Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
பற்றுப் போடு... பறக்கும் தலைவலி
Page 1 of 1
Re: பற்றுப் போடு... பறக்கும் தலைவலி
தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால், அது தலையைச் சார்ந்த "தர்ப்பகம்' எனும் கபதோஷத்தின் சீற்றத்தினால் விளைந்ததாகக் கருதலாம். இந்தக் கபதோஷத்தின் தாக்கம் கூடினால், தலையில் நீர்க்கோர்வை, நீர் முட்டல், கண்ணீர் கசிதல், லேசான காய்ச்சல் போன்றவை தென்படும். அதற்கு ரேவல் சீனிக் கிழங்கு 100 கிராம்,வேப்பம் விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து,ஒன்றாக இடித்துச் சூர்ணம் செய்து, சிறு கண் சல்லடையில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
சுமார் 1-2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீரில் குழப்பி இரும்பு அல்லது ஸ்டீல் கரண்டியிலிட்டு, இளந்தீயில் சூடாக்கி,பொறுக்கும் சூட்டில் நெற்றி, நெற்றிப் பொட்டு முழுவதும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை போடலாம்.மண்டை நீரை வற்ற வைத்துத் தலைவலியைக் குறைத்துவிடும்.
அதிக வெயில், ரத்த அழுத்தம் அதிகமிருத்தல், உடல் சூட்டினால் அதிகத் தலைவலி, கடும்காய்ச்சலால் ஏற்படும் தலைவலி,கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது. அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும் நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை (நெல்லிமுள்ளி), நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம். சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு, அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும். நெற்றியிலும், உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும். பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.
வாயு தோஷத்தின் தனி ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில், வாசனைக் கோஷ்டம் அல்லது வெண்கோஷ்டம் சுமார் கட்டைவிரல் கனத்திற்குக் கெட்டியாக ஒரு துண்டம் எடுத்து, கல்லில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டரைத்து எடுத்த விழுது இரண்டு மூன்று சுண்டைக்காயளவு, நெற்றிப் பொட்டுப் பக்கத்தில் பற்றுப் போடவும். வாயுதோஷத்தின் தனி ஆதிக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, மாற்றி மாற்றி, விட்டுவிட்டு ஏற்படும் தலைவலிகளுக்குச் சிறந்த கைகண்ட மருந்து. இதைச் சுடவைத்தும் சுட வைக்காமலும் செüகர்யம்போல் பூசலாம்.
ஆக எந்தெந்த நிலைகளில் தோஷங்களில் சீற்றத்திற்கு ஏற்ப, மேலுள்ள பூச்சு மருந்துகளை உபயோகித்து நீங்கள் குணம் பெறலாம். ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸôயனம், அகஸ்திய ரஸôயனம் போன்ற சிறந்த மருந்துகளில் எது உங்களுக்கு உகந்ததோ, அதை ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி இரவில் படுக்கப் போகும் முன்பு சாப்பிடவும்.
சுமார் 1-2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீரில் குழப்பி இரும்பு அல்லது ஸ்டீல் கரண்டியிலிட்டு, இளந்தீயில் சூடாக்கி,பொறுக்கும் சூட்டில் நெற்றி, நெற்றிப் பொட்டு முழுவதும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை போடலாம்.மண்டை நீரை வற்ற வைத்துத் தலைவலியைக் குறைத்துவிடும்.
அதிக வெயில், ரத்த அழுத்தம் அதிகமிருத்தல், உடல் சூட்டினால் அதிகத் தலைவலி, கடும்காய்ச்சலால் ஏற்படும் தலைவலி,கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது. அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும் நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை (நெல்லிமுள்ளி), நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம். சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு, அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும். நெற்றியிலும், உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும். பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.
வாயு தோஷத்தின் தனி ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில், வாசனைக் கோஷ்டம் அல்லது வெண்கோஷ்டம் சுமார் கட்டைவிரல் கனத்திற்குக் கெட்டியாக ஒரு துண்டம் எடுத்து, கல்லில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டரைத்து எடுத்த விழுது இரண்டு மூன்று சுண்டைக்காயளவு, நெற்றிப் பொட்டுப் பக்கத்தில் பற்றுப் போடவும். வாயுதோஷத்தின் தனி ஆதிக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, மாற்றி மாற்றி, விட்டுவிட்டு ஏற்படும் தலைவலிகளுக்குச் சிறந்த கைகண்ட மருந்து. இதைச் சுடவைத்தும் சுட வைக்காமலும் செüகர்யம்போல் பூசலாம்.
ஆக எந்தெந்த நிலைகளில் தோஷங்களில் சீற்றத்திற்கு ஏற்ப, மேலுள்ள பூச்சு மருந்துகளை உபயோகித்து நீங்கள் குணம் பெறலாம். ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸôயனம், அகஸ்திய ரஸôயனம் போன்ற சிறந்த மருந்துகளில் எது உங்களுக்கு உகந்ததோ, அதை ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி இரவில் படுக்கப் போகும் முன்பு சாப்பிடவும்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|