றம்,

கண்கள் குழிவிழுதல்,

உமிழ் நீர் குறைந்து நாக்கு வறண்டுபோதல்,

தோல் சுருங்குதல் போன்றவை ஏற்படும்.

இதன் அறிகுறிகள் யாவை...?

மலத்தைப் பரிசோதிப்பது, தாதுப்பொருள்களின் அளவை அறிவது, சிறுநீர்ப் பரிசோதனை நிகழ்த்துவதன் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.

இதற்கான மருத்துவத் தீர்வு என்ன?

ORS எனப்படும் சோடியம் 3.5 கி/லிட்டர், சிட்ரேட் 2.9 கி/லிட்டர், பொட்டாசியம்.

1.5 கி/லிட்டர் குளுகோஸ் 20 கி/லிட்டர், நீர் 1 லிட்டர் கொண்ட உப்புக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.

ORS கொடுக்கும் முறை எப்படி...?

முதல் நான்கு மணி நேரத்திற்கு 75 மில்லி/கிலோ எடை உப்பு சர்க்கரை கரைசலைக் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டும்.

இந்தக் கரைசலை வீட்டில் தயாரிக்கலாமா...?

சர்க்கரை 40 கிராம், உப்பு 4 கிராம், தண்ணீர் 1 லிட்டர் கலந்த கரைசலாக இதைத் தயாரிக்கலாம்.

இவர்களுக்கான உணவு முறைகள் பற்றி விளக்கலாமா...?

பச்சிளம் குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கவும். குறிப்பிட்ட வயது வந்த குழந்தைகள் என்றால் சத்து நிறைந்த உணவு கொடுத்தல் போன்றவை இவர்களுக்கான உணவு முறைகளாகும்.

இதனைத் தடுக்கும் முறைகள் யாவை...?

தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தல், பாத்திரங்களை சுத்தமாக உபயோகித்தல், சுகாதரமான உணவு மற்றும் குடிநீர் பருகுதல், சாப்பிடுதவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவுதல், கழுவி சுத்திரிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், சுகாதாரமான முறையில் கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பழக்க வழக்கங்கள் மூலம் வயிற்றுப்போக்கைத் தடுக்கலாம்.

எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்று கண்டறிந்தால் அதற்கான முறையான மருத்துவத்தை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்வதே சிறந்ததாகும். மாறாக தொக்கம் தட்டுதல், குடல் விழுந்துள்ளது என்று குடல் தட்டுதல், ஓயாமல் குழந்தை அழுதால் அது வயிற்று வலியால் கூட இருக்கலாம் என்பதை அறியாமல் உரம் விழுந்துள்ளதாக எண்ணி சேலையில் உருட்டுதல் போன்றவைகளை இன்னும் தொடராதீர்கள். அதனால் குழந்தைக்கு பற்பல உடல் மன ரீதியான பாதிப்பு நிகழும். எனவே முறையான மருத்துவத்தால் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும். Empty Re: வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்.

Post by ஹம்னா Fri 24 Dec 2010 - 16:13

:!+: :!+: :”@:


வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum