Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
Page 1 of 1
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
கமலும் 'கிரேசி' மோகனும் இணைந்த பல படங்களில் ஆள்
மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று
நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும்.
ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று
சொன்னால் நம்புவீர்களா? அதுவும் 'நடிகர் திலகம்' நடிப்பில்?
சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' என்ற படம்தான் அது.
கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும்
நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப்
போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள
நகைச்சுவை படம் இது.
டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம்
செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால்
கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்
காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில்
ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன்.
டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி
கணேசனை அழைத்து தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள
சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம்,
நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட
டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக
நங்கையை திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.
இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின்
சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி
தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின்
எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள்.
அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய
அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில்
மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக்
கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க,
அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.
தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான்
மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன்
ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த
நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும்
கூத்துதான் மீதி கதை.
இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக்.
கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்
கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ்.
-
பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு.
இசை டி ஜி லிங்கப்பா.
பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி,
ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.
டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி
பாடிய 'ஜாலி லைப் ஜாலி லைப்' பாடல் பலரால் விரும்பப்பட்டது.
'மதுமலர் எல்லாம் புது மணம் வீச,' 'வெண்ணிலாவும் வானும் போலே'
போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.
சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன்,
மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக
சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும்,
தவிக்கும் காட்சி வெகு ஜோர்!
தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி
வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!
தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி
நன்றி- கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|